Results 1 to 10 of 10

Thread: சில நேரங்கள்...

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    சில நேரங்கள்...

    தான் ஈன்ற குட்டியை
    தானேத் தின்னும்
    மிருகம் போல்..

    நடக்க முயன்ற
    குழந்தை வீழ்ந்து
    எழுந்து தவிப்பதைப் போல்..

    தொட முயன்று
    சூடு தாங்காமல்
    கீழ் விழும் பீனிக்ஸ் போல்..

    விதையைக் கிழித்து
    விஸ்வரூபம் எடுக்கும்
    மரம் போல்..

    சிறகை விரித்து
    காற்றைக் கிழித்து
    பறக்கும் பறவையைப் போல்...

    சிகரம் ஏறி வெறுமை
    கண்டு நொந்து தோல்வி சமதளத்தில்
    பயணிக்கும் பயணி போல்..

    தனியே அமர்ந்து
    கரையும்
    காகம் போல்...

    ஊர் போகும் பாதைக்கு
    எதிர்ப்புறம் பயணிக்கும்
    கிறுக்கன் போல்...

    இப்படி சில நேரங்களில்
    இருந்தாலும்...
    எதார்த்த உலகின்
    வரைமுறைகளுக்குள்
    சம்மதமின்றி
    அழுது கொண்டேதான்
    பலமுறை அடங்கிப் போக வேண்டியிருக்கிறது...
    Last edited by விகடன்; 27-04-2008 at 04:08 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    விரும்பியது
    கிடைத்தது
    இரண்டுக்கும் நடுவில்
    எப்போதும் ஊஞ்சல்
    அதை அழகாய் சொன்ன இளவல் ராமுக்கு பாராட்டு...
    Last edited by விகடன்; 27-04-2008 at 04:08 PM.

  3. #3
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    107
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு மனிதனின் சுயதேடலும்
    யதார்த்த உலகமும்.

    சிறப்பான கவிதை, பாராட்டுக்கள்...ராம்.

    -குமரன்.
    Last edited by விகடன்; 27-04-2008 at 04:09 PM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    உலக உருண்டைக்குள்
    உருளும் பந்துகள் நாம்...

    -பாராட்டுக்கள் நாம்!!
    Last edited by விகடன்; 27-04-2008 at 04:09 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    ராம்பால்ஜி!

    முதல் ஏழு எடுத்துக்காட்டுகளும் இயல்பானவையே, இயற்கையானவே. தவறேதும் தென்படவில்லையே!

    ===கரிகாலன்
    Last edited by விகடன்; 27-04-2008 at 04:09 PM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  6. #6
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி..
    Last edited by விகடன்; 27-04-2008 at 04:09 PM.

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0

    அழுது கொண்டேதான்
    பலமுறை அடங்கிப் போக வேண்டியிருக்கிறது...
    கடைசி வரி நிதர்சனமான உண்மை!
    கவிதை அருமை!!
    Last edited by விகடன்; 27-04-2008 at 04:10 PM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  8. #8
    இளம் புயல்
    Join Date
    13 Jan 2004
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    8,964
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கவிதை
    ராம்பால்.,

    உஞ்சல் உள்ளம் உள்ளவரை
    உந்துதல் இருந்தாலும்
    ஊர் சென்று சேரமுடியாது
    Last edited by விகடன்; 27-04-2008 at 04:10 PM.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    எதார்த்தமும்..
    எதிர்பார்ப்பும்..
    எதிரெதிர் திசையெனில்..

    வாழ்க்கையில் சிலநேரங்கள்..
    வாழ்ந்து தான் ஆகவேண்டும்
    இப்படியாக...!!


    மனம் கனத்துவிட்டது..
    பெரியண்ணாவின் வரிகள் அற்புதம்...!!


    பாராட்டுகள் ராம்பால் அண்ணா... மற்றும் தட்டிக் கொடுக்கும் தங்கச் செம்மல்.. எம் பெரியண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் செழியன்'s Avatar
    Join Date
    21 Jun 2008
    Location
    தமிழ் பேசும் மக்களிடையே
    Posts
    143
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    19
    Uploads
    0
    எதிர்பாப்புக்கள் ஏமாற்றமாகும் போது
    எவர் கிறின்
    நெவர் கிறின்
    ஆகிவிடும்.

    ஆனாலும் எனக்கு என்னவோ
    தான் ஈன்ற குட்டியை
    தானேத் தின்னும்
    மிருகம் போல்

    என்ற வரிகள் மட்டும் கவியுடன் பொருந்தாத மாதிரி ஓர் உணர்வு.(?)
    துன்பமில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
    அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட
    நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட
    நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா
    நின்னைச் சரணடைந்தேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •