Results 1 to 9 of 9

Thread: நான் எழுதும் கடிதம்..

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    நான் எழுதும் கடிதம்..

    ஏதேதோ
    கண்கள் தேடி
    இறுதியில்
    எனக்குள் அகப்பட்டு பின்
    என்னை இம்சித்து
    என் சுவாசமாய் மாறி
    என் கனவுகளில்
    கூட எனைத்தண்டித்து
    அந்த உருண்ட விழி..
    கன்னக்குழி..
    தெற்றுப்பல் சிரிப்பு..
    இப்படியான சிலாகிப்புகளில்
    எனைத் திரியவிட்டு..

    ஓரவிழியில் தெறித்து ஓடும்
    மின்னலைப் பிடிக்கப் போய்
    ஐன்ஸ்டீனாய் ஆகி..

    அந்தத் திமிரும்
    தெனாவட்டும் கலந்த
    உன் பார்வை வரத்திற்கு
    தினமும் எனை ஏங்கவிட்டு...

    படிக்கடிகளில் தொற்றிக் கொண்டு
    திரிந்த என்னை
    அந்த மந்திரக் குரலுக்கு கட்டுப் பட்டு
    உன் உதடு உச்சரிக்கும்
    ஓசையைக் கேட்பதற்காக
    படிக்கட்டுகளையே
    விவாகரத்து செய்துவிட்டு..

    உனக்குப் பிடிக்காத
    என் நீளக்கூந்தலை
    வெட்டப்போய்
    முடி திருத்துபவனிடம்
    சண்டையிட்டு..

    இப்படியாக உனக்கு நான் எழுதும் கடிதம் ஆரம்பிக்கிறது..
    அன்பே.....
    Last edited by விகடன்; 02-05-2008 at 12:45 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாராட்டுகள் ராம்
    ஆரம்பமே இவ்வளவு அசத்தல் என்றால்
    இந்தக் காவியக் காதல் மடல்
    இன்னும் போகப் போக......!!!
    Last edited by விகடன்; 02-05-2008 at 12:48 PM.

  3. #3
    புதியவர்
    Join Date
    19 Apr 2003
    Location
    SFO
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை அசத்தல். காதல் வயப்பட்டாலே கவிதை கொட்டுமே !
    Last edited by விகடன்; 02-05-2008 at 12:48 PM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    அதென்னவோ வாஸ்தவம்தான். காதலியின் கடைக்கண் பார்வையே போதுமே, உலகத்தையே காலடியில் சமர்ப்பிப்பதற்கு!

    வள்ளுவரே சொன்னவர்தானே -- காதலி சொன்னால் பகல் இரவாகும்; இரவு பகலாகும்!

    வாழ்க ராம்பால்ஜி, கவிதை மழை பொழியட்டும்.

    ===கரிகாலன்
    Last edited by விகடன்; 02-05-2008 at 12:48 PM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  5. #5
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    107
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    Re: நான் எழுதும் கடிதம்..

    ஏதேதோ
    கண்கள் தேடி
    இறுதியில்
    எனக்குள் அகப்பட்டு பின்
    என் சுவாசமாய் மாறி
    ராம், இஇப்பொழுது புரிகிறது....
    நீங்கள் ஏன் தமிழைக் காதலிக்கிறீர்கள் என்று.

    பாராட்டுக்கள்.

    -குமரன்.
    Last edited by விகடன்; 02-05-2008 at 12:49 PM.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    ஆரம்பமே அருமை.. அவளை நேசிப்பது எந்தளவு ஆழமென !!..

    பாராடுக்கள் ராம்!!!
    Last edited by விகடன்; 02-05-2008 at 12:50 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  7. #7
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    பாராட்டுகள் ராம்
    ஆரம்பமே இவ்வளவு அசத்தல் என்றால்
    இந்தக் காவியக் காதல் மடல்
    இன்னும் போகப் போக......!!!
    இல்லை. அதை ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நாளாகும். இப்போதைக்கு ஆரம்பிப்பது பற்றி உத்தேசம் இல்லை..
    Last edited by விகடன்; 02-05-2008 at 12:50 PM.

  8. #8
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    காதலி உம்மை காக்க வைக்க நீர் உம் கவிதைக்காக எம்மை
    காக்க வைக்கிறீரே!
    காத்திருப்பதும் சுகம் தானோ?
    Last edited by விகடன்; 02-05-2008 at 12:50 PM.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    பின்னர் தொடரவேயில்லையே.......... ஏன்?
    Last edited by விகடன்; 02-05-2008 at 12:50 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •