அதாவது உலகப் புகழ் பெற்ற மொகலாயச் சக்ரவர்த்தி அக்பருக்கு எழுதப் படிக்கவே தெரியாது. அவர் குழந்தையாக இருந்த போது, இரண்டு ஆண்டுகள் ஆரம்ப கல்வி மட்டும் தான் படித்தாராம். ஆனால் அவர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், கலை, கவிதைத் தத்துவம் என்று எடுத்துக் கொண்டு விவாதிப்பதைக் கூர்ந்து கேட்டு, அதை அப்படியே கிரகித்துக் கொண்டு, எழுந்து விடாமல் அப்படியே திருப்பிக் கூறும் திறமை இருந்தது. போரில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் அவர் புகழ் வாங்கியிருந்ததற்குக் காரணம், அவரது அறிவாற்றல்தான்.
பெருந்தலைவர் காமராஜரின் வெற்றிக்கு காரணம், உள்மனதில் உறங்கிக் கிடந்த ஆற்றலை உசுப்பி விட்டு உழைத்ததுதான்.
அமெரிக்க ஜனாதிபதிகளில் டரூமேன், க்ளீவ்லாண்ட், ஆண்ட்ரு ஜான்சன், லிங்கன், ஃபில்மோர், டெய்லர், வான்பரன், ஜாக்ஸன, வாஷிங்டன் முதலான ஒன்பது ஜனாதிபதிகளும் கல்லூரிப் படிப்பே படித்ததில்லை. இவர்களில் ஆண்ட்ரூ ஜான்சன் மழைக்கு கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லையாம்.
உலகப் புகழ் பெற்ற நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் படிப்பு என்று பார்த்தால், வெறும் ஐந்தாண்டு பள்ளிப் படிப்புதானாம்.
மோட்டார் மன்னன் ஹென்றி ஃபோர்ட், ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தில் சில ஆண்டுகளே படித்தவராம்.
நியூயார்க் மாநிலத்தின் கவர்னராக நான்கு முறை பதவி வகித்த அல்ஸ்மித்தின் பள்ளிப் படிப்பு ஏழாண்டு காலம்தான்.
புகழ்பெற்ற பொருளியல் வல்லுனர் ஜியார்ஜ், தனது பதினான்கு வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர். பொருளியலை முறையாக படித்ததில்லை. ஆனால் அடிப்படை பொருளியல் விதிகளைப் புரிந்து கொண்டு, உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியவர்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மிகப் பெரிய ஞானி. அவர் படித்தது உலகமெனும் பல்கலைக் கழகத்தில்தான்.
காப்பு விளக்கைக் கண்டுபிடித்த சர்ஹம்பரி டேவி, ரைட் சகோதரர்கள், எடிசன் இவர்கள் எல்லாம் படித்தது அனுபவ பள்ளியில்தான்.
Bookmarks