தண்டவாளத்தில்
நடந்து
சென்றுக்கொண்டிருந்தேன்.
அசரீரி கேட்டது.
திரும்பி பார்த்தேன்..
ரயில் ஒன்று வேகமாக
வந்து கொண்டிருந்தது..
அதன் தடதட சத்தம்
எப்படி என் காதில்
விழவில்லை.
உன் நினைவுகளை
அசை போட்ட படி
அசரீரிக்கு நன்றி
சொல்லி விட்டபின்..
தண்டவாளத்தை
ஒட்டி நகர்ந்து
நடந்தேன்...
மன்மதன்
Bookmarks