Results 1 to 7 of 7

Thread: அக்கரை ஏக்கங்கள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர்
    Join Date
    06 Apr 2003
    Posts
    1,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0

    அக்கரை ஏக்கங்கள்

    ஒரு நண்பர் அனுப்பிய மின் மடலிலிருந்து


    * இங்கே
    நிலமை வேறு .......!

    * எங்காவது தமிழ்
    எழுத்துப் பலகை
    இருக்காதா.....?

    * தேடித்தவித்திருக்கிறேன்
    யாராவது தமிழ் பேச
    மாட்டார்களா?

    * வாய் பார்த்து
    ஏமாந்திருக்கிறேன்...

    * எங்காவது தமிழ்
    பேசுவது கேட்டுவிட்டால்
    என் அனுமதியில்லாமல்
    நீண்டு கொள்ளும்
    என் காது

    * படிக்க செய்தித்தாள்கள்
    தாமதமாய்த் தான் வரும்
    இணைய செய்திகளுக்கும்
    வழியில்லை - எனக்கு
    கணினி இயக்க தெரியாததால்....

    * தமிழ் தெரிந்தவர் எல்லாம்
    சொந்தக்காரராக சொல்லும்
    என் மனசு.....!

    * எதிரியானாலும்
    ஏளனமானாலும்
    தன்மானம் கழட்டி வைத்து
    தமிழ் கேட்டியிருக்கிறேன்

    * வடமொழிப்பாட்டுக்களிடையே
    தமிழ்பாட்டை மனதில்
    வைத்து விசிலடித்துக்
    கொண்டிருக்கிறேன்......

    * வண்டிப்பதிவெண் பார்த்து
    நிறுத்தி பேசி
    சொந்தம் வளர்த்திருக்கிறேன்.....

    * தமிழ் சோறு தேடியலைந்து
    கண்டுபிடித்து
    நண்பர்களை
    அழைத்துப் போய்
    மகிழ்ந்திருக்கிறேன்.....

    * புரியாத மொழி கேட்டு
    காது வறண்ட போது
    இளையராஜாவையும்
    ஜானகியையும்
    நண்பர்களிடம் சொல்லி
    ஒலி நாடாக்களாய்
    நாடு கடத்தி
    செவிக்கு இன்பம்
    வளர்த்திருக்கிறேன்

    * தொலைபேசி கட்டணம்
    பார்த்து பாசத்தைப்
    பங்கு போட்டபோது
    பரிதவித்துப்போயிருக்கிறேன்.......

    * நல்ல தமிழ் சாலை இல்லாத
    துக்கங்களை தொண்டைவரை
    வைத்து விக்கித்துப்
    போயிருக்கிறேன்.........

    * நான் ஆங்கிலத்தில் தான்
    பேச வேண்டும் என
    அறிவுறுத்திப் பேசுகிறார்கள்
    நண்பர்கள்....

    * அவர்களுக்கு என்ன தெரியும்
    மூச்சுத் திணறியவன்
    நானல்லவா......?

    * எனக்கல்லவா தெரியும்
    சுவாசத்தின் அருமை.....?
    Last edited by நிரன்; 06-01-2009 at 01:05 PM.
    இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
    ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
    - அன்புடன் லாவண்யா

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வட இந்தியா என்னும் வெளிநாட்டுக்குப் போய் அவதிப்படும்
    உங்கள் நண்பரின் ஆதங்கம்.... அருமையாய் வெளிப்பட்டிருக்கிறது
    மின்(கவிதை)மடலில்.
    நீரில் மூழ்குபவனுக்கு மூச்சின் மேல் வரும் மூர்க்கக்காதல் போல்....
    இல்லை என்று ஆகும்போது மொழிப்பற்றே வெறியாகிப்போகிறது....

    பாராட்டுகள்.....
    Last edited by நிரன்; 06-01-2009 at 01:05 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல கவிதை..
    தமிழகத்தை விட்டு வெளிவந்த
    தமிழ்ப்பற்றுள்ள
    அனைவரின் நிலமையும் இதுதான்..
    அழகாய் சுட்டிக் காட்டியமைக்குப் பாராட்டுக்கள்..
    Last edited by நிரன்; 06-01-2009 at 01:04 PM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    தமிழனின் மானம் காத்த கவிதையை தந்துள்ளீர்..

    நன்றி!!!!
    Last edited by நிரன்; 06-01-2009 at 01:04 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    அடடா எந்த காலம் இது ? இப்போ தான் டிஷ்பகவான் எல்லா இடத்திலேயும் வந்துட்டாரே லாவ் ?
    Last edited by நிரன்; 06-01-2009 at 01:04 PM.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அடடா எந்த காலம் இது ? இப்போ தான் டிஷ்பகவான் எல்லா இடத்திலேயும் வந்துட்டாரே லாவ் ?

    தேடுவது தமிழ்க்குளம்
    டிஷ் எல்லாம் கானல்நீர்

    மாமண்டூர் மோட்டலில் விருமாண்டி பாட்டு கேட்டால்..
    மரத்தில் பறித்த காய்

    இணையத்தில் இங்கிருந்து இறக்கிக் கேட்டால்
    டின்னில் வந்த காய்..
    Last edited by நிரன்; 06-01-2009 at 01:03 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    அருமையான ஆதங்கங்கள்.... நிறைய தடவை.....இந்த ஏக்கங்களை அனுபவித்தும் இருக்கிறேன்...... நன்றி லாவண்யா.........
    Last edited by நிரன்; 06-01-2009 at 01:03 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •