நண்பன் ஆங்கில புத்தகம் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம்.
ஆங்கிலப் புத்தகம் பக்கம் தலைவைத்து படுக்காத என்னைப் போன்றோருக்கு உங்க பதிவு கண்டிப்பாக உதவும்.
புத்தகத்தை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.
நண்பன் ஆங்கில புத்தகம் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம்.
ஆங்கிலப் புத்தகம் பக்கம் தலைவைத்து படுக்காத என்னைப் போன்றோருக்கு உங்க பதிவு கண்டிப்பாக உதவும்.
புத்தகத்தை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.
பரஞ்சோதி
அது சரி.
அந்தப் புத்தகம் என்ன என்று கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேனே. பார்க்கவில்லையா?
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
டான் பிரவுனின் டாவின்ஸி கோட் என்ற புத்தகமா ?
பரஞ்சோதி
ஆமாம்.Originally Posted by பரஞ்சோதி
ஆங்கிலத்தில் படிக்கக்கூடிய சில புத்தகங்களில் அதுவும் ஒன்று.
கிறிஸ்துவின் வாழ்க்கையைக் குறித்து பல கேள்விகள் உள்ளன. மற்ற அனைவரும் அவருடைய வாழ்க்கையில் நிறைந்து கிடக்கும் மர்மத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரைகள் வடிவில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருந்த பொழுது - இவர் மட்டும் அந்த ஆராய்ச்சிப் புத்தகங்களை அடிப்படையாக வைத்து விறுவிறுவிறுப்ப்ப்ப்ப்பான கதையை எழுதினார். பல மில்லியன் விற்றுத் தீர்ந்ததும் அவர் கதை எழுத அடிப்படையான ஆதார நூல்களும் விற்பனையில் சூடுபிடித்தன. அவர் குறிப்பிட்ட நூல்கள் இரண்டை நானே வாங்கி இருக்கிறேன். முதன்முதலில் கிறிஸ்துவைப் பற்றிய ஆர்வம் வந்தது - குரானில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வாக்கியம் - அவர்- யேசு - மறிக்கவுமில்லை - உயிர்த்தெழவுமில்லை. அப்படியானால் உண்மை தான் என்ன? என்ற ஆவல் எழுந்த பொழுது தான் - Is Jesus lived in India என்ற புத்தகம் கிடைத்தது, தொடர்ந்து - டாவின்ஸி கோட். பின்னர் டாவின்ஸி கோட்-ல் இருந்து The Templar Revelation பிறகு Holy Blood Holy Grail . நேற்று சும்மாவாச்சும் புத்தகக் கடையில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது - மேலும் இரண்டு புத்தகங்கள் - கிறிஸ்துவின் மர்மத்தை வைத்து எழுதப்பட்ட புத்தகங்கள் வந்திருக்கின்றன. டாவின்ஸி கோட் என்ற புத்தகத்தின் வெற்றி - கிறிஸ்துவைப் பற்றிய மறுபரீசீலனைக்கு வித்திட்டிருக்கிறது. அத்துடன் இப்பொழுது பணத்தை அள்ளிக் குவிக்கும் கருப்பொருளாகவும் கிறிஸ்து மாறியிருக்கிறார்.
தட்டுங்கள் திறக்கப்படும் - கேளுங்கள் தரப்படும் என்று கூறியவரை இப்பொழுது எல்லோரும் தட்டிக் கொண்டிருக்கின்றனர். பணம் புகழ் வேண்டி.
இனி புத்தகத்தைப் பற்றி......
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
The Da Vinci Code
Author : Dan Brown.
புத்தக விற்பனை ஒரு மில்லியனைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தான் மட்டும் பிரபலமானது மட்டுமல்ல. அந்த புத்தகம் எழுதுவதற்கு அவர் வாசித்த புத்தகத்தின் பட்டியலைக் கொடுக்க அந்த புத்தகங்களும் விற்பனையில் சூடு பிடித்தன.
புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்படும் கலைப்படைப்புகளும், பேசப்படும் இயக்கங்களும் பிண்ணனி சரித்திரங்களும் உண்மையே என்று ஆசிரியர் அறிவித்து விடுகிறார்,
கதையின் சாராம்சம் இது தான்:
இரண்டாயிரம் வருடங்களுக்கு சற்று முன்னர் இயேசு கொல்லப்படும் பொழுது அவருடைய சீடர்களில் சிலர் மத்தியத் தரைகடல் வழியாக தப்பிச் செல்கின்றனர் - பிரான்ஸ் தேசத்திற்கு. அப்பொழுது அவர்கள் கூட்டிச் சென்ற மிக முக்கியமான நபர் - மேரி மகதாலீன். சரி. இந்த மகாதலீன் யார்?
அவர் - இயேசுவின் காதலி. (மனைவி என்றும் சொல்கின்றனர்.) இயேசுவின் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் அவரைக் கொலைகாரர்கள் மத்தியிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக பல ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து கொண்டு போய்விடுகின்றனர். பிரான்ஸ் தேசத்தில் இயேசுவின் குழந்தை பிறக்கிறது. இயேசு யூதர்களின் அரச பரம்பரையில் தோன்றியவர். ஆதலால் அவர் வழித்தோன்றல்களும் ''blue blooded royals" என்று கருதப்பட அவர்கள் பத்திரமாக வளர்த்தெடுக்கப்படுகின்றனர். இது முதல் நுற்றாண்டு சரித்திரம்.
கிறிஸ்துவ மதம் வேகமாக வளர்கிறது ஐரோப்பாவில். அப்பொழுது ரோம் நகர மன்னனாக இருக்கும் கான்ஸ்டாண்டைன் என்ற மன்னன் கிறிச்துவ மதத்தின் ஆற்றலை உணர்ந்து கொள்கிறான். அதனால் அந்த மதத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டால் மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு உயரும் என்று நினைக்கிறான். ஆனால் அதுவரையிலும் அவன் இருந்திருந்த இயற்கை வழிபாட்டு முறைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.
இயேசு அது வரையிலும் ரத்தமும் சதையுமான ஒரு மானிடனாகத் தான் மதிக்கப்பட்டார் - இறைவனாக அல்ல. அவர் ஒரு மனிதப் பிறவி தான். ஆனால் கான்ஸ்டாண்டைன் இயேசுவை ஒரு கடவுளாக உயர்த்தினான். பழைய பைபிளை அழிக்க உத்தரவிட்டான். புதிய பைபிளை எழுத ஆட்களை நியமித்தான்.
இந்த கலப்படத்தை ஏற்காத கிறிஸ்துவர்களைக் கொலை செய்ய ஏற்பாடுகள் செய்தான். பழைய பைபிளை வைத்திருப்பது குற்றமாக்கப்பட்டது. வைத்திருந்தவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். church என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இயேசுவின் வாழ்க்கையில் பங்கு பெற்ற மேரி மகதாலீனை எவ்வாறு கழற்றி விடுவது என்று விவாதிக்கப்பட்டு இறுதியில் அவர் ஒரு விபச்சாரியாக மாற்றப்பட்டாள். இவ்வாறு கிறிஸ்துவ மதம் தலைகீழ் உருமாற்றப்பட்டு வளர்க்கப்பட்டது. இதற்கு முழுமையாக துணை நின்றது சர்ச்.
இதற்கிடையே மேரி மகாதலீனின் மூலமாகப் பிறந்த அரச ரத்தங்கள் மேலும் தீவிரப்பாதுகாப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மேரியையும் அவர் இயேசுவுடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும் பத்திரப்படுத்தி அவற்றை குறிப்பதற்காக ஒரு குறியீடு உருவாக்கப்பட்டது - அது தான் ஹோலி க்ரெய்ல். (Holy Grail) இந்த ஆவணங்கள் எல்லாம் அவ்வப்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பாதுகாப்பு இயக்கத்தின் பெயர் தான் Priory of Sion.
இதற்கிடையே 13ஆம் நூற்றாண்டில் வாடிகன் சில அரசர்களின் துணையோடு இந்த ஆவணங்களைக் கைப்பற்றி அழிக்க முயல்கிறது. அந்த வேட்டையாடுதலில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிறிஸ்துவர்கள் - வாட்டிகனின் அதிகாரத்தை ஏற்காதவர்கள் - தேவாலயத்தின் படைகளால் கொலை செய்யப்படுகின்றனர்.
ஆபத்தை உணர்ந்த மேரியின் ஆதரவாளர்கள் தலமறைவாக இயங்க ஆரம்பிக்கின்றனர். அனைத்து ஆதாரங்களையும் இன்று வரையிலும் பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றனர் - இன்றளவும். ஆம. Priory Of Sion என்பது கற்பனையல்ல. இதன் உறுப்பினர்களின் பெயர்களைக் கேள்விப்பட்டால் அசந்து விடுவீர்கள் - சர் ஐசக் நியூட்டன், லியார்னாடோ டா வின்சி, போன்ற பிரபலங்களெல்லாம் இதில் உறுப்பினர்களாக இருந்திருக்கின்றனர்.
(இப்பொழுது வாட்டீகன் ஒத்து கொண்டுள்ளது - மேரி மகதாலீன் விபச்சாரி அல்ல - கிறிஸ்துவின் காதலி என்று. இதன் மூலம் வாட்டீகன் மறைமுகமாக ஏற்றுக் கொள்வது இந்து மத தத்துவங்களை. இது பற்றி தேவைப்பட்டால் வேறிடத்தில் பதிவுகள் செய்யலாம்.)
இது தான் சரித்திரப் பின்ணணி.
நாவல் எப்படி எழுதப் பட்டிருக்கிறது? சங்கேத குறியீடுகளை ஆராய்வதும் அதை மாணவர்களுக்குச் சொல்லித்தருவதும் தான் வேளையாகக் கொண்டுள்ள ராப்ர்ட் லாங்டன் என்ற பேராசிரியரைச் சந்திக்க விரும்புகிறார் - பாரீஸ் கலைகூடத்தின் பாதுகாவலர். அந்த சந்திப்பு நிகழ்வதற்கு முன்னரே அவர் கொலை செய்யப்படுவிடுகிறார். ஆனால் இறந்த அவர் சில குறிப்புகளை விட்டுச் செல்கிறார். அது அவரது பேத்தியை லாங்டனுடன் சேர்க்கிறது. இருவரும் இணைந்து குறிப்புகளைப் பின் தொடர்ந்து வந்து தேடிச் செல்கின்றனர். ஆங்கில சரித்திர ஆய்வாளர் ஒருவரும் துணைக்கு வர கதை லண்டன் நகருக்கு போகிறது. அங்கு சில தேடல்களுக்குப் பிறகு இறுதியாக குறிப்பிட்ட தேவாலயத்தை அடைகின்றனர். அங்கு அவர்கள் தேடி வந்த ஆவணங்க்ள் கிடைக்கவில்லை என்றாலும் சோபியா - பாரீஸ் கலைகூடத்தின் தலைவரின் பேத்தி தன் தம்பியைக் கண்டுபிடிக்கிறாள்.
இதுதான் கதை.
கதையில் லியானார்டோ டாவின்சியின் ஓவியங்களில் மறைந்து காணப்படும் குறியீடுகளைப் பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டே போகிறார் ஆசிரியர். கதையை மேலும் நன்றாக ரசித்துப் படிக்க வேண்டுமென்றால் Breaking the Da Vinci Code என்ற குறுந்தகடை
ஒரு முறை பார்த்து விடுங்கள்.
இந்தப் புத்தகம் வெளி வந்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்றாலும் இதில் சொல்லப்படும் செய்தியை மறுத்தோ ஏற்றோ எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் மௌனம் காத்தது. பின்னர் தயக்கத்துடன் ஒரு அறிக்கை வெளியிட்டது அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டாம் என்று. ஆனால் அந்தப் புத்தகம் எழுப்பிய பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் சொல்லவில்லை. அடக்கி அடக்கி வைத்தே பழக்கப்பட்ட சர்ச் அமைப்புகள் இன்னமும் அதே கொள்கையில் தான் நிற்கின்றனர்.
வாங்கிப் படித்துப் பாருங்கள். விறுப்பான புத்தகம்.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
இந்த புத்தகத்தத இணையத்தில் இருந்து பிரிண்ட் எடுத்திருக்கிறேன், ஆனால் படிக்கவில்லை. விரைவில் படிக்கிறேன்.
நன்றி நண்பன்.
பரஞ்சோதி
முடிந்தால் எனக்கும் அனுப்பி வையுங்கள் அண்ணா. ஆச்சரியமாக இருக்கிறது. எது கதை என்று தெரியவில்லை. வேதாகமப்படி அவர் சுத்தமான பிரம்மச்சாரியாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறார். அவரைப்பிரேமித்தவர்கள் ஏராளம். அவர் அனைவரையுமே சமமாகவே பாவித்தார். தேவகுமாரனை சந்தேகிப்பது என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. ஆனால் எழுத்தாளரின் திறமையைக்காணவேண்டும் என்பதற்காகவே கேட்கிறேன்.Originally Posted by பரஞ்சோதி
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
பணி நிமித்தம் நேரம் கிடைப்பது குறைவாக உள்ளது. வீட்டில் கணினி பழுதுபார்க்கப்பட்டவுடன் கண்டிப்பாக எழுதுகிறேன் நண்பன்.Quote:
Originally Posted by kavitha
சென்ற வாரம் நூலகத்தில் எடுத்த "கவிதை மொழி" என்ற புத்தகத்திலிருந்து சங்க கால பெண்பால் புலவர்கள் பற்றியச் செய்திகள் கிடைத்தன. அதைக்கொடுக்கலாம் என்றிருந்தேன்.
ஐய்யோ.... இந்த மாதிரியான புத்தகங்களைப் பற்றிய குறிப்புகள் எழுதுவதற்கெல்லாம் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உடனே அது பற்றி எழுதுங்கள்.
எந்த குறிக்கோளுமற்ற நாவல்களையோ அல்லது வியாபர நோக்கம் மட்டுமே இலக்கு என கருதி எழுதப்படும் பல புத்தகங்கள் தான் இன்று நூலகங்களில் இருந்து எடுத்து வாசிக்கப் படுகின்றன. இத்தகைய புத்தகங்களை யாரும் காசு கொடுத்து வாங்கப் போவதில்லை. அதனால் தான் காசு கொடுத்து வாங்கிய தரமான புத்தகங்களைப் பற்றி எழுதுங்கள் என்று வேண்டுகோள் வைத்தேன்.
ஆனால் நூலகங்களிலிருந்து தரமான புத்தகங்களை எடுத்து வாசிக்கும் உங்களுக்கு இதிலிருந்து விடுதலை. எல்லோருக்குமே - பெரும்பாலும் கடைகளில் கிடைக்காத இத்தகைய நல்ல புத்தகங்களை வாசித்தால் கண்டிப்பாக அது பற்றி எழுதுங்கள்.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
விரைவில் அனுப்பி வைக்கிறேன்.Originally Posted by kavitha
பரஞ்சோதி
நீங்கள் சொல்லும் வேதாகமமே உண்மையில்லை. அது இடைச்செருகல் நிறைந்தது. 4ஆம் நூற்றாண்டிலிருந்து பலவகையான இடைச் செருகல்கள் புகுத்தப்பட்டது. இயேசுவை இறைவனாக உயர்த்தும் முயற்சியில் அந்தக் காலத்தில் தூய்மையாகக் கருதப்பட்ட பிரம்மாச்சாரியாக்கப்பட்டார். மேலும் அவருடைய வாரிசுகளை அவருடன் தொடர்பற்றுச் செல்ல வைக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. இல்லையென்றால் இறைவனின் வாரிசுகள் இவ்வுலகில் கிறிஸ்துவின் பெருமைக்கும் புகழுக்கும் பங்கு கேட்டு வந்துவிட மாட்டார்களா? அதனாலும் அவரைப் பிரம்மாச்சாரியாக்கி விட்டால் இந்தத் தொல்லையே இல்லை அல்லவா? அவருடைய காதலியை வேசி என்று தூற்றுவதன் மூலம் இயேசுவின் வழித்தோன்றல்களும் அழிந்து விடுவர் என்று நம்பப்பட்டது. என்றாலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். யாருமே இயேசுவின் நடவடிக்கைகளைக் குறை சொல்லவில்லை. அவரை மோசடிக்காரர் என்று அழைக்கவில்லை. என்ன அவரைப் பற்றிய உண்மைகளை மறைத்து அவருடைய புகழையும் செல்வாக்கையும் தங்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டது - மத குருமார்கள் கொண்ட குழு. அதன் மூலம் அவர்கள் தங்களை வலுவாக்கிக் கொண்டனர். இன்று அவர்களே கிறிஸ்துவின் ராஜ்ஜியத்திற்கு சகலமும் நாங்களே என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். ஆனால் உண்மைகள் சுட்டெரிக்கத் தொடங்கும் பொழுது சில உண்மைகளை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு அவர்கள் ஒப்புக் கொண்டது தான் - மேரி மகாதலீன் வேசி அல்ல ஆனால் அவர் இயேசுவின் காதலி என்று. காலம் கடந்த ஞானோதயம். என்றாலும் வரவேற்கத்தக்கது.Originally Posted by kavitha
இந்த வரலாற்றுத் திருத்தங்களுக்கு முந்தைய அழிக்கப்பட்ட பைபிளின் பிரதிகள் கிடைத்துள்ளன. அவை உண்மையானவையா என்ற விஞ்ஞானப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
கேள்வி கேட்காமல் ஏற்கப்பட்ட நம்பிக்கைகள் மத அடிப்படைவாதங்களைத் தோற்றுவிக்கிறது. நம்பிக்கைகள் குறித்து கேள்வி எழுப்புவதும் அது குறித்து தேடுதலில் இறங்குவதும் - எந்த வகையிலும் இறைவணக்கத்தைப் பாதிப்பதில்லை - மாறாக மதங்களை அடிப்படை வாதத்தில் இருந்து மீட்டெடுக்கும். மேலும் எப்பொழுதுமே வரலாற்றில் உண்மைகளை மறைத்துவிட முடியாது. ஏனென்றால் அவ்வாறு மறைக்க முயலும் பொழுது அது நிழலுலகில் வாழ ஆரம்பிக்கிறது. ரகசிய குழுவாக மாறுகிறது. உண்மைகளை தலைமுறை தலைமுறையாக அழியாமல் பாதுகாக்கிறது. அவ்வாறான சில உண்மைகள் தான் இந்தக் கதையின் பின்னணியும்.
இன்னமும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன - இரண்டு தளத்தில். ஒன்று இயேசுவின் தந்தை யார்? இயேசு மறிக்கவில்லை - சிலுவையில் அறைந்த பொழுது. தப்பித்துவிட்டார். அப்படியானால் அவர் எங்கே சென்றார்? எப்படி வாழ்ந்தார்? இந்த ஆராய்ச்சிகளின் விடையாக சில குறிப்புகள்:
இயேசு பிறக்கும் காலத்திற்கு சற்று முந்தைய காலத்தில் - நசரைன் என்று குறிப்பிடப்படும் சன்னியாசிகள் ஜெருசலம், நாசரேத் இந்த நகரங்களைச் சுற்றியுள்ள வனாந்திரங்களின் குகைகளில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பெரும்பாலும் யூத மதங்களின் மீது அவநம்பிக்கைக் கொண்டு, இறைவனை அடைய மாற்று வழி தேடியவர்கள். கிட்டத்தட்ட புத்த மதங்களின் சாயலுள்ள கொள்கைகளில் பிடிப்புடன் வாழ்ந்துள்ளனர். இவர்களுக்குக் குடும்பங்கள் கிடையாது. ஆனால் தங்கள் இனம் அழிந்து விடாமல் காப்பதற்காக பெண்களுடன் குழந்தை பேற்றிற்காக மட்டும் உறவு கொண்டு அந்தக் குழந்தைகள் குறிப்பிட்ட வயதடைந்ததும் தங்களுடன் வந்து இணைந்து கொள்ள வேண்டும் என்ற வழிமுறையைப் பின்பற்றினார்கள். இது அந்த காலகட்டத்தில் தவறாகப் படவில்லை யாருக்கும். கிட்டத்தட்ட இதை மகாபாரதக்கதையுடன் ஒப்பிட்டு நோக்கலாம். குழந்தை பேற்றிற்காக முனிவருடன் கூடி பிள்ளை பெற்றுக் கொண்டது போல. மரபுகளை ஒட்டியே இந்த வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. ஆகையால் யாரும் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதுபோல மேரியுடன் இணைந்த ஒரு துறவியின் மகன் தான் இயேசு. இயேசு பிறந்த பொழுது வானில் தோன்றிய அறிகுறிகளை வைத்து கிட்டத்தட்ட கிறிஸ்துவின் வயதையும் அனுமானித்துக் கூறிவிட்டார்கள். ( எல்லாம் விஞ்ஞானம், விஞ்ஞானம்... ) அவர்களைத் தேடி வந்த அந்த கீழை நாட்டு அறிஞர்கள் யார் தெரியுமா? லாமாக்களை வழிபடும் புத்தர்கள். ஆம் - இயேசு பிறந்த பொழுது தோன்றிய அறிகுறிகள் - லாமாக்களைக் குழந்தையாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கமுள்ள புத்த பிக்குகளிடமிருந்து தான் அந்த மூவரும் பயணம் செய்து அந்தக் குழந்தையை - இயேசுவை - வாழ்த்தி தகுந்த வயதில் அழைத்துச் செல்வதாகக் கூறி சென்றார்கள். பின்னர் இயேசு தனது பதின்மூன்றாவது வயதில் இந்தியா வந்தார். நம்புங்கள் - இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் - எட்டு வருடங்களாக - அதாவது ஜெருசலத்திற்கு இருபத்தோராவது வயதில் திரும்பும் வரை. இந்த எட்டு வருடங்களில் அவர் புத்த மதத்தைக் கற்று கொண்டார் - பல்வேறு மடங்களில் - இமயத்தின் மடியில் உள்ள மடங்களிலிருந்து. ஜெருசலம் திரும்பும் முன்பு ஒரு வருடம் பூரி ஜெகன்னாத் கோயிலில் தங்கிய்ருந்து வேதங்கள் கற்றுக் கொண்டார். பின்னர் அவர் ஜெருசலம் திரும்பினார். பிரச்சாரத்தில் ஈடுபட்டார் - எந்த பிரச்சாரம்? தான் கற்றுக் கொண்ட புத்த+இந்து மத கொள்கைகளைப் பற்றி. யூதர்களின் நம்பிக்கைக்கு மாறான இந்த பிரச்சாரம் கோபம் கொள்ள வைத்தது. அவரை வேட்டையாடத் தொடங்கினார்கள். அவர் உயிருக்கு ஆபத்து வருவதை அறிந்த அவரது சீடர்கள் - அவரைப் போல உருத்தோற்ற ஒற்றுமை உள்ள ஒருவரை யூதர்களிடம் ஒப்படைத்து விட்டு அவரை கடத்திக் கொண்டு போய்விட்டனர். எங்கே?
நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் - ஆம், இயேசு இந்தியாவிற்குக் கடத்தி வரப்பட்டார் - அவருடைய சீடர்களால். மீதமிருந்த அந்த நாட்களை அவர் இமயத்தின் மடியில் காஷ்மீரத்தில் - இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமியில் - காலம் கடத்தினார். ஏன் அவர் காஷ்மீரத்தில் கிறிஸ்துவ மதத்தை ஸ்தாபிக்கவில்லையா? இல்லை. ஏனென்றால் அவர் எப்பொழுதுமே ஒரு மதத்தை நிறுவ வேண்டும் என்று எண்ணியதேயில்லை. அவர் அன்பையும் நேர்மையையும் பிரச்சாரம் செய்தார். தன் சீடர்களிடம் அவ்வாறே செய்யுமாறு கூறினார். அப்படியானால் இப்பொழுதுள்ள கிறிஸ்துவமதம் எப்படி வந்தது. இயேசுவின் பேரால் - கிறிஸ்துவமதத்தின் பல கூறுகளையும் நிறுவியவர் - பால் - இத்தாலியிலிருந்து. ஆமாம் நவீன உலகின் கிறித்துவம் இயேசுவின் பெயரை மட்டும் தான் உபயோகித்து கொண்டதே தவிர - இயேசு போதித்தது அன்பை மட்டும் தான். இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் படியுங்கள் - Is Jesus Lived in India என்ற புத்தகத்தை. இன்னமும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. ஒன்று மட்டும் உண்மை - இவ்வுலகில் இயேசுவுக்கு கிடைத்ததெல்லாம் இறைவனாக உயர்த்தப்பட்டு வணக்கத்திற்குரியவாராக ஆக்கப்பட்டது மட்டுமே. ஆனால் அதற்காக அவர் கொடுத்த விலை - குடும்பம் என்ற அமைப்பை.
Da Vinci Code - இந்த புத்தகம் மொத்தம் 490 பக்கங்கள் உடையது. எப்படி பிரதியெடுத்தீர்கள்? அல்லது சுருக்கப்பட்ட பதிப்பா? ஒருமுறை சரி பாருங்கள்.
Last edited by Nanban; 20-09-2005 at 06:34 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
Is Jesus Lived in India இந்த புத்தகமும் என் வீட்டில் இருக்கிறது, இதுவரை படிக்கவில்லை. அதில் நிறைய படங்களோடு ஆதாரம் காட்டியிருப்பார்கள். குறிப்பாக தற்போதைய பாகிஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் அவர் வாழ்ந்த அடையாளங்கள் சொல்லியிருப்பார்கள். ஒரு ரஷ்ய எழுத்தாளர் எழுதிய புத்தகம் என்று நினைக்கிறேன்.
டாவின்ஸி கோட் 383 பக்கங்கள் கொண்ட புத்தகமாக இ-புக் கிடைத்தது, அதை பிரிண்ட் எடுத்தேன்.
பொதுவாக பிற மதங்களைப் பற்றிய சர்ச்சைக்குறிய புத்தகங்களை படிப்பது இல்லை, அவ்வாறு படித்தால் அதைப் பற்றி விவாதிக்க பிற மதத்தவரையே நாட வேண்டும், அது அவர்களின் மனதை துன்புறுத்தும் என்று நினைக்கிறேன்.
பரஞ்சோதி
விரிவான விளக்கத்திற்கு நன்றி நண்பன்.
Last edited by பரஞ்சோதி; 21-09-2005 at 05:10 AM.
பரஞ்சோதி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks