Results 1 to 6 of 6

Thread: நெஞ்சில் பதிந்தவளே!

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர் பிரசன்னா's Avatar
    Join Date
    09 Sep 2005
    Location
    இந்தியா
    Posts
    83
    Post Thanks / Like
    iCash Credits
    21,700
    Downloads
    4
    Uploads
    0

    நெஞ்சில் பதிந்தவளே!

    நெருஞ்சி முள்ளாய்
    நெஞ்சில் பதிந்தவளே!
    குறிஞ்சி மலராய்
    கண்டேன்....
    உறிஞ்சி கொன்றாயடி
    நெஞ்சை................

    கணினி என
    கண்ணில் பதிந்தவளே!
    உன்னை சன்னலாய்
    கண்டேன்....
    வீசி விட்டாயடி
    வீரத்தை...........

    கைப்பேசியாய்
    கலந்து பதிந்தவளே!
    உன்னை மென்பொருளாய்
    கண்டேன்.....
    மென்று விட்டாயடி
    உணர்வுகளை..........

    முத்தமிழாய் வந்து
    உயிரில் பதிந்தவளே!
    உன்னை இசைத்தமிழாய்
    கண்டேன்...........
    அசைத்து விட்டாயடி
    என்னை..........
    Last edited by பிரசன்னா; 13-09-2005 at 04:35 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by dukeprasanna
    நெருஞ்சி முள்ளாய்

    கணினி என
    கண்ணில் பதிந்தவளே!
    உன்னை வின்டோசாய்
    கண்டேன்....
    வீசி விட்டாயடி
    வீரத்தை...........

    ...................................
    ...................................


    முத்தமிழாய் வந்து
    உயிரில் பதிந்தவளே!
    உன்னை இசைத்தமிழாய்
    கண்டேன்...........
    இசைத்து விட்டாயடி
    என்னை..........

    சரளமாக நடை போடும் கவிதை மொழியில் இடையிடையே தலை நீட்டும் அந்த ஆங்கில மோகத்தை நீக்கம் செய்தால் கவிதை இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்ராயம். ( இதற்கு மாற்று கருத்து கொண்ட அன்பர்கள் பலரும் உள்ளனர். )

    கருப்பொருளில் கொஞ்ம் முன்னும் பின்னுமாய் போய் வருகிறீர்கள். ஒரு பக்கம் மென்று விட்டாயடி என்று வேதனைப்படுகிறீர்கள் - இன்னொரு புறம் இசைத்துவிட்டாயடி என்னை என்று புளகாங்கிதம் அடைகிறீர்கள்.

    ஒரு கவிதையில் இரண்டு மாற்று கருத்துகள்? ஒன்றை ஒன்று மறிக்கும் அந்த கருத்துகள் கவிதையின் உள்ளடக்கத்தை வலுவிழக்கச் செய்து விடுகின்றன.

    தமிழ்ப் பேராசிரியர் என்று கூறியிருக்கிறீர்கள் - இன்னும் வலுவான உள்ளடக்கமும் செறிவான நடையும் கொண்ட கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.

    தொடர்ந்து எழுதுங்கள்.....
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  3. #3
    இளையவர் பண்பட்டவர் பிரசன்னா's Avatar
    Join Date
    09 Sep 2005
    Location
    இந்தியா
    Posts
    83
    Post Thanks / Like
    iCash Credits
    21,700
    Downloads
    4
    Uploads
    0
    அன்பான நண்பரே

    இசை என்பது இன்பம் தருவது மட்டுமல்ல..
    துன்பத்தின் கனலை மிகுதிபடித்திக்காட்டவும் பயன்படும்.இதற்கு
    சங்க இலக்கிய அகப்பாடல்களே சான்று.
    தங்களின் மாற்றுக் கருத்துக்காக இசைத்து என்பதை அசைத்து என மாற்றுகிறேன்.
    நயமான கருத்துக்கு நன்றி.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கணினி என
    கண்ணில் பதிந்தவளே!
    உன்னை வின்டோசாய்
    கண்டேன்....
    வீசி விட்டாயடி
    வீரத்தை...........
    நல்ல கவிதை.. விண்டோசாய் என்பது மட்டும் உறுத்துகிறது.. அதை தமிழில் எப்படி மாற்றுவது??

  5. #5
    இளையவர் பண்பட்டவர் பிரசன்னா's Avatar
    Join Date
    09 Sep 2005
    Location
    இந்தியா
    Posts
    83
    Post Thanks / Like
    iCash Credits
    21,700
    Downloads
    4
    Uploads
    0
    சன்னலாய் என மாற்றி விட்டேன்
    தங்கள் கருத்துக்கு நன்றி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    Quote Originally Posted by dukeprasanna
    முத்தமிழாய் வந்து
    உயிரில் பதிந்தவளே!
    உன்னை இசைத்தமிழாய்
    கண்டேன்...........
    அசைத்து விட்டாயடி
    என்னை..........

    வாவ் பிரமாதம் அருமை
    என்னச் சொல்லில் செல்ல


    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •