பார்க்கும்..
கிழிந்த தகரத்தைத் தைத்து
நகரும் தேன்கூடாய்
மாநகரப் பேருந்துகள்
நின்று போகும்...
ஒரு இரு சக்கரவாகனம்
தர தரவென்று புலம்பிக் கொண்டே
போகும்...
பூக்கள் மெல்ல சிரித்துக் கொண்டே
ஓரவிழியியால்...
அதற்கு பதிலாய்
ஒரு பல் இளிப்பு மறுபுறம் இருந்து...
அருகில் இருக்கும்
வேம்பில் அமர்ந்து
மார்கழி மாத சங்கீத காலம்
என்று குயில் கூவுவதையும் வேடிக்கையாய்...
உதடுகளுக்கு வேலை நிறுத்தம்
கொடுத்து
காத்திருத்தல்கள்
முக்கியமாய்ப் போன
பொழுதில்
அமைதியாய்
பார்க்கும்....
Bookmarks