நண்பர்களே!
கைரளி மலையாள தொலைக்காட்சி சேவையில் அசுவமேதா என்ற ஒரு நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும். அதில் வரும் பிரதிப் என்பவர் எதிரே இருப்பவர் மனதில் நினைத்தவரை கேள்விகள் கேட்டு வெளியே கொண்டு வருவார்.
அதே மாதிரி இங்கே தொடங்க ஆசைப்படுகிறேன்.
போட்டியின் பொதுவான விதிமுறைகள்:
1. போட்டியில் கலந்துக் கொள்ள விரும்புவர்கள் தங்கள் விருப்பத்தை எந்த நேரமும் தெரிவிக்கலாம், தனிமடலிலும் தெரிவிக்கலாம் (பரஞ்சோதி, பிரியன், அறிஞர்).
2. போட்டியிடுபவர்கள் யார் யார் என்பது தெரிவிக்கப்படும், அவர்களிடையே இரண்டு போட்டிகள் நடைபெறும், விடைகளை நடுவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
3. கேள்வி கேட்டப்பின்பு ஆமாம், இல்லை என்பதே பதிலாக இருக்க வேண்டும்.
4. 15 கேள்விகள் முடிந்தபின்போ அல்லது அதற்கு முன்பே விடையை அனுப்ப நினைப்பவர்கள் நடுவருக்கு அனுப்பி விட்டு, இங்கே விடை அனுப்பி விட்டதாக அறிவிக்கலாம்.
5. போட்டிகள் முடிந்ததும், விடையை நினைத்தவர் போட்டியின் 15 கேள்வி, பதில்களின் தொகுப்பை கொடுக்க வேண்டும்.
6. அனைவரின் விடைகளும் வந்தப்பின்பு நடுவர் விடையையும், சரியான விடை சொன்னவர்களின் பெயரையும் மட்டுமே அறிவிப்பார். யார்யார் என்ன என்ன சொன்னார்கள் என்பது ரகசியமாக வைக்கப்படும், காரணம் தவறான சொன்னதை வெளியிட்டால் மற்றவர்கள் கிண்டல் செயய்க்கூடுமே என்பதை நினைப்பதை தடுக்க.
7. விடையாக மிகவும் பிரபலமான தமிழக அளவிலோ (நடிகர் ஜெய்சங்கர்), இந்திய அளவிலோ (லாலுபிரசாத் யாதவ்) அல்லது இந்தியாவை சார்ந்த பிற நாட்டவர் (அன்னை தெரசா) நினைக்கலாம்.
8. ஒரு பிரபலம் ஒருமுறை தான் விடையாக தேர்வு செய்யப்பட வேண்டும், விடையாக தேர்வு செய்தப்பின்பு அவரையே தேர்வு செய்வது தடை செய்யப்படுகிறது, பட்டியல் கொடுக்கப்படும்.
9. தர்மசங்கடமான கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும் (எ.கா. அவருக்கு சின்னவீடு இருந்ததா? பாத்ரூமில் வழுக்கி விழுந்தாரா?, விமானத்தில் பயணம் செய்தவரா?).
10. கேள்விகள் முறையாக கேட்கப்பட வேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்பதை தெரிந்தப்பின்னரே அவரது வயதை பற்றிய கேள்வி கேட்கப்பட வேண்டும்.
11. பொதுவான கேள்விகள் கேட்பதே நல்லது, குறிப்பாக எம்.ஜி.ஆரை விடையாக நினனத்தால் அவரது பள்ளியின் பெயரொ, அவர் திருமணம் செய்த ஆண்டையோ அனைவராலும் சொல்ல முடியாது, ஒருவேளை ஏதாவது ஒரு ஆண்டை சொன்னால், பின்னர் இணையத்தில் எதையாவது தேடி கொடுத்தால் நன்றாக இருக்காது, அப்படி ஒருவர் தவறாக சொல்லியிருந்தால் அதை நடுவர் அவர்களுக்கு தனிமடலில் தான் சுட்டிக்காட்ட வேண்டும், அதை ஏற்றுக் கொள்வது, நிராகரிப்பதும் நடுவரின் முடிவைப் பொருத்தது.
12. ஒருவர் ஒரு முறை தான் விடையை நடுவருக்கு அனுப்ப வேண்டும், முதன் முறையாக அனுப்பியதையே விடையாக ஏற்றுக் கொள்ளப்படும்.
13. விடைகண்டுபிடிக்ககுறைந்தது 10 கேள்விகள் கேட்க வேண்டும், அதிகப்பட்சம் 3 மதிப்பெண், அப்புறம் 10வதுகேள்வியிலேயேவிடைகண்டுபிடித்தால் 3 மதிப்பெண்கள்,,11, 12 ல் கண்டுபிடித்தால் 2 மதிப்பெண்கள், 13,14,15ல் கண்டுபிடித்தால் 1 மதிப்பெண். அப்படி 15க்குள்அவசரப்பட்டு விடை சொல்லி அது தவறானால் 1 மதிப்பெண் குறைக்கப்படும்.விடை கண்டுபிடிப்பவர் விடையை நடுவருக்கு அனுப்பியவுடன் மற்றவர்களும் அனுப்பலாம், அவர்களுக்கும் 3, 2, 1 என்ற விகிதத்திலும், தவறாக சொன்னால் 1 மதிப்பெண். குறையாது.
14. போட்டியாளர்கள் தவிர மற்றவர்கள் கமெண்ட் அடிக்கலாம், ஆனால் விடையையோ அல்லது கோந்தையோ கொட்டக்கூடாது.
15. போட்டியாளர்களைத் தவிர மற்றவர்கள், விடை கண்டுபிடிப்பவர் விடையை நடுவருக்கு அனுப்பிவிட்டதாகச் சொன்னப்பின்பு தான் நடுவருக்கு மட்டுமே விடை அனுப்ப வேண்டும்.
16. விடையை மனதில் நினைத்து போட்டியிட நினைப்பவர், விடையை நடுவருக்கு அனுப்பும் போது அவரைப் பற்றிய சிறு குறிப்பையோ அல்லது அவரது வாழ்க்கை வரலாறு காணப்படும் தளங்களின் விபரம் கொடுக்கலாம்.
17. கேள்விக்கு பதில் சொல்பவர் தவறாக ஆமாம், இல்லை என்று சொல்லி அதனால் விடைக்கான வழி மாறிவிட்டால், அதை நடுவர் தளத்தில் உடனே சரி செய்யலாம், ஒருவேளை போட்டி முடிந்தப்பின்பு கண்டுபிடிக்கப்பட்டால் கேள்வி கேட்டவருக்கு ! மதிப்பெண்ணும், இதர போட்டியாளர்களும் ½ மதிப்பெண்ணும் கிடைக்கும்.
18. விதிமுறைகள் அடிக்கடி மாற்றப்படலாம்.
19.நடுவரின் தீர்ப்பே இறுதியானடு, உறுதியானது, கடுமையானது.
---------
முக்கிய அறிவிப்பு
பதில் தெரிவிக்கும்போது டைட்டில் (சப்ஜெக்டில்) போட்டி எண் மாத்திரம் குறிப்பிடுங்கள்.
என் போட்டி, பரம்ஸ் போட்டி என குறிப்பிட வேண்டாம்.
ஒரு மெயிலில் ஒரு பதில் மாத்திரம் அனுப்புங்கள் (2 அல்லது 3 பதில்களை தெரிவிக்கவேண்டாம், தனித்தனியாக அனுப்பவும்)
Bookmarks