தெவ் கிளவி வேண்டாம்
கெளவை கொண்ட மனம்
ஞிமிறு கொண்ட கனிபோல்
ஞமலியாய்த் திரிய
வெரிந் தில்
ஞெகிழி வைத்தால்
மெய் ஞொள்கல்லாகும்
மெய்யறியும்.
...
இந்த கவிதைக்கு நீங்க அர்த்தம் சொல்லித்தான் ஆகணும் பாரதி..
அன்புடன்
மன்மதன்
ஆமாம் அண்ணா ஒன்னுமே புரியல்ல!
கடுஞ் (சுடு) சொல் வேண்டாம்Originally Posted by பாரதி
துன்பம் கொண்ட மனம்
வண்டு உள்ளிருக்கும் கனிபோல்
நாயாய்த் திரிய
____________
கொள்ளிக்கட்டை (தீ) வைக்க
உடல் சுருங்கிப் போகும்
ஆனால் உண்மை அறியவரும்.
அரட்டி விட்டீர்கள்..... என்னால் இயன்ற அளவு சொல்லி இருக்கிறேன்.
மீதி ஆண்டவன் அல்லது நீங்கள் விட்ட வழி.
Last edited by அமரன்; 18-03-2008 at 09:28 AM.
ஏதோ ஃபாண்ட் ப்ராப்ளம்ன்னு பாத்தா.....ப்ரதீப் அட்டகாசமா ஒரு விளக்கம் கொடுத்திருக்காரே......Originally Posted by பாரதி
அன்புடன்
மணியா
(ஏன் பாரதி விளக்கத்தையும் கூடவே தரவில்லை....????)
இதென்ன கேள்வி, நம்மைக் கண்டுபிடிக்க வைக்கத்தான்...Originally Posted by mania
ஆனால் வார்த்தைகளை விட அதன் உள்ளிருக்கும் அர்த்தம்தான் பிரமிக்க வைக்கிறது
உண்மைதான் ப்ரதீப்........ஆமாம் இந்த பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் உண்டா இல்லையா என்ற போட்டிக் கவிதைக்கு விளக்கம் கொடுத்ததும் நீ(ர்)தானா......???Originally Posted by pradeepkt
அன்புடன்
மணியா.......
இந்த நக்கலுதானே வாணாங்கறது.Originally Posted by mania
ஆமா ஆகஸ்ட் 6-7ம் தேதி சென்னையில இருக்கீங்களா?
பிரியன் உங்ககிட்ட பேசினாரா?
இப்போதைக்கு 4ம் 5ம் நான் ஊரில் இல்லை.....அப்போதைக்குத்தான் தெரியும்.....Originally Posted by pradeepkt
அன்புடன்
மணியா.....
(இன்னும் பிரியன் பேசவில்லை ):angry:
பாரதிஜி
பதவுரை, பொழிப்புரை இல்லாமல் புரிந்து கொள்வது கடினமே. ப்ரதீப்ஜிக்கு நன்றிகள்.
கவிதை நன்றே!
===கரிகாலன்
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
கவிதை நன்றாக இருக்கிறது பிரதிப் அவர்களின் புண்ணியத்தில் கொஞ்சம் புரிந்த்ததால்.
அப்பா! தமிழில் மறந்த சொற்கள் கூட பாரதியண்ணனுக்கு நிறைந்த சொற்கள் என்று இன்று கண்டு கொண்டேன்.
பிரதீப், எங்கயோ போயிட்டீங்க. நக்கீரரு ஒங்க ஊரா? ஆமா நீங்க மதுரக்காரருதான.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks