நிகழ்ச்சி நிரல் - பொறுப்பாளர்கள்
1. தமிழ்த் தாய் வாழ்த்து - ராக(ம்)வன் குழுவினர்
2. வரவேற்புரை - கவிதா
3. குழுவினர் அறிமுகம் - தலை
4. சென்னை - ஓர் அலசல் - சேரன்
5. தமிழகமும் அ(ச)ண்டை மாநிலங்களும் – பிரதீப்
6. ஆராய்ச்சி செய்யும் முன் கவனிக்கவேண்டியன- ஓர் விளக்க உரை -அறிஞர், உபகரண உதவி - பிரதீப்
7. பந்திக்கு முந்து - மன்மதன்
8. கலக்கு கண்ணா கலக்கு - பூ
9. மொய் வைக்காமல் எஸ்கேப் ஆவது எப்படி? - இளந்தமிழ்ச்செல்வன்
10. நீங்களும் விழிக்கலாமே - தேம்பாவின்ரெப்ரசென்டேட்டிவ்
11. நன்றியுரை - பாரதி
12. தேசிய கீதம் - மாமி&மகளிர் அணி
1. தமிழ்த் தாய் வாழ்த்து - இராகவன் குழுவினர்
இராகவன்:
“குமாரி...
குமாரி...
என் வார்த்தைக் கடல் வற்றிவிட்டதே!”
தலை: இன்னும் நீ பொண்ணு பார்க்க போன சிட்சுவேஷன்லேர்ந்து வரலையா! சரி விடு நாங்களே பாடிக்கிறோம்.
அனைவரும் சேர்ந்து பாடுகிறார்கள் “ நீராரும் கடலுடுத்த..”
2. வரவேற்புரை - கவிதா
அனைவரையும் வாருங்கள், வந்து வாருங்கள் என வரவேற்கிறேன்.
சென்னை எழும்பூர் நிலையம் முதல் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை குப்பைகள் அதிகரித்து வருவதினால் நீளமான அங்கவஸ்திரம் அணிந்தவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
பின்னறிவிப்பு: குர்தா போட்டவர்களுக்கு குலாப்ஜாமுன் கிடையாது
என்று கூற மன்மதன் முறைக்கிறார்.
3. குழுவினர் அறிமுகம் - தலை
அனைவரும் தலை நம்மைப்பற்றி என்ன சொல்லப்போகிறாரோ... என்று ஆவலுடன் காத்திருக்க,
தலை: (கர்ஜனையுடன் எழுந்து) அனைவரும் அவரவரே அறிமுகப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(தலை அவரைப்பற்றி மட்டும் சொல்லி அமருகிறார்... )
4. சென்னை -ஓர் அலசல் - சேரன்
டிரியோனா டிரியோ டிரியோ... டிரியோனா டிரியோ
"மெட்ராஸை சுத்திக்காட்டப்போறேன்.. மெரினாவில் சுண்டல் வாங்கப்போறேன்...
இது தானே நேரு ஸ்டேடியம் பாரேன்.. அதுக்கு எங்கப்பன்பேர் வைக்க சொல்லப்போறேன்."
ராகவன்: நாங்கல்லாம் புனைபெயரில்லாம வந்திருக்கோமே! எங்க பேரை வைக்க சொல்லமாட்டீங்களா?
5. தமிழகமும் அ(ச)ண்டை மாநிலங்களும் - பிரதீப்
வந்தால் காவேரி... வராவிட்டால் மழைதேவி!
மணந்தால் மாகாதேவி... இல்லையேல் மரணதேவி!
(சத்தமாக பேசியதில் மூச்சு வாங்குகிறது... டேபிளில் இருந்த பாலாற்றுத் தண்ணீரை அருந்தியவாறே அமருகிறார்)
6. ஆராய்ச்சி செய்யும் முன் கவனிக்கவேண்டியன - ஓர் விளக்க உரை - அறிஞர்
உபகரண உதவி - பிரதீப்
அறிஞர்: ஒரு பால்காரன் எத்தனை லிட்டர் பாலுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் சேர்க்கவேண்டுமோ...
அதைவிடவும் கவனமாக நாம்..... (உதவிக்கு பிரதீப் கண்ணாடி குப்பி(/கோப்பை)களை எடுத்து கொடுக்க)
(மற்றவர்கள் காதைப்பொத்திக்கொள்கிறார்கள்)
(பெண்கள் மூக்கைப்பொத்திக்கொண்டு அங்கிருந்து ஜீட் விடுகிறார்கள்)
அறிஞர் விடாப்பிடியாகத் தொடர தாங்கமுடியாமல் அங்கேயிருந்த கண்ணாடிக்கோப்பைகள் தாமாகவே உடைகின்றன.
பிரதீப் தான் உடைத்து விட்டார் என்று மன்மதன் போட்டுக்கொடுக்க அறிஞர் தனது 'சுருக்குப்'பேச்சை அத்துடன் முடித்துக்கொள்கிறார்.
7. பந்திக்கு முந்து - மன்மதன்
பந்தியை கவனிக்கும் சாக்கில், சாக்கில் (பாலிதீன்) இருந்த அப்பளங்களையும், ஐஸ்கிரீம் குப்பிகளையும் அபேஸ் செய்தவாறே முன்வரிசையில் கர்ச்சீப் போட்டு வைக்க...
தலை, "இங்கே அதிகமாக கொட்டிக்காதே.... அப்புறம் அடுத்த ரவுண்டில் காலி பண்ண முடியாது"
அப்படியும், வாழைப்பழங்களை தனது குர்தா பாக்கெட்டுக்குள் ஒளித்து வைத்துக்கொள்கிறார்.
8. கலக்கு கண்ணா கலக்கு - பூ
அறிஞர் சொன்ன ·பார்முலா விதிப்படி பூ கலக்கியவாறே,
பூ: "கலக்கல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
எ ன் பா ட் டு ஒருவிதம்" என்று பாட
தலை: கண்ணா.... ஒன்னு சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ....
"கோப்பை எடுத்தவனெல்லாம் கண்ணதாசன் ஆகமுடியாது..
அதிகமாக ஊத்திக்கிட்டா பேலன்ஸ் பண்ணி ஆட முடியாது... "
ஹா, ஹா, ஹா இது எப்படி இருக்கு!
9. மொய் வைக்காமல் எஸ்கேப் ஆவது எப்படி? - இளந்தமிழ்செல்வன்
இ.த.செ: இப்படித்தான் நான் ஒரு கல்யாணத்துக்கு போய் மொய்யே வைக்கல...
பிரதீப்: எப்டி?எப்டி?எப்டி?
இ.த.செ : எதுக்கு இத்தனை எப்படி?
பிரதீப்: இல்லப்பா... மொய் வைக்கலன்னா சாப்பிடவுடமாட்டானுங்களே...
அதான் எப்படீனு....தெரிஞ்சுக்கலாம்ன்னு....கேட்டேன்பா...
(வடிவேலு மாதிரி பம்மறார்)
இ.த.செ: தெரிஞ்சவங்க, உறவுக்காரங்க கல்யாணத்துக்கு போனாதானே நம்மள கேட்பானுங்க...
ஏதாவது ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சா... எவன் கேட்பான்?
பிரதீப் : அட, இது தெரியாம நான் போன மாசம் நாலு கல்யாணத்துக்கு போய் மொய் வச்சுட்டேனேப்பா... :(
அறிஞர்: இ.த.செ நீங்க ரெண்டு செருப்பும் வேற வேற கலர்ல மாத்தி போட்டுட்டு வரும்போதே நான் யோசிச்சேன்
10. நீங்களும் விழிக்கலாமே - தேம்பாவின் ரெப்ரசென்டேட்டிவ்
ஒன்றும் பேசாமல் 'திரு திருவென விழித்து' செய்கையால் விளக்குகிறார்.
11. நன்றியுரை - பாரதி
யுனிகோடில் நன்றியுரை வழங்குகிறார் நமது பாரதி.
·புல்லான மக்களுக்கு அது கோடு கோடாகத்தெரிகிறது.
அதை லோக்கல் டமிழில் மொழி பெயர்க்கிறார் நமது பிரதீப்.
அதன் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:-
அனைவருக்கும் வணக்கம் - எல்லாத்துக்கும் வணக்கம்.
தைவானிலிருந்து வந்திருக்கும் அறிஞர் அவர்களுக்கும் - பக்கத்து நாட்லேருந்து வந்திருக்க அறிஞருக்கும்
பெங்களூரிலிருந்து வந்திருக்கும் ராகவன், பிரதீப்புக்கும் - பக்கத்து வூட்லேருந்து வந்திருக்க ராகவன்,பிரதீப்புக்கும்
தமிழகத்தின் வட தென் பகுதிகளில் வசித்தாலும் - நம்ம வூட்லேயே அங்கின இங்கின பொழப்ப ஓட்டினாலும்
குழுமத்தில் பங்கு கொண்ட நண்பர்களுக்கும் - சோதியில் ஐக்கியமான தோஸ்த்துகளுக்கும்
அனைவரையும் ஒன்று திரட்டிய தலை அவர்களுக்கும் - எல்லாத்தையும் ஒன்னா இட்டாந்திருக்கும் நம்ம நைனாக்கும்
மன்றம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் - மன்றம் வழியா தேங்க்ஸ்பா!
12. தேசிய கீதம் - மாமி&மகளிர் அணி
"முண முண முண முண...." இங்கே ஆரம்பிக்கும் தேசியகீதம் வீடு வரை அனைவரது வீட்டிலும் தொடர்கிறது.
(நமக்கு 'மத்தள சத்தத்தின் எக்கோ' மட்டும் கேட்கிறது )
சுபம்!
விடு ஜீட் - கவிதா
Bookmarks