நெருஞ்சி முள்ளாய்
நெஞ்சில் பதிந்தவளே!
குறிஞ்சி மலராய்
கண்டேன்....
உறிஞ்சி கொன்றாயடி
நெஞ்சை................
கணினி என
கண்ணில் பதிந்தவளே!
உன்னை சன்னலாய்
கண்டேன்....
வீசி விட்டாயடி
வீரத்தை...........
கைப்பேசியாய்
கலந்து பதிந்தவளே!
உன்னை மென்பொருளாய்
கண்டேன்.....
மென்று விட்டாயடி
உணர்வுகளை..........
முத்தமிழாய் வந்து
உயிரில் பதிந்தவளே!
உன்னை இசைத்தமிழாய்
கண்டேன்...........
அசைத்து விட்டாயடி
என்னை..........
Bookmarks