இந்திய அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு தன்னிடம் நேரடியாகவே கூறினர் என்று சௌரவ் கங்கூலி அதிர்ச்சித் தரும் தகவலை தெரிவித்துள்ளார்!
இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்த கங்கூலியிடம், இப்போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து வரும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியா- ஜிம்பாப்வே இடையேயான முதல் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்னாள், அதாவது திங்கட் கிழமை, தன்னிடம் நேரடியாக அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கூறியதாகவும், அதற்கு தாம் சம்மதிக்கவில்லை என்றும் கங்கூலி கூறினார்.
கங்குலியின் தனிப்பட்ட ஆட்டத்திறன் கேள்விக்குறியாகி இருக்கும் இந்நிலையில், அவரது அணித் தலைமையில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவரே விருப்பம் தெரிவித்தால் தவிர, அவரை பதவியில் இருந்து விலக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அணித் தலைவர் கவாஸ்கர் கூறியுள்ளார்.
எனினும், இவ்வாறு கூறியது யார் என்று கங்கூலி நேரடியாக கூறாவிட்டாலும், அணியின் பயிற்சியாளர் கிரெக் சாப்பல்தான் இவ்வாறு கூறியிருப்பார் என்று அவரது பேச்சில் தெரிகிறது.
ஆனாலும், இது குறித்து இந்திய அணி வீரர்களுக்கும், கங்கூலிக்குமே உண்மை தெரியும்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
Bookmarks