Results 1 to 9 of 9

Thread: விடுதலை......

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    விடுதலை......

    நீ காற்றிலே கலந்து

    வந்து கொண்டிருப்பதைக் கேட்டேன்.

    என் தோட்டத்துக் குயில்கள்

    உன் பெயரைத் திரும்பத் திரும்ப

    சொல்லிக் கூவுகின்றன.



    பரவசமான உன் பிம்பமொன்று

    என் இதயத்தின் வாசலில்

    படிந்து படிந்து தெளிகிறது.......



    நம்மை அறிந்த எல்லோரும்

    உன் வீட்டுக் கூரையின் மீது

    அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

    'எப்படி என்னை விடுவித்து

    எனக்கோர் கூரை கட்டித் தருவது? என்று '
    Last edited by அறிஞர்; 09-06-2005 at 01:38 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கும்பலாய் தின்றால் கீழவெண்மணி

    சாதிப்பேய்

    ஜதையில் ஒன்றைத் தின்றால்...



    நண்பனின் கவிதை...

    சில அழிவுப் படலங்கள் அழியாமல் தொடர்ந்தபடி

    படிமங்களை மட்டும் மாற்றிக்கொண்டு......
    Last edited by அறிஞர்; 09-06-2005 at 01:39 PM.

  3. #3
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    வாழ்க்கை கவித்துவமாக இருக்காது..

    அது சில கணங்களில் உதிர்ந்த இலையாக..

    சில சமயம் காற்றில் ஆடும் மரமாக..



    ஒரு வருடத்திற்கு பிறகு இந்தக் கவிதையை ரசித்தேன் என்றால்

    அது ஜீவாதாதான உங்கள் எழுத்துத்தான்..

    பாராட்டுக்கள்..
    Last edited by அறிஞர்; 09-06-2005 at 01:40 PM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    வெட்டி மனிதர்கள், இடுகாட்டில், கல்லறை மீது அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் - கல்லறையோ இறந்து போன காதலியினுடையது. இந்த மனிதர்களிடத்தில் இருந்து விடுதலை வேண்டும் என்று வேண்டி, விரும்பி மரித்துப் போன காதலியின் கல்லறை. கல்லறை தான் அவளது வீடு தற்போதைக்கு....



    காதலியின் நினைவிலே சதா காலமும் துக்கித்துத் திரியும் காதலனை அந்த நினைவுகளிலிருந்து மீட்க வேண்டும் என்று தான் பேசுகின்றனர். அதைக் கேட்கும் காதலனுக்கோ அவள் நினைவுகளில் இருந்து விலகினால், இறந்து போய்விடுவேனோ என்ற பயத்தில், அவர்கள் பேசுவதை, தனக்கு கல்லறை கட்டும் பேச்சாகத் தான் கேட்கிறான்....



    கவிதையின் அடிப்படை - ரூமியின் கவிதை ஒன்றை படிக்க நேர்ந்து அதன் தாக்கத்தால் எழுதியது. ரூமியின் பார்வை - இறைவன் மீது துதி பாடுவது. என்னுடையது காதலை மட்டும் தான் பார்த்த்து....
    Last edited by அறிஞர்; 09-06-2005 at 01:40 PM.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கொஞ்சமல்ல.. நிறையவே வித்தியாசமாக இருக்கிறது. உங்கள் விளக்கத்துக்குப் பின் தெளிவாய்.... நன்றி நண்பரே.
    Last edited by அறிஞர்; 09-06-2005 at 01:41 PM.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி பாரதி.....

    பல கவிதைகளை மீண்டும் படிக்கும் பொழுது, மனதினுள் ஒரு புத்துணர்ச்சி.....

    அந்தக் கவிதைகளை எழுதிய சந்தர்ப்பத்தில் மனம் இருந்த நிலை மீண்டும் தோன்றும் பொழுது ஒரு உற்சாகம்.....
    Last edited by அறிஞர்; 09-06-2005 at 01:41 PM.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    சிதையில் ஏற்றப்பட்டவள்.....

    காற்றிலே கலந்து
    வந்து கொண்டிருக்கும்
    உன்னை திரும்பத் திரும்ப
    பெயர் சொல்லிக் கூவுகின்றன
    தோட்டத்துக் குயில்கள்.

    எதிலும் படியாத
    விழிகள்
    விழாத தூசுக்காக
    வருந்தி வருந்தி
    நீர் உகுக்குகிறது.

    பரவசமான
    உன் பிம்பமொன்று
    என் இதயத்தின் வாசலில்
    படிந்து படிந்து தெளிகிறது.......

    நம்மை அறிந்த எல்லோரும்
    பேசிக் கொள்கின்றனர் -
    நீ என்னை பிடித்திருப்பதாக.

    அடடா..!!!

    இதைப் புரிந்து கொள்ளவா
    இறக்காத எனக்காக
    உன்னை சிதையில் ஏற்றிப் பார்த்தது
    இந்த ஊர்?
    Last edited by Nanban; 11-09-2005 at 05:19 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    ஒன்றிலிருந்து மற்றொன்றாக
    கவிதைகள்
    எழும்பிக்கொண்டேயிருக்கின்றன.
    மீண்டும் மீண்டும்
    வாசிக்கும் பொழுது.

    வாசிப்பதற்காக எழுதுவதா?
    எழுதுவதற்காக வாசிப்பதா?
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by Nanban
    ஒன்றிலிருந்து மற்றொன்றாக
    கவிதைகள்
    எழும்பிக்கொண்டேயிருக்கின்றன.
    மீண்டும் மீண்டும்
    வாசிக்கும் பொழுது.

    வாசிப்பதற்காக எழுதுவதா?
    எழுதுவதற்காக வாசிப்பதா?
    நியூட்டனின் மூன்றாவது விதிதான் காரணம் நண்பர் நண்பனே.

    விழியில் வழியும்
    நீரை நீ பார்த்து
    விடக்கூடாது
    என்ற அக்கறையில்...

    காற்றிலே கலந்து
    வந்து கொண்டிருக்கும்
    உன்னை திரும்பத் திரும்ப
    பெயர் சொல்லிக் கூவுகின்றன
    தோட்டத்துக் குயில்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •