இது எனது ஆயிரமாவது படைப்பு. தமிழ்மன்றத்திற்கு சமர்ப்பணம்...
தாய்மொழியில் படைப்புகள் தருவது என்பது தமிழனின் ஆழ்மனதின் ஆசைகளுல் ஒன்று. முந்தைய கால கட்டங்களில் அதற்கு ஏராளமான தடைகள் இருந்தன். ஆனால் இணையத்தில் தமிழ் பரவ ஆரம்பித்தவுடன் எண்ணற்ற படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை தயக்கமின்றி வெளியிட்டனர். தங்கள் எழுத்துக்கள் மீதான விமர்சனங்களை பாராட்டுகளை உடனுக்குடன் பெற்றது அவர்களுக்கு உற்சாகத்தையும் தந்தது..
நம் தமிழ்மன்றமும் எண்ணற்ற சிறந்த படைப்பாளிகளை கொண்டுள்ளது. பல சிறந்த படைப்புகளுக்கு களம் அமைத்து கொடுத்துள்ளது. இது மன்றத்தின் தொடக்க கால பதிவுகளைப் பார்த்தால் புரியும். ஆனால் இன்றூ ஒருவிதமான இறுக்கமான வறட்சி நிலவுவதையும் மறுக்க முடியாது.
இந்தத் திரியில் தமிழ்மன்றத்தின் மூத்த படைப்பாளிகள் தங்கள் எழுத்து வாழ்வில் தமிழ்மன்றம் எத்தகைய இடம் பெற்றிருக்கிறது, பெற்றிருந்தது என்பதைப்பற்றிச் சொல்ல அழைக்கிறேன். மிகத் தீவிரமாக இயங்கிய பல நண்பர்கள் தொடராமல் விலக ஏதேனும் காரணங்கள் இருந்தால் அதையும் பதிவு செய்தால்- நம் முரண்கலை களைந்து நம்மை புதுப்பித்து கொள்ள இயலும். ஆகையால் முடிந்தவரை நமது பழைய நண்பர்களின் முகவரிகளை பெற்று அவர்களையும் இந்தத்திரியில் தங்களது உணர்வுகளை பதிவு செய்ய அழைக்கிறேன்.
மன்றத்தின் தொடக்க கால நண்பர்களில் யாரேனும் ஒருவர் இந்தத் திரியில் தனது ஞாபக பக்கங்களைப் புரட்டி ஆரம்பித்து வைத்தால் மகிழ்வேன்...
இது தொடர்பாக மன்றத்து நண்பர்களின் கருத்துகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Bookmarks