ஊஞ்சல்
-------
முட்களுக்கும் பூக்களுக்கும்
இடையேயான பாதையில்
நாம் செல்லவேண்டியுள்ளோம்
இது அழகிய புல்பாதை!
முள்ளை நினைத்து
பயப்படத்தேவையில்லை
உனது பாதுகையும்
முட்களை உதிர்க்கலாம்.
நிறமும் மணமும் சிந்தும்
பூக்களைப்பற்றி சுவாரசியம் இல்லை
நீயும் பூ தான்
எனவே
நல்லவைக்கும், அல்லவைக்கும்
நடுவே
ஊசலாடத்தேவையில்லை
பூக்களையும், முட்களையும் நேசி
நிறத்தையும், மறத்தையும் ரசி
உல்லாசமாய் ஊஞ்சலாடலாம்
Bookmarks