Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 36 of 36

Thread: காதல் தோழி

                  
   
   
  1. #25
    புதியவர்
    Join Date
    02 Sep 2005
    Location
    Bangalore
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    உங்கள் கவிதை அத்தனை சிரமமானதே இல்லை. குறியீடுகள் இல்லை, படிமங்கள் இல்லை.
    ஒத்துக்கொள்கிறேன் இதை எல்லாம் நான் கேள்வி பட்டிருக்கிறேனே தவிர நான் அறிந்ததில்லை...அதனால் அதற்கான சாத்தியங்களே கிடையாது
    தர்க்கத்தில் ஒரு விவேகம் இருக்க வேண்டும்! Logic இருக்க வேண்டும். இல்லாமல் நான் அப்படி பேசவில்லை - புரிந்து கொள்ள சக்தியற்றவர்கள் என்று சொல்லும் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்
    அப்படி நான் சொல்லியதாக நீங்கள் நினைத்தால் அது என்னுடைய தவறல்ல...

    கவிதையில் என்ன மொழியைக் கையாண்டீர்கள் என்பது தான் வாசகன் புரிந்து கொள்வானே தவிர, கவிஞன் என்ன நினைத்துக் கொண்டான் என்று மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு கிளி ஜோசியம் பார்க்கும் வேலை அல்ல வாசகனுடையது
    நான் அதை தவறு என்று சொல்லவில்லையே...தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்


    எத்தனை காலத்திற்கு அவள் அப்பன் வீட்டில் இருக்க வேண்டும்? நீங்கள் இணைந்து புரிந்த கலவியில் பிறக்கும் குழந்தை எங்கே போய் இருக்கும்? அரசுத் தொட்டிலிலா?
    இப்படித்தான் எடுத்துக்கொள்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது
    இதையெல்லாம் பட்டி மன்றம் வைத்துப் புரிந்து கொள்ளவேண்டிய அளவிற்கு உசத்தியான சமாச்சாரம் என்று நீங்களாக இறுமாந்து விடுவதும் பட்டி மன்றமின்றியே நகைக்க வைக்கும். மெனக்கெட வேண்டாம் - பிறரை நகைக்க வைக்க. உங்கள் வாதங்களே போதும்.
    மீண்டும் சொல்கிறேன்.
    நான் எதை பட்டிமன்றம் வைக்கவேண்டும் என்று சொன்னேன் என்று ஒரு முறை பார்த்துவிட்டு சொல்லவும்..வார்த்தைகளை விடுவது தங்கள் பக்குவமின்மையையே காட்டுகிறது

    தவறான ஒரு கருத்தைச் சொல்லும் கவிதையை தந்துவிட்டு அதற்கு எழும் விமர்சனத்தைத் தாங்க இயலாது புரிந்து கொள்ளவில்லை என்று கூறுவது தவறு
    ஒருவேளை விமர்சனத்திற்கு அஞ்சுவதாக இருந்தால் உங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கமாட்டேன்

    had failed to communicate the intended meaning
    இன்னும் வாசகன் எவ்வாறு எடுத்துக்கொள்வான் என்று சிந்திக்கும் அளவிற்கு எனக்கு பக்குவம் போதாது என்பதை ஒத்துக்கொள்கிறேன்......
    ஏற்கனவே நான் சொன்ன பதில்.


    உங்கள் மீது தனிப்பட்ட எந்த கருத்தையுமோ அல்லது தனிப்பட்ட உங்கள் தோழி மனைவி காதலியைப் பற்றியோ எதுவுமே நான் குறிப்பிடவில்லை, நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியின் மூலம் நீங்கள் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை நிரூபிக்க முயன்றிருப்பது உங்கள் பதற்றத்தைக் காட்டுகிறது
    அந்த சுட்டியின் மூலம் நிருபிக்க முயல்வதாக கண்ணைகட்டிக்கொண்டு கற்பனை செய்து கொண்டுள்ளீர்கள்

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    எத்தனை காலத்திற்கு அவள் அப்பன் வீட்டில் இருக்க வேண்டும்? நீங்கள் இணைந்து புரிந்த கலவியில் பிறக்கும் குழந்தை எங்கே போய் இருக்கும்? அரசுத் தொட்டிலிலா?


    இப்படித்தான் எடுத்துக்கொள்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது
    வேறெந்த விதத்திலும் எடுத்துக் கொள்ள உங்கள் கவிதை இடம் தரவில்லையே....

    நான் முன்பே குறிப்பிட்டு இருந்தேன். காதலி, தோழி என்று சொல்லிவிட்டு அதை காமத்தோடு முடிச்சு போட்டிருப்பதுதானே விவாதித்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது......

    நட்பு - காதல் - காமம்- இந்த உணர்வு நிலைகளுக்கான இடையேயான வித்தியாசங்களை உங்கள் கவிதை தரவில்லையே...

    பெண்ணின் அகவியல் உணர்வுநிலையாக வெளிப்பட்டிருக்கும் இந்தக் கவிதையில் பிரதானப்பட்டிருப்பது நட்பால் கனிந்த காதலாக இருந்தால் இத்தனை விவாதங்கள் எழும்பி இருக்காது.
    நட்பின் பேராலும் காதலின் பேராலும் காமத்தை ஒளித்து வைக்க வேண்டாம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாதவரை நம்முடைய இந்த விவாதங்கள் அர்த்தமற்றவையே......

    தொடர்ந்து எழுத வாழ்த்துகள் கல்வெட்டு.....
    Last edited by பிரியன்; 15-09-2005 at 04:07 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  3. #27
    புதியவர்
    Join Date
    02 Sep 2005
    Location
    Bangalore
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    பிரியன் அவர்களே நான் ஒத்துக்கொள்கிறேன் என்னுடைய கவிதை சொன்னது அதுவாக இருக்கலாம் ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல என்பது தான் உண்மை..

    நான் சொல்ல வராத கருத்தை எடுத்துக் கொண்டு திரும்ப திரும்ப அதில் உள்ள நியாய அநியாயங்களை பேசி என்ன பயன்....

    விமர்சனம் கவிதையின் மேல் என்றால் சரி என்னுடைய கவிதை தவறான பொருள் படுகிறது அதோடு முடிந்து விட்டது....ஆனால் நண்பன் அவர்கள் சொல்லும் விமர்சனம்.....பொருளின் மேல் விழும் போது நான் அதை சொல்ல முற்படவில்லை என்பதைத் தானே நான் சொல்ல முடியும்.


    இங்கு தவறு கவிதையின் மேல் இருக்கிறது..அல்லது கவிதை எழுதப்பட்ட விதத்தில் இருக்கிறது....மாறாக நான் எழுத நினைத்த கருத்தில் இல்லை...ஆனால் திரும்ப திரும்ப
    தங்களுடைய கருத்து தவறு... நீங்கள் எப்படி இதை சொல்லலாம் என்றால் என்ன சொல்வது என்று சொல்லுங்கள்.

    நீங்கள் விவாதிப்பது கவிதை எழுதிய நபருடன் தானே....அப்படியானால் எழுதிய நபர் நான் அந்த கருத்தை நான் சொல்ல வரவில்லை என்கிற போது...பொருளின் மீதான விமர்சனம் தேவையில்லாத ஒன்றாக படுகிறது...கவிதை எழுதப்பட்ட விதத்தோடு முடிந்துவிடுகிறது.

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by kalvettu
    பிரியன் அவர்களே நான் ஒத்துக்கொள்கிறேன் என்னுடைய கவிதை சொன்னது அதுவாக இருக்கலாம் ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல என்பது தான் உண்மை..

    நான் சொல்ல வராத கருத்தை எடுத்துக் கொண்டு திரும்ப திரும்ப அதில் உள்ள நியாய அநியாயங்களை பேசி என்ன பயன்....

    விமர்சனம் கவிதையின் மேல் என்றால் சரி என்னுடைய கவிதை தவறான பொருள் படுகிறது அதோடு முடிந்து விட்டது....ஆனால் நண்பன் அவர்கள் சொல்லும் விமர்சனம்.....பொருளின் மேல் விழும் போது நான் அதை சொல்ல முற்படவில்லை என்பதைத் தானே நான் சொல்ல முடியும்.


    இங்கு தவறு கவிதையின் மேல் இருக்கிறது..அல்லது கவிதை எழுதப்பட்ட விதத்தில் இருக்கிறது....மாறாக நான் எழுத நினைத்த கருத்தில் இல்லை...ஆனால் திரும்ப திரும்ப
    தங்களுடைய கருத்து தவறு... நீங்கள் எப்படி இதை சொல்லலாம் என்றால் என்ன சொல்வது என்று சொல்லுங்கள்.

    நீங்கள் விவாதிப்பது கவிதை எழுதிய நபருடன் தானே....அப்படியானால் எழுதிய நபர் நான் அந்த கருத்தை நான் சொல்ல வரவில்லை என்கிற போது...பொருளின் மீதான விமர்சனம் தேவையில்லாத ஒன்றாக படுகிறது...கவிதை எழுதப்பட்ட விதத்தோடு முடிந்துவிடுகிறது.

    இந்த விவாதம் தனிப்பட்ட மனிதருடன் அல்ல. அவர் உணர்வுகளோடும் அல்ல. கவிதையின் பொருளோடுதான் விவாதமே... நான் சொல்லவந்தது அதுவல்ல கவிதை வேறு விதமாக சொல்லி விட்டது என்பது முரண்பாடாக இருக்கிறது... கவிதை தவறாக பொருள் தருகிறது என்றால் அதற்கு நீங்கள்தானே பொறுப்பேற்றாக வேண்டும்.......

    நாங்கள் தவறாக பொருள் கொண்டிருந்தால் நீங்கள் கவிதையில் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்.....
    Last edited by பிரியன்; 16-09-2005 at 08:36 AM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  5. #29
    புதியவர்
    Join Date
    02 Sep 2005
    Location
    Bangalore
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை தவறாக பொருள் தருகிறது என்றால் அதற்கு நீங்கள்தானே பொறுப்பேற்றாக வேண்டும்.......

    கவிதை எப்படி பொறுப்பேற்கும் சொல்லுங்கள்...கவிஞன் தான் பொறுப்பேற்க வேண்டும்..எனக்கு தவறை ஒத்துக்கொள்ள தைரியம் இருக்கிறது......இதைத் தான் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே எனக்கு பக்குவம் போதாதென்று...இல்லை அது போதாதென்றால் எனக்கு கவிதை எழுதத் தெரியாது என்று கூட சொல்லலாம் (அப்படி என்றால் ஏன் இங்கு வருகிறீர்கள் என கேட்கத் தோன்றுகிறதா!!??)

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    இங்கு தவறு கவிதையின் மேல் இருக்கிறது..அல்லது கவிதை எழுதப்பட்ட விதத்தில் இருக்கிறது....மாறாக நான் எழுத நினைத்த கருத்தில் இல்லை...ஆனால் திரும்ப திரும்ப
    தங்களுடைய கருத்து தவறு...
    நண்பரே, கருத்து என்பது எங்கிருக்கிறது? கவிதையில் தானே? அதைத் தானே நாங்கள் படிக்க முடியும்? உங்களுடைய கருத்து என்னவென்று நாங்கள் கேட்கவில்லை - நீங்களாக சொன்னால் தான் உண்டு. ஆனால் உங்கள் - தனிப்பட்ட கருத்தாக இருக்கும் ஒன்றை விவாதத்திற்குட்படுத்த வேண்டுமென ஆவல் என்னிடத்தில் இல்லை. கவிதை சொல்லும் செய்தினைத் தான் விமர்சிக்கிறேன். நீங்கள் சொன்ன பதிலெல்லாம் - ''நீங்களாக அவ்வாறு நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்" என்று தான் பதில் சொன்னீர்களே தவிர கவிதை என்ன சொல்ல வருகிறது என்ற விளக்கத்தைத் தர முன் வரவில்லை. கவிதை பேசிய செய்தியை கருத்தை விமர்சித்தோம். விமர்சனத்திற்காகத் தானே கவிதையைப் பொதுவில் வைத்திருக்கிறீர்கள்? விமர்சனம் தேவையில்லையென்றால் இங்கு பிரசுரிக்க வேண்டிய அவசியமும் தேவையும் இல்லை தானே? கவிதை வேறு கருத்து வேறு என்ற புதிய இலக்கணத்தை இன்று தான் உங்கள் மூலம் கேள்விப்படுகிறேன்.

    நான் சொல்ல வராத கருத்தை எடுத்துக் கொண்டு திரும்ப திரும்ப அதில் உள்ள நியாய அநியாயங்களை பேசி என்ன பயன்....
    உங்களின் குழப்பமான வாதங்களை எத்தனை முறை சுட்டிக்காட்டுவது என்று தெரியவில்லை. ''சொல்ல வராத கருத்து'' எதைப் பற்றி விமர்சித்தேன் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? கவிதையில் எழுதப்படாத ஒரு வாக்கியத்தை விமர்சித்தேன் என்று குறிப்பிட்டுக் காட்ட முடியுமா? முதலில் நீங்கள் சொல்ல வராத கருத்தை எப்படி உணரமுடியும்?

    நீங்கள் விவாதிப்பது கவிதை எழுதிய நபருடன் தானே....அப்படியானால் எழுதிய நபர் நான் அந்த கருத்தை நான் சொல்ல வரவில்லை என்கிற போது...பொருளின் மீதான விமர்சனம் தேவையில்லாத ஒன்றாக படுகிறது...கவிதை எழுதப்பட்ட விதத்தோடு முடிந்துவிடுகிறது.
    முதலில் நான் குறிப்பிட்டது இதைத்தான். An act without responsibility. ஒரு கருத்தை கவிதையின் மூலமாகவோ அல்லது உரையாடல் மூலமாகவோ முன்வைத்தவர் தான் அந்தக் கருத்தைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டிய கடமையில் உள்ளவர். விவாதங்கள் அந்தக் கருத்தை முன்வைத்தவரிடம் தான் நடத்தப்படும். எனக்கு எதுவும் தெரியாது என் கவிதையைக் கேளுங்கள் என்றால் என்ன செயவது. நீங்கள் சொல்லிய பதில்கள் எல்லாம் ''நீங்கள் அப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் - இப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் '' என்பது தானே தவிர அந்தக் கவிதையில் நான் கூற முன் வந்தது அதல்ல - அது இது தான் என்று குறிப்பிட்டு உங்கள் விளக்கத்தைத் தந்திருந்தீர்கள் என்றால் அதைப் பற்றி மேற்கொண்டு ஏதும் விமர்சன்ம் செய்யாதிருக்கலாம். ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதை எங்களின் தவறான புரிதல் என்று நிறுவ முற்பட்டதானால் தான் நீங்கள் கவிதை என்று வழங்கிய வரிகளை மீண்டும் மீண்டும் படித்து நாம் புரிந்து கொள்ளாமல் விட்ட செய்திகள் ஏதும் உண்டா என்று தேட வேண்டியதாயிற்று. அதன் மூலம் கவிதையில் நிலவிய கருத்தியல் குழப்பங்கள், முரண்கள், வெளிப்பாட்டுத் தவறுகள் இவையெல்லாம் பிடிபட அவற்றை குறிப்பிட்டு சுட்டிக் காட்ட வேண்டியதாயிற்று.
    Last edited by Nanban; 16-09-2005 at 11:29 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  7. #31
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    பிரியன் அவர்களே நான் ஒத்துக்கொள்கிறேன் என்னுடைய கவிதை சொன்னது அதுவாக இருக்கலாம் ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல என்பது தான் உண்மை..
    உங்கள் கவிதை சொல்ல வந்த கருத்து "அதுவாக இருக்கலாம்" என்ற ஒப்புதலை இத்தனை வாதங்களுக்குப் பின் சொல்கிறீர்கள். கவிதை என்ன சொன்னதோ அதைத்தான் விவாதிக்க முடியும். நீங்கள் சொல்ல வந்தது வேறாக இருக்கலாம். ஆனால் வாசகர்களால் ஊகிக்கத் தான் முடியுமே தவிர இன்னது தான் கவிஞனின் கருத்து அறுதியிட்டுக் கூற முடியாது. மனதிற்குள் ஒளித்து வைக்கப்படும் கருத்துகளைத் தேடிக் கொண்டிருப்பது வாசகனின் வேலை அல்ல. ஓரளவிற்கு ஊகம் செய்யலாம். அதையும் ஒரு வாசகன் என்ற முறையில் ஊகம் செய்து பார்த்து பதிப்பித்திருந்தேன். இதோ:

    Living in என்ற முறையைப் பற்றி. இது பெரும்பாலும் Scandinavian countries என்றழைக்கப்படும் வட ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கின்றது. அத்தகைய வாழ்க்கை முறையை ஏற்று வாழ்ந்து வரும் நபரை நான் சந்தித்திருக்கிறேன். சுவீடனைச் சார்ந்தவர். அஸ்ட்ராஜெனிக்கா என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடத்தைத் திறப்பதற்காக வந்திருந்தார். அவர் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். குழந்தைகள் உண்டு. திருமணம் ஆகவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் சம்பாதிக்கிறார்கள் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். குடும்பச் செலவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். குழந்தைகளிடம் கடமை உணர்வு மிக்க பெற்றோர்களாக இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரை ஒருவர் மதிக்கும் நண்பர்களாக வாழ்கிறார்கள்.

    நான் நினைக்கிறேன் - நீங்கள் சொல்ல வந்ததும் இத்தகைய ஒரு வாழ்க்கை முறையைத் தான்.
    இவ்வாறு என்னால் நினைக்கத்தான் முடியுமே தவிர இது தான் உங்கள் கருத்து என்று சொல்ல முடியாது. ஏனென்றால் உங்கள் கவிதையில் அதற்கான எந்த ஒரு துளி அடையாளமும் கிடையாது என்பதே உண்மை.

    கவிஞன் (நான் இல்ல) சொல்ல வந்ததை வாசகன் தவறாக புரிந்துகொண்டால் பிரச்சனை வரத்தான் செய்யும்...ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் வாசகன் கவிஞனை புரிந்துகொள்ளவேண்டுமா இல்லை கவிஞன் வாசகனையா என்று.
    கவிதையை எழுதி பதித்து விட்டு அதற்கான பொறுப்பை கவிஞன் தான் ஏற்க வேண்டுமே தவிர நான் அல்ல என்கிறீர்கள். அப்படியானால் யார் அந்தக் கவிஞன்? நான் கேட்டதெல்லாம் அந்தக் கவிஞனைத்தான். நான் அந்தக் கவிஞன் அல்ல என்று ஒதுங்கிக் கொண்டால், பின் யார் வந்து கவிதைக்குப் பொறுப்பேற்பார்கள்? ''அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கே'' என்று கவுண்டமணி செந்திலிடம் கேட்க, ''அதுதாண்ணே, இது" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்வாரே அதுபோல ஆகிவிட்டது.

    இப்பொழுது அந்தக் கவிஞனையே தேடச்சொல்கிறீர்கள்.

    நன்றி. எல்லோரும் தேடுங்கள்.
    Last edited by Nanban; 16-09-2005 at 11:55 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நான் எதை பட்டிமன்றம் வைக்கவேண்டும் என்று சொன்னேன் என்று ஒரு முறை பார்த்துவிட்டு சொல்லவும்..வார்த்தைகளை விடுவது தங்கள் பக்குவமின்மையையே காட்டுகிறது
    முதலில் பக்குவம் என்பது என்ன என்று பார்த்து விடுவோமா?

    உங்கள் மீது தனிப்பட்ட எந்த கருத்தையுமோ அல்லது தனிப்பட்ட உங்கள் தோழி மனைவி காதலியைப் பற்றியோ எதுவுமே நான் குறிப்பிடவில்லை, நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியின் மூலம் நீங்கள் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை நிரூபிக்க முயன்றிருப்பது உங்கள் பதற்றத்தைக் காட்டுகிறது. உங்கள் சுட்டியை நான் படிக்கவில்லை. அது அவசியம் என்றும் தோன்ற வில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா? நீங்கள் குழப்பத்தைத் தெளிவிக்க மற்றோரு கவிதையைப் படிக்கச் சொல்லும் போதே நீங்கள் தமிழ் மன்றத்தில் எழுதிய கவிதை had failed to communicate the intended meaning என்று.

    நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள கவிதையைத் தமிழ் மன்றத்தில் போடுங்கள். பிறகு படிக்கிறேன்
    .

    நான் சொல்லியவற்றில் கடைசியில் உள்ள வரியை சாமர்த்தியமாக தவிர்த்து விட்டு மற்றவற்றை மட்டும் மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறீர்கள்.

    தமிழ்மன்றம் ஒரு பக்குவப்பட்ட தளம். பிறிதொரு தளத்தில் எழுதப்பட்ட பதிவுகளை இங்கு விமர்சனம் செய்வதில்ல. அதாவது பிறிதொரு தளத்தில் எழுதப்பட்டவை ஒரு பதிவாக தமிழ்மன்றத்தில் பதிக்கப்படாத வரை அதை விமர்சனம் செய்வதில்லை. அதனால் தான் நான் சொன்னேன். அதை ஒரு பதிவாக தமிழ்மன்றத்தில் போடுங்கள் - பிறகு படிக்கிறேன். இது நான் கற்று வைத்திருக்கும் பக்குவம். மன்றத்தின் விதிகளாக இது எங்கும் எழுதி வைக்கப்பட்டிருக்கவில்லை. நாங்களாக நடைமுறையில் ஏற்படுத்திக் கொண்டவை.

    மன்றத்தின் இந்த எழுதப்படாத விதிகளை எல்லாம் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

    அந்த சுட்டியின் மூலம் நிருபிக்க முயல்வதாக கண்ணைகட்டிக்கொண்டு கற்பனை செய்து கொண்டுள்ளீர்கள்
    இங்கு நடத்தப்படும் விவாதங்களுக்கு விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படும் பதிவுகள் இங்கேயே பதிக்கப்பட வேண்டும் என்பது நடைமுறை. அவ்வாறு கேட்டுக் கொண்டதற்கு நீங்கள் மிக அழகாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். இது தான் பக்குவமோ?

    நான் குறிப்பிட்டது - உங்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் சொல்வதைக் கொண்டே ஏற்றுக் கொள்வோம். பிறிதொரு தளத்திற்கு சென்று உங்கள் எழுத்துகளைப் பார்த்து வரும் அளவிற்கு எந்த தேவையுமில்லை. பதட்டப்பட வேண்டாம் என்று. உரைநடைகளே சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும் பொழுது கவிதையில் கண்டிப்பாக அந்த சிரமங்கள் நிகழும். அதைத் தவிர்ப்பது கவிதையை படைத்தவரின் கடமி. கவிஞனைக் கேளுங்கள் - நான் இல்ல என்றால் நாங்கள் அழுவதா சிரிப்பதா?

    பால்வீதி என்ற கவிதை தொகுப்பு - கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதியது. Surrealism என்ற வடிவத்தை ஒட்டி எழுப்பப்பட்டது. அதாவது மனதின் அடி ஆழத்தின் நிகழ்வுகளைப் படம் பிடிப்பது. பலருக்கும் புரியவில்லை. மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உடன் விரிவான தனிப் புத்தகம் ஒன்றைப் போட்டு விளக்கம் கொடுத்தார் கவிக்கோ. ஏனென்றால் கவிதை என்பதே மக்களுக்காகத் தான். அவர்களாலயே புரிந்து கொள்ளப்பட வில்லை என்றால் பின் எதற்காக கவிதைகள் என்று கூறியே தன் நிலையை விளக்கி எழுதினார். அது ஒரு உயர்ந்த கவிஞனின் பக்குவத்தைக் காட்டுகிறது.

    மைலாஞ்சிக் கவிதைகள் என்று ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டார் கவிஞர் H.G.ரசூல். இஸ்லாமிய மத கோட்பாடுகளைப் பற்றிய சில கேள்விகளை எழுப்பியது கவிதை. மிகப் பெரிய சர்ச்சை உருவாகிவிட்டது. அவரை ஊர் விலக்கி வைக்க வேண்டும் என்றெல்லாம் குரல்கள் உயர்ந்தன. அவரும் விரிவாக விளக்கம் எழுதி கொடுத்தார். அது அவரது பக்குவத்தையேக் காட்டுகிறது.

    மனுஷ்யப்புத்திரன் கூறிய சூழ்நிலையை ஏற்கனவே விளக்கி விட்டேன். அவர் கவிதையின் கருவை விளக்கிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அவர் ஒரு வாசகனிடம் போய் ஏன் என் கவிதையைத் தவறாகப் புரிந்து கொண்டு விமர்சிக்கிறாய் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்க மாட்டார். ஏதோ ஒரு நிலையில் நின்று வாசகன் புரிந்து கொள்கிறான் என்று புன்னகைத்து விட்டு அமைதியாகப் போய்விடுகிறார். எதிர்வினை காட்டுவதில்லை. அது அவரது பக்குவம்.


    ஆனால் விளக்கமும் தரமாட்டேன். விமர்சித்தவனை விடவும் மாட்டேன் என்று ஆக்ரோஷிப்பது - உங்கள் பக்குவம்?!

    வேறொரு தளத்திற்குச் சென்று உங்களைப் பற்றி அறிந்து வரச் சொல்லும் உங்களுக்கு இந்த தளத்திலே இருக்கும் எனது பதிவுகளையும் என்னைப் பற்றி மற்றவர்கள் வைத்திருக்கும் கருத்துகளையும் படித்து வர மனமில்லதாதது, தங்களின் பக்குவமோ?

    எனது பக்குவம் / பக்குவமின்மையை எடை போட பல்லாயிரக்கணக்கான பதிவுகளைப் பதிந்த அன்பர்கள் உண்டு.

    ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

    - தவறு என்று பட்டவற்றை எடுத்துச் சொல்ல என்றுமே தயங்கியதேயில்லை நான். தோழி காதலி மனைவி என்று ஒரு பெண் எடுக்கக் கூடிய அனைத்து வடிவங்களையும் இகழ்ந்து பேசிவிட்டு, பின் அது எனது கருத்தல்ல. எனது கவிதை சொன்னது அதுவாக இருக்கலாம் ஆனால் என்னுடைய கருத்துகள் வேறு அந்த கவிஞன் நானில்லை என்று முன்னுக்குப் பின் முரணாக விவாதம் செய்து கொண்டிருப்பது தவறு.

    உங்களுடைய கருத்துகள் மிக உயர்வானதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சபையில் என்ன பேசினீர்கள் என்பது தான் செய்தியாகுமே தவிர ''அது அவரது தனிப்பட்ட கருத்து'' என்று விளக்கம் கொடுக்கும் அரசியல் கட்சியின் முரண்களோடு விளக்கம் தருவது எவ்வகையிலும் சரியல்ல.

    இறுதியாக ஒரு கவிதையைப் பற்றிய விமர்சன விவாதத்திலே தனிநபர் தாக்குதலில் நீங்கள் ஈடுபட விழையும் பொழுது மேலும் உங்களுடன் விவாதம் புரிவது அர்த்தமற்றதாகவேத் தான் இருக்கும். இனியும் இந்தப் பக்கத்திலே எனது நேரத்தை வீணடிப்பது என்னால் இயலாது.

    தூங்குகிறவனை எழுப்பலாம். ஆனால் தூங்குவதாக நடிப்பவனை ஒரு போதும் எழுப்பவே முடியாது.
    Last edited by Nanban; 16-09-2005 at 12:43 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  9. #33
    புதியவர்
    Join Date
    02 Sep 2005
    Location
    Bangalore
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    கவிதையை எழுதி பதித்து விட்டு அதற்கான பொறுப்பை கவிஞன் தான் ஏற்க வேண்டுமே தவிர நான் அல்ல என்கிறீர்கள். அப்படியானால் யார் அந்தக் கவிஞன்? நான் கேட்டதெல்லாம் அந்தக் கவிஞனைத்தான். நான் அந்தக் கவிஞன் அல்ல என்று ஒதுங்கிக் கொண்டால், பின் யார் வந்து கவிதைக்குப் பொறுப்பேற்பார்கள்?
    ஐய்யய்யோ அந்த "நான் அல்ல" .....நான் ஒரு கவிஞன் அல்ல ஏதோ எழுதுகிறேன் என்ற நோக்கில் சொல்ல வந்தது.More over i tried to use it as an icebreaker.

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கவிதையும் அதை தொடர்ந்த விமர்சனம் பல கேள்விகளை எழுப்புகின்றன.. கவிதை சொல்ல வந்த கருத்தை கல்வெட்டு அவர்கள் கொடுக்கலாமே.. நண்பன் அவர்களின் விமர்சனம் அருமை.. அது உங்கள் கவிதைக்கு கிடைத்திருக்கும் விமர்சனமே. அந்த விமர்சனத்திற்கு பதிலாக , உங்கள் கருத்துகளை கவிதை சார்ந்து சொல்லுங்க கல்வெட்டு.

    இது ஏதோ இரண்டு பேருக்கு இடையே நடக்கும் வாக்குவாதம் போல அமைந்து விட்டது. மன்றத்தில் கவிதை நிறைய எழுதும் நண்ப/நண்பிகள் (பிரியன் தவிர) இதை கண்டுக்காம போகிறார்கள்.. கவிதை ஆர்வலர்கள் நண்பனிடம் விவாதம் / சந்தேகம் கேளுங்கள். கவிதை பற்றிய பல அம்சங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

    இந்த கவிதை எதையும் சுத்திவளைத்து சொல்ல வந்ததாக தெரிவதில்லை.. நண்பன் தனது நேரங்களை செலவு செய்து இந்தளவுக்கு , இந்த கவிதைக்கு விமர்சனம் செய்தது கண்டிப்பாக பாராட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக இருக்காது.. உங்கள் கவிதை தவறான கருத்தில் அமைந்து, இதையே நீங்கள் தொடர்ந்து எழுதிட கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தான்.

    என் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன். கவிதையின் விமர்சனத்தை பற்றி எழுதும் போது விமர்சகருக்கு கவிதையின் கருத்து கொண்டு பதில் சொல்வதே சிறந்தது. தனிப்பட்ட முறையில் தப்பாக நினைக்கவேண்டாம்.
    Last edited by மன்மதன்; 17-09-2005 at 05:51 AM.

  11. #35
    புதியவர்
    Join Date
    02 Sep 2005
    Location
    Bangalore
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    தோழரே நான் இதுவரை சந்தித்த விமர்சனங்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம்
    முதல் வகை . வார்த்தைகளை வைத்து விமர்சனம் செய்பவர்கள்..அதாவது விபச்சாரம் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்று சொன்னவர்கள் அது என்ன பொருளில் வருகிறது என்பதெல்லாம் தேவையில்லாதது இவர்களை விட்டு நான் விலகியே வந்திருக்கிறேன்.


    இரண்டாவது வகை.இது என்னுடைய நண்பர்களிடம் இவர்கள் கவிதையில் என்ன தெரிகிறது என்பதை விட நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை தெளிவாக புரிந்துகொள்வார்கள் எனென்றால் பெரும்பாலும் கவிதை நாங்கள் சந்தித்த ஒன்றோ இல்லை விவாதித்த ஒன்றாகத் தான் பெரும்பாலும் இருக்கப் போகிறது.ஆதலால் விவாதம் என்றாலும் அதை ஒட்டியே நிகழும் ஆனால் எப்போதுமே விமர்சனத்தை தனிப்பட்ட தாக்குதலாக நினைத்தது கிடையாது.மாற்றுக்கருத்தை கொண்டவர் என்பதால் விலகிக் கொண்டதும் கிடையாது.


    உதாரணமாக என்னுடைய கல்லூரி இதழில் கவிதையை திருத்தி வெளியிட ஆசிரியருக்கு உரிமை உண்டு என்று என் நண்பன் சொல்லிய போது தவறு இருந்தால் எழுதியவருக்கு தெரிவித்து அவர் தான் திருத்த வேண்டும் என்று சொல்லி...அப்போது நான் அடித்த கமெண்ட் தான்


    அழகாய் தான் இருந்தது
    பிறந்த
    என் குழந்தை!!
    சாயல் மட்டும் வேறாக!?
    திருத்தப்பட்ட எனது கவிதை.

    மூன்றாவது வகை. நான் இதுவரை சந்திக்காதது கவிதையில் இருந்து புரிந்து கொண்டு விமர்சனம் செய்வது.அதுவும் நான் சிந்திக்காத ஒரு கருத்தை நானே ஏற்றுக்கொள்ளாத ஒரு கருத்தை நான் என் கவிதையில் சொல்லியதாக விமர்சனம் செய்தது..நான் என்ன செய்ய வேண்டும் என்று சுதாரிப்பதற்குள் மிகவும் காட்டமான விமர்சனங்கள்.இப்போது சுதாரிப்பதற்கும் யோசிக்கவும் நேரம் இல்லாமல் தன்னை தற்காத்துக் கொள்ளவே நினைக்கிறது என் மனது .என்னுடைய கருத்து தவறு என்று ஒப்புக்கொள்ள முடியாது எனென்றால் நான் சொல்ல நினைக்காத கருத்து நானே ஏற்றுக்கொள்ளாத கருத்து.இதில் ஏற்பட்ட குழப்பம் தானே ஒழிய வேறு எதுவும் இல்லை.புதிதான ஒன்றை காணும் போது அதை எதிர் கொள்வது எப்படி என்று தெரியாத நிலை தான் என்னுடையது.நன்றி சொல்லத் தெரியாதவன் தான் மன்னிப்புக்கேட்கத் தயங்குவான் எனக்கு இரண்டுமே தெரியும் .ஆதலால் நான் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்.நான் தங்கள் மீது எந்த தனிப்பட்ட வன்மமும் கொள்ளவில்லை எனபதே உண்மை
    இந்த கவிதை உலகிற்கும் சில சிந்தனை மாற்றத்திற்கும் யாரும் எங்களுக்கு வழிகாட்டவில்லை நானும் என் நண்பர்களும் நாங்களே தடுமாறி தடுமாறி வந்தது தான்.நாங்கள் மனுஷ்யபுத்திரனையும்,அறிவுமதியையும் ,அ.மார்க்சையும் நாங்களாக வாசிக்கிறோம் எங்களுக்கு எந்த அளவில் புரிந்து கொள்ளமுடியுமோ அந்த அளவிற்கு புரிந்து கொள்கிறோம். சில இலக்கிய தெரிந்தவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள நினைத்தபோது அவர்கள் எங்களை எப்போதும் மட்டம் தட்டவே முற்பட்டனர் எங்களை இவர்களுக்கு இயந்திரம் மட்டுமே தெரியும் என்றே நினைத்தனர்.
    நீங்களும் மனுஷ்யபுத்திரன் சொன்னதை நான் சொன்ன போது நீங்கள் அதற்கு அழித்த பதில் எற்கனவே
    எனக்கு எற்பட்ட அனுபவத்தைத் தான் நினைவுக்கு கொண்டுவந்தது.உடனடியாக எனக்கு தோன்றியது வழக்கமாக இருக்கும் இலக்கியத் திமிர் என்று தான்.மற்றபடி நான் தங்கள் விமர்சனத்தை தனிப்பட்ட நபரின் மீதான விமர்சனமாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.
    மேலும் நான் கொடுத்திருந்த சுட்டி என்னுடைய தளத்தினுடையது அந்த கவிதை வேறு ஒரு தளத்தில் எற்கனவே கொடுத்துவிட்டதால் நான் அதை இங்கு போடவில்லை இல்லை என்றால் இந்த கவிதைக்கு முன்பாகவே அதை வெளியிட்டிருப்பேன்.எனக்கு பக்குவமில்லை என்பது உண்மை அதை எற்கனவே ஒரு பதிலில் சொல்லிவிட்டேன்.அதற்காக அப்படியே விட்டுவிடுவதுதான் தங்கள் தரப்பு நியாயமோ?
    ஒவ்வொருவரும் அப்படியே விட்டுக்கொண்டுப் போனால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.தாங்கள் தங்களுடைய முதல் அனுபவத்தில் என்னைப் போல் தான் நடந்து கொண்டிருப்பீர்கள் என்று சொல்லமுடியாது என்றாலும் என்னைப் போல் நடந்து கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.இப்பவும் தங்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் தான் பதில் சொல்கிறேன் யார் என்பதை பொருத்து என்னுடைய பதிலை சொல்லவில்லை. ஒரு மனிதர் இல்லை தோழர் என்று நினைத்தே பதில் சொல்கிறேன்.
    Last edited by kalvettu; 19-09-2005 at 08:28 AM.

  12. #36
    இளம் புயல் பண்பட்டவர் jaffer's Avatar
    Join Date
    11 May 2011
    Location
    பாலைவன சோலை
    Posts
    139
    Post Thanks / Like
    iCash Credits
    9,454
    Downloads
    0
    Uploads
    0
    பாரதி கண்ட புதுமை பெண் போல - கவிதையில் ஒரு பொறி வெறி இருக்கு ஆதங்கம் இருக்கு மொத்தத்தில் கவிதை பிடிச்சிருக்கு



    பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். (பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்)

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •