Results 1 to 5 of 5

Thread: தலைப்பு (இரண்டாம் பதிவில்!??)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    தலைப்பு (இரண்டாம் பதிவில்!??)

    வற்றிய நினைவுகளோடு
    வந்தமர்ந்தேன் குளக்கரையில்..


    நிசப்த நீரில்
    ஒற்றைக்கல்லை
    வீசியெறிந்தேன்.... வெறுப்பு மிகுதியில்..


    ஒரு புள்ளியில்
    உருவாகி பரந்து
    விரிந்தன அதிர்வலைகள்..


    காதலும்கூட இப்படித்தானே..

    காதலின் கருப்புள்ளியை
    நினைவூட்டிய நீரலைமேல்
    நினைவிழந்தேன்...
    மீண்டும் மீண்டும்
    வீசினேன்.. வேண்டும் வேண்டுமென....


    குறிதவறாமல்
    ஒரே புள்ளியில் விழவில்லை....
    அவையாவும்..


    அடுத்தடுத்து
    உருவான அலைகள்
    ஒன்றையொன்று
    கொன்று கொண்டிருக்க..


    குற்றம் உணந்தேன்...

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    காதலொன்றும் தேனல்ல... - நீ மலர்த் தாவும் வண்டெனில்!!

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    குறிதவறாமல்
    ஒரே புள்ளியில் விழவில்லை....
    அவையாவும்..

    இரு பதிவுகளும், இரு கண்ணோட்டமும் நன்றாக இருக்கின்றன.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    காதலும் பன்முகத் தன்மையுடையது தான். அதுவே வாழ்க்கை நெடுக வந்து கொண்டேயிருக்கும் - நாம் தான் அதை உணர்வதில்லை. ஏனென்றால் எப்பவோ ஒருநாள் நம்மிடையே தோன்றிய அந்த அதிர்வலைகள் மற்ற பிற அதிர்வலைகளைக் கொன்றுவிடுகிறது. அதனாலயே வாழ்வில் வேறு காதலே இல்லை என்று எண்ணி கண் மூடிப் பயணிக்கிறோம்.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாழ்க்கைக் கடலில் இயல்பாய் இருக்கும் அலைகள்..
    இருதயக் குளத்தில் வலிந்து வரவழைக்கும் அலைகள்..
    இரண்டுமே வாழ்வில் ஓய்வதில்லை..
    அலையில்லாமல் வாழ்க்கையில்லை..
    பூவின் கவிதை - நண்பன் சொன்ன பன்முகத்தன்மை..
    உண்மை!
    பாராட்டுகள் பூ!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •