Results 1 to 6 of 6

Thread: வெற்றியான தோல்வி...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    வெற்றியான தோல்வி...

    வெற்றியான தோல்வி...


    என் உலகம்
    உன்னால் சிருஷ்டிக்கப் படுகிறது
    எனக்கு இடம் இல்லாமலே....

    என் உடலின் வெப்பம்
    உன்னால் போக்கப் போட்டது
    என் உயிரின் அனுமதியில்லாமலே.....

    என் ப்ரார்த்தனைகள்
    எல்லாம் நிறைவேறுகிறது -
    நீ நன்றாக இருக்கிறாய்.

    என் காதல் கவிதைகள்
    எல்லாம் சிலாகித்துப் பேசப்படுகிறது -
    உன்னை மட்டும் சேரவில்லை.

    என் வெற்றிகள் எல்லாம்
    தோல்வியினால் மிதிக்கப்படுகிறது -
    சமர்பித்தது உன் காலடியில் தானே.

    என் நுரையீரல்
    இன்னமும் சுவாசிக்காமலே காத்திருக்கிறது -
    நீ விட்ட மூச்சுக் காற்றைத் தேடி.

    எல்லாம் நீ
    என்றிருந்த என்னை
    நீ எனக்குக் காட்டினாய் -
    என் பெயரிடப்பட்ட
    உன் குழந்தையை அழைத்து.

    உனக்குப் புரியாது,
    இதுவும் எனக்குத் தோல்வி தான் -
    பிரசவித்து வெளியேற்றி விட்டாய் என்னை.
    Last edited by அமரன்; 01-06-2007 at 08:15 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    நண்பரே:

    நல்ல கவிதை தந்தீர். வாழ்த்துக்கள்.

    ===கரிகாலன்
    Last edited by அமரன்; 01-06-2007 at 08:15 PM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நத்தையாய் நடந்து
    பெற்றதைக் காட்டியதும்...
    பேர் சொல்லி அழைத்ததும்
    தைத்த மனதில் வடியும்...
    ரத்தம் தீர்ந்தும் நிணம்...

    பாராட்டுகள் அறிவார்ந்த நண்பனுக்கு!
    Last edited by அமரன்; 01-06-2007 at 08:16 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    மறுபடியும் பிரசவித்து விட்டாள் கூடவே இருக்க வேண்டும் என்று....
    அருமை நண்பனே........
    Last edited by அமரன்; 01-06-2007 at 08:16 PM.

  5. #5
    இளம் புயல்
    Join Date
    18 Jun 2003
    Location
    Manama, Bahrain
    Posts
    399
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நெஞ்சை வருடிய வரிகள்

    பிரசவித்து வெளியேற்றிவிட்டாய் என்னை

    உண்மைதான். காதல் தோல்வி கொடியது வறுமையிலும் கொடிது

    ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன். உங்கள் கவிதையை வாசித்தபோது. என்னை விட வலிசுமந்தவராய் எழுதியுள்ளீர்கள். இதுவரை நான்தான் வலிகண்டவன் என எண்ணியிருந்தேன். இன்று உங்கள் வலிகண்டு என் வலி தாழ்வதை எண்ணுகின்றேன்

    நன்றி நண்பா

    ஒரு தோல்விதான் இன்னொரு வெற்றிக்கு அத்திவாரம்.

    ( எனது தோல்வி இன்று புதியதோர் பாதையை காட்டியது.)
    Last edited by அமரன்; 01-06-2007 at 08:17 PM.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன்..... இதுவரை நான்தான் வலிகண்டவன் என எண்ணியிருந்தேன். இன்று உங்கள் வலிகண்டு என் வலி தாழ்வதை எண்ணுகின்றேன்
    கவிதை எழுதுவதை ஒரு பொழுது போக்காகத் தான் கொண்டிருந்தேன். பின்னர், நம் மனதிலிருப்பதைக் கொட்டி, பிறருடன் பகிர்ந்து கொள்வதால், மனம் இலகுவாகி அமைதியடைகிறது என்பதையும் கண்டுகொண்டேன். அதனால் மனதில் tension, stress, இவையெல்லாம் உண்டாக்கி உபத்திரவம் செய்யாமலிருக்க, கவிதை, கதை, நகைச்சுவை,
    அல்லது ஏதாவது ஒரு விவாதத்தில் கலந்து கொள்வது நலம் பயக்கும். இதை நானாகச் சொல்லவில்லை. Stress Management for Senior Managers என்ற ஒரு கருத்தரங்கிற்கு, என்னையும் அனுப்பி வைத்தார்கள். அதில் கூறப்பட்ட பலவகையான வழிமுறைகளில், 'வேலை சம்பந்தப்படாத விஷயங்களைப் பற்றி நிறைய எழுதுங்கள், பிறர் யாருக்காவது வாசித்துக் காட்டுங்கள், இத்தகைய ஒத்த மனநிலையுடைய - எழுதுவது, பிறருடன் பகிர்ந்து கொள்வது, பிறரின் கருத்தை அறிவது, (அது உங்களுக்கு சாதகமாக இல்லாத பொழுதும் கூட), பிறர் எழுதியதற்குக் கருத்து கூறுவது - நண்பர்களுடன் நீங்கள் நடத்தும் இந்த கருத்துப் பரிமாற்றங்கள், அனுபவங்களைப் பகிர்தல் என்பவை நிறைய கற்றுக் கொடுக்கும், ஆறுதலைக் கொடுக்கும்.' தமிழ்மன்றம் இதைத் தான் செய்கிறது.

    இன்று உங்கள் பதிலைக் காணும் பொழுது, பிறர் மனதிற்கும் ஆறுதல் அளிக்கிறது என்பதைக் காணும் பொழுது இன்னமும் மகிழ்வு கூடுகிறது.

    மிக்க நன்றிகள், உங்கள் பதிலுக்கு.........
    Last edited by அமரன்; 01-06-2007 at 08:18 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •