Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 32 of 32

Thread: வருங்கால தொழிலதிபர்களே!

                  
   
   
  1. #25
    புதியவர்
    Join Date
    27 Jun 2005
    Location
    Mumbai
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    0
    Uploads
    0

    நலமா பரஞ்ஜோதி,

    நலமா பரஞ்ஜோதி,
    நான் ஊருக்கு தகவல் அனுப்பியாயிற்று.. இன்னும் ஒரு சில தினங்களில் படம் அனுப்பி வைப்பார்கள். நான் உஙளுக்கு எப்படி அனுப்ப?.. இணையத்திலே அனுப்பவா? அல்லது தபாலில் அனுப்பவா?...

    இங்கே அலுவலகத்தில் செம வேலை... என்ன பண்ண ?... எனக்கு சொந்த வியாபரத்தில் தான் நாட்டம் அதிகமாக உள்ளது...ம், ம் பார்ப்போம்.. நம் வாழ்க்கை நம் கையில்...

  2. #26
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    வாங்க அனிதன்.

    படங்க இங்கேயே போடுங்கள். மேலும் அலுவலகத்தில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும், அதை முதலாக போட்டு தொழில் செய்ய வேண்டும். அப்போ தான் இரண்டுக்கும் நல்லது.
    பரஞ்சோதி


  3. #27
    புதியவர்
    Join Date
    27 Jun 2005
    Location
    Mumbai
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    வாங்க அனிதன்.

    படங்க இங்கேயே போடுங்கள். மேலும் அலுவலகத்தில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும், அதை முதலாக போட்டு தொழில் செய்ய வேண்டும். அப்போ தான் இரண்டுக்கும் நல்லது.
    ஆமாம் பரஞ்ஜோதி,
    நீங்கள் சொல்வது சரிதான்... முதலில் கொஞ்ச காலத்திற்கு, அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொன்டே தொழில் பார்ப்பது தான் நல்லது..தொழில் சிறப்பாக ஆகும் பட்சத்தில் அதை முழு நேர வேலையாக ஆக்கலாம்..
    மிகச் சரியான முடிவு....

  4. #28
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Feb 2007
    Posts
    447
    Post Thanks / Like
    iCash Credits
    29,838
    Downloads
    149
    Uploads
    5
    ஆஹா அற்புதம் என்ன அருமையான உரையடல்கள்
    Last edited by drjperumal; 12-02-2007 at 01:59 PM.

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by drjperumal View Post
    ஆஹா அற்புதம் என்ன அருமையான உரையடல்கள்
    தாங்கள் படித்த நல்ல விசயங்களையும் பகிர்ந்துக்கொள்ளலாமே..

  6. #30
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Feb 2007
    Posts
    447
    Post Thanks / Like
    iCash Credits
    29,838
    Downloads
    149
    Uploads
    5
    தினமும் கவனிக்க வேண்டிய குறிப்புகள்

    பன்னாட்டு தொழில் சுற்றுலா மேற்கொள்ளப் போகிறவர்கள் சந்திக்கின்ற சவால்கள், இடர்பாடுகள் பல வெளிப்படையாக தெரிந்தும் தெரியாமலும் நடக்கின்றன. சாதாரண தானியங்கி டெல்லர் எந்திரம் (TELLER) இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போய்விடும். உணவகங்கள் தேவைப்படும் நேரத்தில் திறக்கப்படாமல் இருக்கலாம். இப்படி வளங்கள், வாய்ப்புகள் பல இருந்தபோதும் பயன்படுத்திக் கொள்ள முடியாத சிக்கல்கள் தோன்றும்.

    அடிக்கடி பன்னாட்டு அளவிலான பயணங்களை மேற்கொள்ளும் மேலாளர்கள் கரடுமுரடான பல்வேறு சிக்கல்களினூடே தாங்கள் கற்றுக் கொண்டதை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர்.

    நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்

    எந்த நாடும் விதிவிலக்கின்றி, பல்வேறு தொழில்களும் இன்று உலகமயமாகி வருகின்றன. தொழில் நடவடிக்கைகளாகவோ, கிளை நிறுவனங்களாகவோ, முகவர்களாகவோ உலகெங்கிலும் பரந்து விரிந்துள்ளன. இதனால் "ஊக்கத்தோடு உலகெங்கிலும் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள முனையுங்கள். அதுவும் உங்களின் பயணத்திற்கும் முன்பாகவே அந்நாட்டில் உள்ள நண்பர்களைப் பெறுவதற்கான வழிகளை திட்டமிட்டு விடுங்கள்"

    திட்டங்களை வைத்திருங்கள்

    "தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக எப்போது சென்றாலும் 'திகிலூட்டும் பொருட்களடங்கிய பெட்டி'யை தூக்கிக்கொண்டு கஸ்டம்ஸ் வழியாகச் செல்வதற்கு திட்டமிடாதீர்கள். அப்படி செல்லும்போது 50 விழுக்காடு சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன"

    "உங்கள் பெட்டியில் கண்காட்சிக்கான விவரக்குறிப்பேடுகள், அறிவிப்புகள் இடங்களைச் சுட்டும் வரைபடங்கள் இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு செல்லலாம். உங்கள் தொழிலுக்கான அடையாள அட்டை, தங்கும் ஓட்டல் போன்ற விவரங்களோடு சென்றால் சிக்கல் எதுவும் வராது"


    தொலைப்பேசியை சரியாகப் பயன்படுத்துங்கள்
    விமானத்தில் பறக்கும் முன்பே அயல்நாடுகளில் உள்ள பணம் செலுத்திப்பேசும் தொலைபேசிகளை (Pay Phone) எப்படி, எவ்விதம் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்" மேலும் அங்குள்ள ஆப்ரேட்டர்கள் எவ்வித உதவியும் செய்யப்போவதில்லை, நீங்களேதான் அதை அறிந்து கொள்ள வேண்டும் . தொலைபேசியில் பேசுவதற்காக நீங்கள் வாங்கி வைத்திருக்கும் அழைப்பு 'அட்டை'களை முழுமையாகப் பயன்படுத்த அறிந்து கொள்ளுங்கள்.

    பணத்தை பகிர்ந்து வையுங்கள்

    உங்களுடைய பணத்தை பணப்பை (மணிபர்ஸ்), பாஸ்போர்ட், பெட்டிகள் இதர பைகள் என பலவற்றிலும் பகிர்ந்து வையுங்கள். "இந்த வழிதான் நீங்கள் ஏமாளியாகி விடாமல் தடுப்பதற்கான ஒன்றாக இருக்கும். அல்லது கடன் அட்டை (credit card) களை வைத்திருந்து பயன்படுத்தலாம், கடந்த இரண்டாண்டுகளுக்குமுன் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக உலகப் பயணம் ஒன்றை மேற்கொண்டேன். அப்பொழுதுதான் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த பிறகு இந்த வழியையே கற்றுக் கொண்டேன்"

    அறையைவிட்டுச் செல்லும் முன்...

    உங்களுடைய அறையை பாதுகாப்பதற்கான வழிகளில் ஒன்று. நீங்கள் அறையைவிட்டுச் செல்லும்முன் அறைக்கதவில் 'யாரும் தொந்தரவு செய்யாதீர்கள், என்ற கதவொட்டிகளை (ஸ்டிக்கர்) ஒட்டி வைத்துவிடுங்கள்" அறைபுகுந்து திருடும் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக தொலைக்காட்சியை ஓட விட்டோ, விளக்குகளை எறிய வைத்துவிட்டோ செல்லுங்கள். திரும்பி வந்தவுடன், செல்லும்போது இருந்தபடியே அறை இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.

    இரண்டு அறைகளைப் பதிவு செய்யுங்கள்

    வெளிநாட்டில் உள்ள நகரமொன்றுக்கு புதிதாகச் செல்கிறீர்கள் என்றால் இரண்டு வேறுபட்ட ஓட்டல்களில் இருவேறு அறைகளை முன்பதிவு செய்து விடுங்கள். "தங்களுக்கு இடம் கிடைக்காமல் சிரமப்படக்கூடிய வாய்ப்புகளைத் தவிர்ப்பதற்காக இருவேறு அறைகளைப் பதிவு செய்யுங்கள். ஒன்று கிடைக்கா விட்டால் இன்னொன்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்குப் பழக்கமில்லாத நகரங்களுக்குச் செல்லும்போது, தங்குவதற்கு இடமின்றி அவதிப்படுவதை தவிர்க்கும் பொருட்டு இதை செய்தாக வேண்டும்" * புத்துணர்வோடு இருக்க

    "பன்னாட்டு விமானங்களில் பறக்கும்முன் புதிய ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் எப்பொழுதும் எடுத்துச் செல்வேன்" மேலும், "விமானத்தை விட்டு இறங்கியவுடன் முதலில் நான் செய்யும் பணி என்னுடைய முகத்தை தூய்மையாகக் கழுவி, புத்துணர்வூட்டும் புதிய ஆடைகளை உடுத்தி, தலையை வாரி விடுவேன். இது மிகச்சிறிய ஒரு பணிதான் என்றாலும் பெரிய மாற்றத்தை செய்துவிடக்கூடிய ஒன்றாகும். இதனால் சோர்வூட்டும் எண்ணங்கள் நீங்கி விடும்"

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இளம் முதலாளிகளுக்கு.. டாக்டர். பெருமாளின் அறிவுரைகள்... அமுதமாக இருக்கிறது...

    இன்னும் கொடுங்கள் டாக்டர்...

  8. #32
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Feb 2007
    Posts
    447
    Post Thanks / Like
    iCash Credits
    29,838
    Downloads
    149
    Uploads
    5
    வாழ்க்கையில் ஒரு குறிக்கோள்;

    வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு அவன் எந்த நிலையில் இருந்தாலும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவன் வாழ்க்கையில் ஒரு அர்த்தமே இருக்காது. அவனும் பறவையினமும் மிருகங்களும் ஒன்றhகவே கருதப்படுவர்.
    குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள ஆஸ்திக சம்பந்தமான நுhல்களை படிப்பது அதன் வழி நடக்க முயற்சிப்பது மிக அவசியம். அவ்வாறு தான் ஞானிகளும் சாதுக்களும் தங்களது அறிவுரைகளில் கூறுகிறhர்கள். கடவுளை அடைய பல சுலபமான வழிகளை விதிகளையும் போதிக்கிறhர்கள். மனிதன் தான் அன்றhடம் செய்யும் தனது தொழிலை செவ்வனே செய்து செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்து வந்தால் கடவுள் அவனுக்கு வேண்டியதை வேண்டும்படி தந்து விடுவார்.

    63 நாயன்மார்களில் அதி பக்த்த நாயனார் என்பவர் உலக பற்றா;று வாழ்ந்து வந்தவர். செம்படவர் (மீனவர்) குலத்தில் பிறந்தவர் எனினும் சிறந்த சிவ பக்தர். சிறந்த பக்தர்களைத்தான் ஆண்டவன் சோதிப்பது வழக்கம். அவருக்கு பலவித சோதனைகளை உருவாக்கினார். அவை அனைத்தையும் கடந்தும் அவர் தனது கொள்கையை கை விடவில்லை. இவர் தனது தொழில் மீன் பிடிப்பது என்பதையும் அதனை விற்றுத்தான் தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதையும் அறிவார். ஆயினும் அவர் தனது வலையில் ஒவ்வொரு நாளும் முதலில் சிக்கும் மீனை மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார். இதை அவர் இறைவனுக்கு அற்பணிப்பதாக கருதி செய்து வந்தார். பிறகு கிடைக்கும் மீன்களையே தனது தொழிலுக்கு பயன்படுத்தி வந்தார். இப்படிப்பட்ட இவரை ஆண்டவன் கோதிக்க எண்ணினார். அதன் விளைவாக ஒரு நாள் அவரது வலையில் ஒருமீன் மட்டும் அகப்படும்படி செய்தார். அந்த மீனை பிடித்த பக்தர் மீண்டும் அப்படியே கடலில் செலுத்தி விட்டார். மீண்டும் பல நாள் அவருக்கு மீன் கிடைக்காமல் இருக்கும்படி செய்தார். ஆனாலும் அந்த பக்தர் தன் கொள்கையை கைவிடவில்லை. ஒரு நாள் அவரது வலையில் திடீரென ஒரு மீன் அகப்பட்டது அதன் உடல் முழுவது பொன்னாலும் அதன் மீது வைரங்கள் பதித்ததாகவும் அது காணப்பட்டது. மீனவர் (பக்தர்) அந்த மீனை பிடித்து மீண்டும் கடலிலேயே விட்டு விட்டார். அவனை சுற்றி இருந்த சுற்றத்தாரும் மற்றவர்களும் அவரை பலவாறு ஏசினார்கள். அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. அவர் அவர்களுக்கு நான் தினமும் முதலில் கிடைக்கும் மீனை இறைவனுக்கு அற்பணிப்பது என் வழக்கம் அதன்படி இன்று கிடைத்த அந்த மீனை இறைவனுக்கு அற்பணித்து விட்டேன். இனி வேறு மீன் கிடைப்பதும் கிடைக்காததும் இறைவனது கருணை என்றhர். மற்றவர்கள் அவரை தனியே விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இவரது இத்தகைய இறை பக்தியை மெச்சிய சிவன் அவர் முன் தோன்றி அவரை தன்னுள் ஆட் கொண்டார

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •