Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 32

Thread: வருங்கால தொழிலதிபர்களே!

                  
   
   
  1. #13
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    வாங்க ஆரென் அண்ணா, உங்களை இங்கே பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

    நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ளங்க.

    எங்க ஊரில் எனக்கு ஊமைப்பூச்சி என்று பெயர், யார் கிட்டவும் பேசவே மாட்டேன். குனிந்த தலை நிமிராமல் செல்வேன்.

    - நல்லதம்பி பரம்ஸ்.
    பரஞ்சோதி


  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    சொந்தமாக தொழில் ஆரம்பிக்கும்பொழுது, நமக்குத் தெரிந்த தொழிலாக இருந்தால் நல்லது என்பது என்னுடைய கருத்து. ஏனெனில் அந்த தொழிலில் இருக்கும் நெளிவு சுளிவுகள் நமக்கு தெரிந்திருக்கும், ஆகையால் நெருக்கடியான சமயங்களில் நம்மை சமாளித்துக்கொள்ள முடியும். மேலும் நம்முடைய வாடிக்கையாளர்களை முன்பே தெரிந்திருக்கலாம் அல்லது எங்கே நம்முடைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்று எளிதாக கண்டுகொள்ளமுடியும். ஆககயால் தெரிந்த தொழிலையே தொடங்குவது நல்லது. தொழில் நன்றாக வளர்ந்தபிறகு பின்னர் மற்ற வகையான தொழிலையும் நாம் முயற்சி செய்யலாம்.

    நான் பதினைந்து வருடங்களாக Security Systems விற்பனையில் இருக்கிறேன். ஆகையால் நான் புதிதாக தொழில் தொடங்கியபொழுது நானும் அதே தொழிலில் ஈடுபட்டேன். என்னுடைய இப்பொழுது வாடிக்கையாளர்கள் அனைவரும் எனக்கு முன்பே பரிச்சயமானவர்களே. ஆகையால் புதிய பொருளாக இருந்தாலும் எனக்கு அவர்கள் பரிச்சையமானவர்களாக இருந்ததால் என்னுடைய பொருளை அவர்கள் வாங்குகிறார்கள்.

    வியாபாரத்தில் இறங்குபவர்கள் நிறைய இழக்கவேண்டிவரும். நமக்கு தெரிந்தவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொள்ளமுடியாது. நேரத்திற்கு வீடு வர முடியாது. மனைவி பிள்ளைகளுடன் விடுமுறையை கொண்டாட முடியாது. இப்படி பல பிரச்சனைகள் வரும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் முயன்றால் நிச்சயம் நமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையவன் நான். அதனால்தான் நான் அனைத்தையும் எதிர்த்து நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கையிருக்கிறது. பார்க்கலாம் எப்படி போகிறதென்று.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  3. #15
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by aren

    வியாபாரத்தில் இறங்குபவர்கள் நிறைய இழக்கவேண்டிவரும். நமக்கு தெரிந்தவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொள்ளமுடியாது. நேரத்திற்கு வீடு வர முடியாது. மனைவி பிள்ளைகளுடன் விடுமுறையை கொண்டாட முடியாது. இப்படி பல பிரச்சனைகள் வரும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் முயன்றால் நிச்சயம் நமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையவன் நான். அதனால்தான் நான் அனைத்தையும் எதிர்த்து நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கையிருக்கிறது. பார்க்கலாம் எப்படி போகிறதென்று.

    நன்றி வணக்கம்
    ஆரென்
    அண்ணா, உங்களில் தொழிலில் வெற்றிப் பெற இறைவனை வேண்டுகிறேன். 15 வருட அனுபவம் உங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கும், அதை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

    சரியாக சொன்னீங்க, தொழிலில் இறங்கி விட்டால் சுக துக்கங்களை இழக்க வேண்டும், பிடித்தவற்றை செய்ய முடியாது, கிரிக்கெட் போட்டி, படங்கள், சிரியல்கள் ஆகியவற்றை இழக்க வேண்டி வரும்.

    மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர்களின் மனகசப்புக்கும் ஆளாக வேண்டி வரும், நான் இதை எல்லாம் அனுபவித்திருக்கிறேன். ஆனால் அதனையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி பெறலாம், ஆயிரம் கோடி வந்தாலும் வாரத்தில் ஒரு நாள் குடும்பத்தோடு தான் என்ற வகையில் திட்டமிட்டால் பிரச்சனைகளில் இருந்து ஓரளவு தப்பிக் கொள்ளலாம்.
    பரஞ்சோதி


  4. #16
    புதியவர்
    Join Date
    27 Jun 2005
    Location
    Mumbai
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    மிகச் சரியாக சொன்னீங்க.

    போராடத்தெரிந்தவன் தான் மனிதன். கண்டிப்பாக கஷ்டப்படாமல் கிடைத்த கனி சுவையாக இருக்காது.

    தற்போதைக்கு ஒரு எடுத்துக்காட்டு, நான் பள்ளிக்கு 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும், புத்தகமூட்டையை தூக்கிக் கொண்டு செல்வேன், ரோட்டில் நடக்கும் போது தனியாக செல்வதால் ஒரு மாதிரியாக இருக்கும், என்னையே நான் பிஸியாக வைக்கவும், அந்த நேரத்தை வீணடிக்காமல் வைக்கவும், என்ன செய்வேன் தெரியுமா?

    - அடுத்த பதிவில் உங்கள் ஆர்வம் கண்டு..


    என்ன செய்தீர்கள் பரஞ்சோதி , ஆர்வமாய் உள்ளது..
    சொல்லுங்கள் உங்கள் பள்ளி நினைவுகளை...

    தற்போது உங்கள் குடும்பம் திருச்செந்தூரில் உள்ளதா?..
    நான் உங்களுக்கு கைவினை பொருள்கள் பற்றிய பதிவுகலை அனுப்புகிறேன்...


    இராசகுமாரன் , நீங்கள் உவரிக்கு மேற்கேவா, கிழக்கேவா ?
    நான் நினைக்கிறேன் நீங்கள் இடையன்குடி அல்லது திசையன்விளை யை சார்ந்தவராக இருக்கலாம்
    Last edited by anithanhitler; 18-08-2005 at 03:03 PM.

  5. #17
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by anithanhitler
    என்ன செய்தீர்கள் பரஞ்சோதி , ஆர்வமாய் உள்ளது..
    சொல்லுங்கள் உங்கள் பள்ளி நினைவுகளை...

    தற்போது உங்கள் குடும்பம் திருச்செந்தூரில் உள்ளதா?..
    நான் உங்களுக்கு கைவினை பொருள்கள் பற்றிய பதிவுகலை அனுப்புகிறேன்...


    இராசகுமாரன் , நீங்கள் உவரிக்கு மேற்கேவா, கிழக்கேவா ?
    நான் நினைக்கிறேன் நீங்கள் இடையன்குடி அல்லது திசையன்விளை யை சார்ந்தவராக இருக்கலாம்
    அனிதன், நண்பர் ராசகுமாரனின் ஊர்ப்பெயரை அருமையாக சொல்லிட்டீங்க.

    எனது மாமியார் ஊர் உடன்குடி, மாமனார் ஊர் இடையன்குடி அருகில் இருக்கும் ஆனைக்குடி.

    படித்தது வெள்ளாளன்விளை (இந்தியாவின் முதல் பிஷப் அசரியா அவர்கள் பிறந்த ஊர், அதே பள்ளி), தேம்பா சகோதரிக்கும் நம்ம ஊர் தான், பின்னர் மெஞ்ஞானப்புரம் மேல்நிலைப்பள்ளி அப்புறம் சென்னை, குவைத் வந்தப்பின்பு சென்னையில் செட்டில் ஆகியாச்சு.
    பரஞ்சோதி


  6. #18
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    அனிதன் பள்ளிப்பருவத்தில் நடந்த சின்ன சம்பவத்தை சொல்கிறேன்.

    நான் தினமும் பள்ளிக்குச் செல்லும் போது தனியாக நடந்து செல்வதால் போர் அடிக்கும், அதை தவிர்க்க, எனக்கு முன்னால் யார் போகிறார்களோ அவர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முந்துவேன் என்று கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு, வேக வேகமாக நடப்பேன். அவரை முந்தியவுடன், அடுத்து எனக்கு முன்னால் யார் என்று பார்த்து, அவருக்கும் அதே மாதிரி நேரம் நிர்ணயம் செய்து, வேக வேகமாக நடந்து முந்துவேன், இது மாதிரி பள்ளி சென்றடையும் வரை எனக்கு நானே போட்டி வைத்துக் கொள்வேன்.

    இப்போ கூட இங்கே வாக்கிங் டிராக்கில் நடக்கும் போது எனக்கு நானே ஒரு போட்டி வைத்துக் கொள்வேன், என் எதிரில் குறைந்த 10 பெண்கள் வருவார்கள் என்றும், ஒரு நாள் 5க்கும் குறைவான குழந்தைகள் என்றும் ஒரு நாள் என்னிடம் குறைந்தது 2 பேராவது பேசுவார்கள் (தெரிந்தவர்கள்) என்றும் நினைத்துக் கொள்வேன். வெற்றியும், தோல்வியும் மாறி மாறி கிடைக்கும்.

    கிரிக்கெட் போட்டியில் கூட போட்டிக்கு முன்பே குறைந்தது 2 சிக்ஸர் அல்லது முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்துவேன் என்று எல்லாம் முடிவு செய்து விளையாடுவேன்.

    அது மாதிரி தொழில் செய்யத் தொடங்கும் முன்பே நமக்கு நாமே ஒரு டார்கெட் வைத்துக் கொள்ள வேண்டும். முடியை கட்டி மலையை இழுக்கிறோம், வந்தால் மலை, போனால் முடி இது தான் என்னுடைய பாலிஸி. போனதைப் பற்றி கவலைப்பட மாட்டேன், ஏனென்றால் போனது என் முயற்சி தான், அடுத்த முயற்சியில் அதை சாதிக்கலாமே.

    (அனிதன், இந்தப்பகுதி இப்படி தான் இருக்கும், கூடவே உங்கள் தொழில் விபரங்களையும், மற்றவர்கள் விபரங்களையும் கொடுக்கலாம்).
    பரஞ்சோதி


  7. #19
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    எனது மாமியார் ஊர் உடன்குடி, மாமனார் ஊர் இடையன்குடி அருகில் இருக்கும் ஆனைக்குடி.

    படித்தது வெள்ளாளன்விளை (இந்தியாவின் முதல் பிஷப் அசரியா அவர்கள் பிறந்த ஊர், அதே பள்ளி), தேம்பா சகோதரிக்கும் நம்ம ஊர் தான், பின்னர் மெஞ்ஞானப்புரம் மேல்நிலைப்பள்ளி அப்புறம் சென்னை, குவைத் வந்தப்பின்பு சென்னையில் செட்டில் ஆகியாச்சு.
    அட அப்படியா?



    அது மாதிரி தொழில் செய்யத் தொடங்கும் முன்பே நமக்கு நாமே ஒரு டார்கெட் வைத்துக் கொள்ள வேண்டும். முடியை கட்டி மலையை இழுக்கிறோம், வந்தால் மலை, போனால் முடி இது தான் என்னுடைய பாலிஸி. போனதைப் பற்றி கவலைப்பட மாட்டேன், ஏனென்றால் போனது என் முயற்சி தான், அடுத்த முயற்சியில் அதை சாதிக்கலாமே.
    நல்ல கொள்கை அண்ணா. உபயோகமான பதிவு. தொடருங்கள்.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  8. #20
    புதியவர்
    Join Date
    27 Jun 2005
    Location
    Mumbai
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    நான் தினமும் பள்ளிக்குச் செல்லும் போது தனியாக நடந்து செல்வதால் போர் அடிக்கும், அதை தவிர்க்க, எனக்கு முன்னால் யார் போகிறார்களோ அவர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முந்துவேன் என்று கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு, வேக வேகமாக நடப்பேன். அவரை முந்தியவுடன், அடுத்து எனக்கு முன்னால் யார் என்று பார்த்து, அவருக்கும் அதே மாதிரி நேரம் நிர்ணயம் செய்து, வேக வேகமாக நடந்து முந்துவேன், இது மாதிரி பள்ளி சென்றடையும் வரை எனக்கு நானே போட்டி வைத்துக் கொள்வேன்..


    சும்மா நடப்பதை விட, மனதில் ஒரு போட்டியை நினைத்துக்கொன்டு கொஞசம் கொஞ்சமாக முன்னேறுவதை நானும் சில நேரங்களில் அனுபவித்து இருக்கிறேன்...

    அப்புறம் உங்களுடைய குடும்ப வம்சாவழியினர் உஙகள் ஊரில் இருப்பார்கள் அல்லவா?.. எப்போதாவது சொந்த கிராமத்திற்க்கு வருவதுண்டா?

  9. #21
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by anithanhitler
    சும்மா நடப்பதை விட, மனதில் ஒரு போட்டியை நினைத்துக்கொன்டு கொஞசம் கொஞ்சமாக முன்னேறுவதை நானும் சில நேரங்களில் அனுபவித்து இருக்கிறேன்...

    அப்புறம் உங்களுடைய குடும்ப வம்சாவழியினர் உஙகள் ஊரில் இருப்பார்கள் அல்லவா?.. எப்போதாவது சொந்த கிராமத்திற்க்கு வருவதுண்டா?
    அனிதன், கிராமத்தில் இன்னமும் என்னுடைய சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். இந்தியா வரும் போது அங்கே தான் செல்வேன். தசரா பண்டிகையை மீண்டும் பார்க்க ஆசையாக இருக்குது, இந்த வருடம் முடியாது, அடுத்த முறை அதை ஒட்டி வரலாம் என்றும் ஆசை.

    கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வருவோம். சக்திக்கு ஒரு தொப்பு தயார் செய்து கொடுங்கள்
    பரஞ்சோதி


  10. #22
    புதியவர்
    Join Date
    27 Jun 2005
    Location
    Mumbai
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    0
    Uploads
    0
    எப்படி இருக்கிறீர்கள் பரஞ்சோதி??

    கடந்த வாரம் கொஞ்சம் வேலை அதிகமாக இருந்துவிட்டது.அதனால்தான் தகவல் ஏதும் தர முடியவில்லை.

    அப்புறம் நான் நம்ம ஊருக்கு தகவல் அனுப்பி இருக்கிறேன். விரைவில் அந்த அலங்கார பொருள்கள் பற்றிய படங்களை அனுப்பி வைப்பார்கள்..அது கிடைத்தவுடன் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.சரியா?

    நான் தற்போது ஒரு மென்பொருள் த்யாரிப்பு கம்பெனியில் வேலை பர்க்கிறேன். தாங்கள் குவைத்தில் என்ன செய்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?

  11. #23
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    நன்றி அனிதன்,

    வேலை நேரம் போக மீதி நேரம் வாங்க பேசலாம்.

    பொதுவா எல்லோரும் நான் தமிழ்மன்றத்தில் வேலல செய்வதாக நினைப்பார்கள். ஹா! ஹா!

    உங்களுக்கு தனிமடல் அனுப்புகிறேன்.
    பரஞ்சோதி


  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    நன்றி அனிதன்,

    வேலை நேரம் போக மீதி நேரம் வாங்க பேசலாம்.

    பொதுவா எல்லோரும் நான் தமிழ்மன்றத்தில் வேலல செய்வதாக நினைப்பார்கள். ஹா! ஹா!
    அப்ப இல்லையா ??

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •