சேர்ந்து நடைபோடவே ஆசை அறிஞரே...
இணையும் கரங்கள் அனைத்துமே சமம்...இணைய மன்றத்தில்..!
வரப்போகும் முத்து - என்றேன்.. வந்தாச்சு இன்று!
மற்றவர்களும் வருவார்கள்...
கண்ஸ், வந்தியத்தேவன்,நட்சத்ரன் இன்னும் நிறைய நண்பர்கள் என் எதிர்பார்ப்பு பட்டியலில்...
சேர்ந்து நடைபோடவே ஆசை அறிஞரே...
இணையும் கரங்கள் அனைத்துமே சமம்...இணைய மன்றத்தில்..!
வரப்போகும் முத்து - என்றேன்.. வந்தாச்சு இன்று!
மற்றவர்களும் வருவார்கள்...
கண்ஸ், வந்தியத்தேவன்,நட்சத்ரன் இன்னும் நிறைய நண்பர்கள் என் எதிர்பார்ப்பு பட்டியலில்...
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
வரட்டும் அனைவரும்... ... மன்றம் பொழிவு பெறட்டும்......
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,
நலம்தானே?
நான் அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டிருந்தாலும் பெரிதாகப் பங்கெடுக்கவில்லை. நேரமின்மை மற்றும் படித்தல். நல்ல படைப்புகளைத் தேடித் தேடிப் படித்தும் பார்த்தும் கொண்டிருக்கிறேன். சில பகுதிகளை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். விரைவில்.. உங்கள் ஆசியுடன்..
வருக வருக ராம்..
உன் பதிவால் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி கொஞ்சமல்ல.
நான் நலமே ராம். உன் நலம் எப்படி?
நிச்சயம் உன் எண்ணங்களுக்கு பதிவு வடிவம் கொடுத்து
உலவ விடு. படித்து ரசித்து விமர்சிக்க பலரும் ஆவலுடன்..
(உன் பதிவால் என் மனசுக்குள் இன்றைக்கே தீபாவளி..)
வேலைப்பளு , பிற காரணங்களால் வரமுடியாமல் போனவர்கள்
மறுசங்கமக் காலம் இது.
நண்பர் பிஜிகே புதிர் பக்கம் களைகட்ட வைத்துவிட்டார்.
இன்னும் பலரும் வரவேண்டும், வருவார்கள்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
முன்புபோள் உங்கள் பலமானOriginally Posted by rambal
பலனுள்ள பதிவுகளை எதிர் பார்க்கின்றோம் ராம்.............
வாழ்த்துக்கள்!!!
பழையவர்கள் எல்லாம் திரும்பும் நேரத்தில் என் தலையில் ''பணி''ச்சுமை!
அதை ''பனி''ச்சுமையாக்க வேண்டியது இறைவன் பொறுப்பு!!!
உங்கள் பணிச்சுமை
உழைப்பெனும் ஆதவ்ன் கண்ட
பனியாக கரைய..
கதையாசிரியர் அவதாரம் தொடர
வாழ்த்துகள் நாரதரே..
உங்கள் மன டைரியிலிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
இன்று கொஞ்சம் பழைய நினைவுகள்..
ஏப்ரல் 1 2003- அன்று
நம் மன்றம் பிறந்த முதல் நாளில்
என் முதல் - அறிமுகப் பதிவு..!
----------------
இனிது இனிது தமிழ் இனிது
அமிழ்தினும் இனிய தமிழுக்கு
அழகிய தளம் தந்த தலைவா
கணினியுகம் தாண்டியும்
காலமெல்லாம் உன் புகழ் வாழ்க!
அழகுக்கு அழகு செய்ய
அணிகலன் அளிக்கும் தோழரே
பொன்நகை மோகம் தீராத் தமிழ்க்கன்னி
போற்றுவாள் உங்களின் அன்பெண்ணி!
நன்றியைச் சொல்ல என்ன வழி?
நல்லதாய் நீயும் படைப்பு அளி
படைக்கும் வழி பழகும் வரை
படித்தவற்றுக்கு பாராட்டளி!
வாதம் செய்; பிடிவாதம் வேண்டாம்
தர்க்கம் செய்; குதர்க்கம் வேண்டாம்
நீர்க்குமிழி கோபம் உடைய தேவை ஒரு நொடி
ஊசி கொண்டு குத்துவதால் தேவையற்ற வலி!
அன்பே நம் மதம், அமைதியே தேசிய கீதம்
பண்பே பண்டமாற்று, பகிர்தலே தேச மொழி
உழைப்பே மூலதனம், உண்மையே விளம்பரம்
உருவாக்கும் வெற்றி எல்லாம் தமிழுக்கே சமர்ப்பணம்.!
------------------
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
இளசு அவர்களே,
உங்கள் முதல் பதிவை மறுபடியும் நினைவு படுத்தியதற்கு நன்றி. அப்படி பின்னோட்டம் விடும்பொழுது கடந்துவந்து பாதையும், மன்றம் வளர்ந்த விதமும், சந்தித்த மனிதர்களும், உரையாடிய நண்பர்களும் நம் கண்முன்னே வலம் வருவார்கள்.
உங்கள் பதிவு என்னையும் கொஞ்சம் திரும்பிபார்க்க வைத்தது.
நம் மன்ற செல்வங்களான ராம்பால், பப்பி, நண்பன், இக்பால், இனியன், சுவேதா ஆகியோர் (இன்னும் பலர்) திரும்பவும் மன்றம்வந்து உலாவினால் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன். இது நடக்குமா?
நன்றி வணக்கம்
ஆரென்
அன்பின் ஆரென்
ஐந்தாம் ஆண்டு தொடங்கப்போகும் இந்தக்கட்டத்தில்
பழைய நினைவுகள், பாச இணைப்புகள்..
இப்போது இங்கே இல்லா இதயங்கள்
என பலவீனமாய் உணர்கிறேன்...
மன்றம் உருவாக முக்கிய காரணகர்த்தர் அன்பு இளவல் ராம்பால்..
மன்றம் மீண்டும் விரைவில் வருவார் என உள்மனம் சொல்கிறது..
அனைவருக்காகவும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்...
ஆரம்பகால நண்பர்களின் மீள்பார்வைப் பதிவுகளை
ஐந்தாம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக
நம் மன்றம் எதிர்பார்க்கிறது..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
தங்களின் முதல் அறிமுக கவிதை பலே.
நன்றி
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஆரம்ப கால நண்பர்கள் வரட்டும், மன்றம் இன்னும் அதிகமாக பொழிவு பெறட்டும்....
5ஆம் ஆண்டு இன்னும் சிறப்பு பெறட்டும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks