எல்லா சமயங்களிலும் அது நிகழ்வதில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறு. இதை நான் பல்வேறு சமயங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன். மூடிய நிலையில் சில குறிப்புகளை எடுத்துக் கொண்டு இதுவாக இருக்கும் என்று அனுமானித்தல் வாசகனுடையது. மூடிய நிலையில் என்ன இருக்கிறது என்பது எழுதியவருக்கே நிச்சயம். இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கவேண்டும்? இங்கு முக்கியமானது கவிதை வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது ஒரு வாசகனால்.Originally Posted by kavitha
எந்த வரிகள் - ? முழுக்கவிதையுமே....Originally Posted by kavitha
ஜீவனுள்ள மரம் - முதலில் ஒரு மனிதன் என்று நினைத்துக் கொண்டாலும் மறுவாசிப்பில் அதை ஒரு பெண்ணாக மாற்றிக் கொண்டேன்.
இயற்கையானதே - ஒரு இயல்பைப் பற்றி பேசுகிறீர்கள்.
உதிர்தல்
துளிர்த்தல்
மீண்டும் உதிர்தல்
இது ஒரு கால சுழற்சியைக் குறிக்கிறது. இயற்கையையும் கால சுழற்சியையும் குறிப்பாக சொல்லியதாக நான் எடுத்துக் கொண்டேன்.
உதிரம் பாயும் மட்டும் என்பதும் பொருத்தமான சூழலிலே தான் வருகிறது. உதிரம் பாய்வது நின்றுவிட்டால் பிறகு அந்தப் பிரச்சினையே வருவதற்கில்லையே.
அதனால் தான் அதைப் பெண்களின் பிரத்யேக பிரச்னையாக பார்க்கிறேன்.
நீங்கள் பெண் என்று சொன்னது உங்களின் நினைவூட்டலின் பிறகு தான் நினைவிற்கு வருகிறது.
சரி போகட்டும் - நீங்கள் சொன்ன துறவற மனிதனின் பிரச்சினைக்கு இது பொருந்துமா?
துறவறம் என்பது இயல்பு நிலை அல்ல. மனிதன் முனைந்து திட்டமிட்டு இறங்கும் ஒரு துறை அது. அது இயற்கையானதல்ல. நீங்கள் இயற்கை என்று குறிப்பிட்டதால் அது துறவறத்தைக் குறிப்பதாக நான் எண்ணவில்லை.
நீங்கள் நான் எழுதிய மனுஷ்யபுத்திரன் கவிதை நூல் விமர்சனம் பின்னர் அவரின் பேட்டி பின்னர் அதற்கான விமர்சனம் இவற்றைப் படித்தீர்களா?Originally Posted by kavitha
அதில் அவர் சொல்கிறார் - நான் என் பிரச்சினைகளை எழுதவில்லை - ஆனால் அவைகள் என் பிரச்சினைகளாகப் புரியப்பட்டன என்கிறார். ஆமாம் இது எல்லோருக்குமே நிகழ்கிறது. தவிர்க்க முடியாது. இதற்குக் காரணம் அறிமுகம் ஆனவர் என்பதால்.
ஆனால் உங்களின் ஒவ்வொரு கவிதையையும் அதன் இயல்பை ஒட்டித் தான் வாசித்து வருகின்றனே தவிர வேறு எதைக் கொண்டும் அல்ல. எங்கே பெண்ணியம் சார்ந்ததாக என் கவிதைகள் ஒதுக்கப்பட்டு விடுமோ என நீங்கள் அஞ்சுவதாக குறிப்பிடுகிறீர்கள். முதலில் பெண்ணியம் பேசுவதில் என்ன தவறு? இன்னும் சொல்லப் போனால் பெண்ணியம் பேச நீங்கள் தவறுவதால் தான் இன்று பல ஆண்களும் பெண்ணியத்தைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு பேசவும் எழுதவும் முற்படுகிறார்கள்.
ஒவ்வொரு கவிஞனும் - தன் அனுபவங்களை எழுத வேண்டும். அவ்வாறு எழுதும் பொழுது அது இயல்பாக இருக்கும். நீங்களும் உங்கள் அனுபவங்களை எழுதும் பொழுது அது உங்கள் பார்வையில் எவ்வாறு இருக்கின்றன என்று தெரியவரும். இப்பொழுது நான் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுதும் பொழுது அது உண்மையான ஒரு பெண்ணின் வலியாக இருக்காது. மாறாக நான் அன்பு செலுத்தும் ஒரு பெண்ணின் வலிக்கான அனுதாபமாகத் தான் இருக்கும். பகிர்ந்து கொண்டமையாக இருக்கலாம். ஆனால் அந்த வலி - வலிபட்டவர்களின் வாயிலிருந்து தான் வரவேண்டும். உலகளாவிய பார்வை என்று சொல்லிக் கொண்டு தன் உடலில் உள்ளத்தில் கிளரும் பிரச்சினைகளை திரையிட்டு மறைக்க வேண்டிய அவசியமென்ன வந்து விட்டது.?
கவனம் பெறுவதற்காக உடலுறுப்புகளை முன்னிறுத்தும் சில பிரபல கவிஞர்களின் அற்பத்தனத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் அனுபவத்தில் எழும் பெண்களின் பிரச்சினைகளை தொடர்ந்து எழுதுங்கள்.
இதைத் தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்...
Bookmarks