நீ காற்றிலே கலந்து
வந்து கொண்டிருப்பதைக் கேட்டேன்.
என் தோட்டத்துக் குயில்கள்
உன் பெயரைத் திரும்பத் திரும்ப
சொல்லிக் கூவுகின்றன.
பரவசமான உன் பிம்பமொன்று
என் இதயத்தின் வாசலில்
படிந்து படிந்து தெளிகிறது.......
நம்மை அறிந்த எல்லோரும்
உன் வீட்டுக் கூரையின் மீது
அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
'எப்படி என்னை விடுவித்து
எனக்கோர் கூரை கட்டித் தருவது? என்று '
Bookmarks