[quote=மன்மதன்,Jan 8 2005, 09:20 AM]
இந்த தொகுப்பை திடிரென்று நிறுத்தியதற்கான காரணத்தை தெரிந்ததும் கவலையடைந்தேன்.. நீங்கள்
வலியை தாங்கும் வல்லமை தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி மீண்டும் தொடங்குகிறேன்..இனி வருகிற இடங்களில் குழப்பம் நேர்ந்தாலும் உங்கள் மனதில் வைத்து கொள்ளுங்கள் இறுதியில் என் விளக்கம் இருக்கும் கவிதை உங்களுக்கு விளக்கா விட்டால் ....ஏதோ விளையாட்டாக உளறல்கள் என்று தொடங்கினேன்.ஆனால் என் வாழ்நாள் சேமிப்பாய் காலத்தின் கட்டாயத்தில் எனக்கென தரப்பட்டிருக்கிறது.....நான் மனதளவில் சிதையாமல் போக இந்த வெற்றுப்பாலையில் எனக்கு கிடைத்த நண்பனாய் தமிழ்மன்றத்தை கருதி உங்கல் நிழலில் நானும் கொஞ்சம் இளைப்பாற போகிறேன். இந்த மாதம் முழுதும் இந்த உளறலில் மட்டும்தான் என் பதிவு இருக்கும்
நாளை நமக்கு திருமணம்
நாளை முதல்
இருவருக்கான
தனிச்சொர்க்கம்...
நம் பார்வைக்குள்
நம் அறைக்குள்
உன்னில்
உன்னால்,
உனக்காக
தொடங்கும்
என் விடியல்கள்...
தாயின் கதகதப்பாய்
என்னை துளைத்து
நேசம் சொல்லப்போகும்
உன் மூச்சுகாற்று ...
சுவாசம் ரசித்து
உறங்க போனேன்.
கண்கள் சொன்னது ...
இன்று என்னை சிறைப்படுத்தாதே..
அத்தனை விண்மீண்களுக்கும்
சொல்ல வேண்டும் .
நீங்கலெல்லாம் உறங்கி
நாளை வாருங்கள்..
உயிர் நிறைக்கும்
என்னவள் விழியின்
ஒளியை காண ...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Bookmarks