வற்றிய நினைவுகளோடு
வந்தமர்ந்தேன் குளக்கரையில்..
நிசப்த நீரில்
ஒற்றைக்கல்லை
வீசியெறிந்தேன்.... வெறுப்பு மிகுதியில்..
ஒரு புள்ளியில்
உருவாகி பரந்து
விரிந்தன அதிர்வலைகள்..
காதலும்கூட இப்படித்தானே..
காதலின் கருப்புள்ளியை
நினைவூட்டிய நீரலைமேல்
நினைவிழந்தேன்...
மீண்டும் மீண்டும்
வீசினேன்.. வேண்டும் வேண்டுமென....
குறிதவறாமல்
ஒரே புள்ளியில் விழவில்லை....
அவையாவும்..
அடுத்தடுத்து
உருவான அலைகள்
ஒன்றையொன்று
கொன்று கொண்டிருக்க..
குற்றம் உணந்தேன்...
Bookmarks