Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: கனவின் முகங்கள் - 3

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0

    கனவின் முகங்கள் - 3

    என் கனவில் வந்த ஒரு நிகழ்வை கவிதையாக்கும் முயற்சி. கவிதையாகமலும் போய் விடலாம் என்றாலும் சிறு முயற்சி...


    கனவின் முகங்கள்

    நெல்லைக்குள் புகுந்த தண்ணீர்
    நாம் சொந்த ஊருக்குப் போன போதும் வந்துவிட்டது.
    கரை தேடி நானொதுங்க நீ வேகமாக செல்கிறாய்.
    எதிர்கரையில் நிற்கிறான் எனது நண்பனொருவன்
    நம் பழைய வீட்டிற்கு சென்ற பின்
    நீ என்னை அணைத்துக் கொண்ட அந்த நேரத்தில்.
    உன் உயிர் பிரியத் துவங்குவதாய் உணர்கிறேன்
    ஒருவித வாசம் என்னை குலையச் செய்ய
    நகர்ந்த என்னை ஓரக்கண்ணால் அழைத்தபோது
    மடி தந்தேன் நீ அடங்க...
    சட்டெனன்று ஒரு மாற்றம் -
    நீ
    ஒற்றைப்பல் இருக்கும் பச்சிளங்குழந்தையாகிவிட
    என் மகளாய் பிறந்துவிடு என்றானது
    எனது பிராத்தனைகள்..
    உறவுகள் கூடி நிற்க
    நான் உன் மரணத்தைச் சொன்ன நேரத்தில்
    அப்பா உன் நெஞ்சில் கைவைத்தழுத்த
    மறுபடியும் சுருங்கிய தேகத்தோடு எழுகிறாய்
    என் கனவை முடித்து....

    புரியாதவர்களுக்கு கனவில் வந்தவர் என் அப்பத்தா. இது போல அடிக்கடி வரும். காட்சிகளில் மட்டும் மாற்றம் ஆனால் கரு ஒன்றே. ஏனிந்த உளவியல் தடுமாற்றம் என்று யாராவது விளக்குவீர்களா. குறிப்பாக மருத்துவர்கள் - அண்ணன் இளசுவைப் போன்றவர்கள்
    Last edited by பிரியன்; 14-10-2005 at 03:10 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    வார்த்தை பிரயோகங்கள் நன்றாக இருக்கிறது... கவிதைதான் இது.. பின்னே என்ன?

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பிரியன்
    கவிதை அமைப்பும், கனவைச் சொல்ல வந்ததிலும்
    முழு வெற்றியே... முதலில் பாராட்டுகள்..

    ஒரே மையக்கருத்து உள்ள கனவுகள் ஒருவருக்கே மீண்டும் மீண்டும் வருவதை என் அனுபவமும், நண்பர்கள், உங்கள் அனுபவமும் ... இது பரவலான ஒன்று என்று எண்ண வைக்கின்றன.
    மருத்துவப்படிப்பில் அதிகம் சொல்லித்தரப்படாத பகுதிகளில் இதுவும் ஒன்று..
    என் கனவுகளின் மையக்கருத்து வேறு..
    காலை 10 மணிக்கு சென்னையில் பல்கலைத் தேர்வு இருக்கும்.
    9 மணிக்கு திண்டிவனத்தில் பஸ்ஸில் நான்... லுங்கியுடன் இருப்பேன். பஸ் பழுது ஆகும். சாலையில் தடங்கல் வரும்... பயணம் நீண்டு கொண்டே போகும். 10 மணி ஆச்சு -பரீட்சை இனி எழுத வழியில்லை என்றும் இந்தக் கனவு முடியாது.. மெகாசீரியலாய் செங்கல்பட்டு, தாம்பரம் என இழுத்துக்கொண்டே போய்.. இருதயத்துடிப்பு பல மடங்கு எகிறி.... ஒரு வழியாய் மார்வலியுடன் விழிப்பு வந்து...
    ஒவ்வொரு முறையும் இது கனவுதான் என்று உறைக்கும்போது சரேலென அட்ரீனலின் வடிந்து பரவும் அசௌகரிய நிம்மதியில் நனைந்து.....

    பல வருட மறு ஒளிபரப்பு இது எனக்கு.. கே டி வியில் வரும் படம் மாதிரி...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி அண்ணா

    நானும் பலமுறை தேர்வெழுதாமல் வந்திருக்கிறேன். அல்லது தேர்வில் பாதியில் வெளிவந்து பின்பு குறித்த நேரத்தில் போகாமல் என்று. கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த நாட்களில்.. அப்பொழுதெல்லாம் விழித்தவுடன் வருமே அதற்கு பெயர்தான் பரம திருப்தியோ. இது போல பலமுறை கடந்திருக்கிறேன். நேற்று எழுத தோன்றியது. உடனே எழுதி விட்டேன்
    Last edited by பிரியன்; 09-10-2005 at 12:16 AM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  5. #5
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    பிரியன், அருமையான கவிதை.

    கனவின் கருத்தை கவிதையாக்கிய விதம் அருமை.

    எனக்கு ஒரே மாதிரியான கனவுகள் வரும், குறிப்பாக நான் +2 எதிர்பார்த்த மதிப்பெண்கள் வாங்காமல் என் வாழ்க்கையின் பயணம் திசை மாறியது. எத்தனையோ நாட்கள் கனவுகளில் அருமையாக பரீட்சை எழுதி அதிக மதிப்பெண்கள் பெறுவது போலவும், சில நேரங்களில் என்னால் பரீட்சை எழுத போக முடியாமல் போய் தோற்று துவண்டு போனதாகவும் கண்டிருக்கிறேன்.

    இது வெறும் கனவு தானா என்று கவலைப்பட்ட நாட்களுமுண்டு, நல்ல வேளை இது கனவு தான் என்று மகிழ்ந்த தினங்களும் உண்டு.
    பரஞ்சோதி


  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    நீண்ட நாட்களாக மனதை அரித்துக் கொண்டிருந்த இந்த கனவுகளை நேற்று கவிதையில் இறக்கி வைத்த பின்பு ஏதோ ஒரு வகை நிம்மதி....

    தங்கள் கருத்துக்கு நன்றி பரஞ்சோதி...
    Last edited by பிரியன்; 09-10-2005 at 09:25 AM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    தேர்வு பற்றிய கனவு எல்லோர்க்கும் பொதுவானது போல இருக்கிறது. எனக்கும் வந்திருக்கிறது... காலில் செருப்பு போடாமல் நடப்பது மாதிர் சில்லியான கனவு கூட வருவதுண்டு..

  8. #8
    இளையவர் பண்பட்டவர் பிரசன்னா's Avatar
    Join Date
    09 Sep 2005
    Location
    இந்தியா
    Posts
    83
    Post Thanks / Like
    iCash Credits
    21,700
    Downloads
    4
    Uploads
    0
    பிரியன்,
    அருமையான கவிதை.
    பாராட்டுகள்..

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    கனவுகள் ஒரு விநோத போதகன். என்றோ நிகழ்ந்தவைகளை என்றோ ஒரு நாள் வெளிப்படுத்தும் - உரு மாற்றி - அடையாளம் தெரியாத வடிவத்தில். பாட்டியை நேசித்த மனம் அந்தப் பிரிவினால் பாதிக்கப்பட்டு கனவு காணுகிறது - மீண்டும் அந்தப் பாட்டியின் வடிவமே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று. அதுவரையிலும் சரிதான்.

    ஆனால் கரையேறிய பின்னும் எதிர்திசையில் ஒரு நண்பன் (நானல்ல) நிற்கின்றானே - அது எதனால்? மற்றும் கவிதையினுள் - மற்றொரு பாத்திரமாக வந்து நிற்கிறார் தந்தை. அதன் பொருள்? அதுவும் அவர் தன் தாயின் நெஞ்சில் கை வைத்து அழுத்தி தன் தாயை எழுப்பிக் கொண்டு போய்விடுகிறார். உங்கள் நேசத்திற்குரிய பாட்டி எழுந்து போனதும் தான் உங்களின் கனவு ஒரு முடிவுக்கு வருகிறது.

    எதிர்திசை நண்பன் அருமைத் தந்தையார் பாசமிகு பாட்டி இவர்களுக்குள் பொதுவாக உங்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. தேடிப் பாருங்கள் - வேறு ஏதாவது புலப்படும்.

    பாட்டி மகளாக பிறப்பெடுப்பதல்ல கனவு. இன்னும் ஆழத்தில் வேறு பொருள்களும் காணக் கிடைக்கும். இல்லையா
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Nanban
    .

    ஆனால் கரையேறிய பின்னும் எதிர்திசையில் ஒரு நண்பன் (நானல்ல) நிற்கின்றானே - அது எதனால்? மற்றும் கவிதையினுள் - மற்றொரு பாத்திரமாக வந்து நிற்கிறார் தந்தை. அதன் பொருள்? அதுவும் அவர் தன் தாயின் நெஞ்சில் கை வைத்து அழுத்தி தன் தாயை எழுப்பிக் கொண்டு போய்விடுகிறார். உங்கள் நேசத்திற்குரிய பாட்டி எழுந்து போனதும் தான் உங்களின் கனவு ஒரு முடிவுக்கு வருகிறது.

    எதிர்திசை நண்பன் அருமைத் தந்தையார் பாசமிகு பாட்டி இவர்களுக்குள் பொதுவாக உங்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. தேடிப் பாருங்கள் - வேறு ஏதாவது புலப்படும்.

    பாட்டி மகளாக பிறப்பெடுப்பதல்ல கனவு. இன்னும் ஆழத்தில் வேறு பொருள்களும் காணக் கிடைக்கும். இல்லையா
    எல்லோரிடமும் எனக்கிருப்பது நேசம் என்றுதான் என்னால் எண்ண முடிகிறது.

    பாட்டியின் மரணத்தை விரும்பாத மனது தந்தையை நாடுகிறது அவரை மீட்டுவர. என் துன்பங்களை போக்க வல்லவர் தந்தையார் என்ற எனது நம்பிக்கை ஒரு பாத்திரமாக வடிவெடுத்திருக்கலாம். கருத்து முரண்களினால் - இங்கு இருவரும் எதிர் எதிர் கரையில் இருந்தோம் என்பது இருவருமே எதிரெதிர் கருத்துகளை கொண்டதை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கலாம்- இன்னும் வேறு எந்த சூழல்கள் காரணமாகவும் யாரையுமே இழக்க விரும்பாத மனதின் தவிப்பின் அடையாளமாகவும் இந்த மூவரும் வந்திருக்கலாம்.. இன்னும் இன்னும் யோசிக்கிறேன். சரியான பதில் மட்டும் உறுதியாக தெரியவில்லை.

    கனவில் வந்த அந்த நண்பர் நம் மன்றத்தவர்.........
    Last edited by பிரியன்; 09-10-2005 at 07:57 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பிரசன்னா
    பிரியன்,
    அருமையான கவிதை.
    பாராட்டுகள்..
    நன்றி பிரசன்னா. ஆனால் மற்றவர்களைப் போல நீங்களும் ஒரு வரிப் பதிவாக பதிலளிப்பது மனதிற்கு சற்று ஏமாற்றத்தையே தருகிறது

    என்றும் அன்புடன்
    பிரியன்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by பிரியன்
    கனவில் வந்த அந்த நண்பர் நம் மன்றத்தவர்.........
    ?????

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •