நாளை உண்டு நமக்கு...
சுதந்திர பூமி தமிழீழத்துக்காய்
சுதந்திர வேட்கை மனதில்
சூழ விழித்திருந்த வேளைதனில்
சுனாமி என்ற பெயர் கொண்ட
சூறாவளி சுழன்று சுழன்று அடித்தே
சூறையாடி விட்டது எம் இனத்து
சொந்த பந்தங்களை
தண்ணீருக்குள் தண்ணீராய் ஈரமாக
இணைந்திருக்கும் உனக்கில்லை இரக்கம்
கண்ணுக்குள் கண்ணீராய் இணைந்த எம்
நெஞ்சுக்குள் ஈரம் எமக்குண்டு
அடங்கி விட்டது உன் சீற்றம்
அடங்க வில்லை எம் உணர்வுகள்
ஆறாத்துயரில் அழுதிடும் எம் உறவுகளை
அணைத்திட எம் கரங்கள் உண்டு
மனித அவலத்தின் உச்சியின் கதறல்களில்
மனிதம் விழிப்புறட்டும்
இனம் மதம் தேசம் கடந்த
இணைந்த கைகள் இறுகப்பற்றியே
நாளை உண்டு நமக்கு என்றே
நாளைய பயணம் நல்வழியாக அமையட்டும்
Bookmarks