தேசிய சேவைப்பயிற்சித் திட்டப் பயிற்சியாளராக முன்னாள் இராணுவத்தினர்
எதிர்காலத்தில் தேசிய சேவை பயிற்சித் திட்டப் பயிற்சியாளர்களாக ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவ்வியக்கத்தின் துணை இயக்குனர் Omar Abdul Rahman தெரிவித்துள்ளார்.
அப்பயிற்சித் திட்டத்தில் பங்குபெறும் மாணவர்கள் ராணுவ வீரர்களைப் போன்று ஒழுக்கமுடனும் கட்டுக்கோப்புடனும் திகழ்வதற்காகவே, இத்திட்டம் அமல்படுத்தப்படவிருப்பதாக அவர் கூறினார்.
முன்னாள் ராணுவ வீரர்களைத் தேசியசேவை பயிற்சித்திட்டப் பயிற்றுனராக நியமிக்கும் விவகாரம் தொடர்பில் முன்னாள் ராணுவவீரர்கள் சங்கத்துடன் தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போலீசாரும், துப்பாக்கியும்
தகுந்த சட்ட விதிகளின் அடிப்படையில் கடமையில் ஈடுபட்டிருக்கும்போதும்,மற்ற நேரங்களிலும் துப்பாக்கி வைத்திருக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என உள்நாட்டு பாதுகாப்பு துணை அமைச்சர் Datuk Noh Omar தெரிவித்தார்.
அவ்வாறு வைத்திருப்பதற்கான சட்ட விதிகள் மிகவும் கண்டிப்பானவை;கடுமையானவை எனவும் குறிப்பட்ட அமைச்சர் அந்த சட்ட திட்டங்களை மீறும் சம்பவங்கள் மிகக் குறைவே என்றும் கூறினார். அவ்வாறு மீறிய போலீசாருக்கு கடும் தண்டனை விதிக்கப்படுகின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று bidor-இல் நடைபெற்ற General Operations Force's 3rd Battalion கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.
Rapid Response Unit-இன் உறுப்பினர்களாகிய போலீசார் கடமையில் ஈடுபடாத வேளையில் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என கடந்த புதன்கிழமையன்று போலீசார் 2 இந்தோனேசிய ஆடவர்களை சுட்டதை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
சரவாக்கில் காட்டுத்தீப்புகை
சரவாக் மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் நகர்ப்புறம் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் புகை மண்டலம் பரவக் கூடும் என வானிலை ஆராய்ச்சி இலாகா அறிவித்துள்ளது.
வழக்கமாக இந்த பருவகாலத்தில் புகைமண்டலம் அவ்வாறு பரவுவது இயல்பானதே என அவ்விலாகாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் Zaidi Zainal Abidin தெரிவித்தார்.
பொது மக்கள் இது போன்ற காலக்கட்டத்தில் திறந்த வெளியில் குப்பைகளை எரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய-வங்காளதேசக் கூட்டுக் கூட்டம்
எதிர்வரும் June,7-ஆம் தேதியன்று, மலேசிய- வங்காளதேச கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் எனப்படும் JCM கூட்டம் வங்காளதேசம் தலைநகர் Dhaka-வில், மலேசிய வெளியுறவு துறை அமைச்சர் Datuk Seri Syed Hamid Albar தலைமையில் நடைபெறவிருக்கிறது.
Malaysia- வங்காளதேசம் இடையிலான விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள்,விவாதங்கள்,கலந்துரையாடல்கள் ஆகியவை நடைபெறவுள்ள இந்த JCM-கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பல அரசுத்துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கணினி மென்பொருள் கடத்தல்
சட்டவிரோதமாக கணினி மென்பொருளைக் கடத்தும் நடவடிக்கைகளின் எண்ணிக்கை மிக அதிகமாகக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடங்களைக் காட்டிலும் 2 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும் ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் மலேசியாவில் தான் சட்டவிரோத கணினி மென்பொருள் கடத்தல் நடவடிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அளவைக் குறைக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென Adobe Systems நிறுவனத்தின் மேலாளர் Tan Wee Ling தெரிவித்துள்ளார்.
தீவிர ஆலோசனை அல்லது பரிசீலனைக்குப் பின்னரே அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட துறையினர் கணினி மென்பொருள் தொடர்பான குறுந்தட்டுகளை விநியோகிப்பதற்கான லைசன்ஸ்களை வழங்க வேண்டுமென பெரும்பாலான கணினிமென்பொருள் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்துலகப் புகையிலைப் பொருள் கருத்தரங்கம்
2005 ஆம் ஆண்டுக்கான புகையிலை தொடர்பான அனைத்துலக கருத்தரங்கம் ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் தலைநகரில் உள்ள DBKL அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இது ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள அனைத்துலக அளவிலான கருத்தரங்கம் என்ற போதிலும், புகையிலைப் பயன்பாடு தொடர்பாக அரசு கொண்டுள்ள கொள்கைக்கு முரணாக நிகழ்ச்சியை அமைக்க வேண்டாம் என சுகாதார அமைச்சு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மலேசியா உலகின் அனைத்துப் பகுதிகளுடனும் சிறப்பான விமானசேவையைக் கொண்டிருப்பதாலும், தரமான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருப்பதாலும் அக்கருத்தரங்கு கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிரித்து வாழ வேண்டும்
சிரிப்பது உடலுக்கு நல்லது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிரிக்கும் போது மனித உடலில் உள்ள கூடுதல் கலோரி எரிக்கப்படுகிறது. சிரிக்கும் போது மக்கள் புத்துணர்ச்சி பெறுவதால் அது உடலுக்கு நல்ல மருந்தாகிறது என்று அம்மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மனித உடலில் உள்ள கூடுதல் கலோரி, சிரிப்பதன் மூலம் எரிக்கப்படுகிறது. தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் சிரித்தால், 10 முதல் 40 கலோரி வரை எரிகிறது.
எனவே சிரிப்பதன் முலம் உடலில் ஆற்றல் உருவாகிறது என கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள tennesi மாநிலத்தில் நடந்த மருத்துவ மாநாட்டில், Wonderfield பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
விபத்தில் நான்கு பேர் பலி
PASIR PUTEH, Kampung Kandis-இல் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர். மூன்று கார்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அதனால் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.
படுகாயமடைந்த நிலையில் அறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்தில் மரணமடைந்த ஒருவர் Machang-கிலுள்ள Teknologi Mara பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இடைத் தேர்தல்களில் பல இடங்களில் காங்கிரஸ் வெற்றி
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிபர் ஆட்சி அமலில் உள்ள கோவாவில் நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான சட்டசபை இடைதேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 21 இடங்களுடன் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளது.
இதனையடுத்து முதல்வரைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரதாப் சிங் ரானே தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.
சீனாவின் தியானென்மென் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலி
சீனாவில் தியானென்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சீன இராணுவத்தால் கொல்லப்பட்ட நிகழ்ச்சியின் 16ம் ஆண்டு நினைவு தினம், சீனாவில் அசம்பாவிதம் இன்றி அமைதியாக கழிந்தது.
கடந்த 1989ம் ஆண்டு, சீன அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களை சீன ராணுவம் தாக்கியதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
இக்கொடூரச் சம்பவத்தின் 16வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனால் Tiananmen சதுக்கத்தை சுற்றிலும் சீன போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஹாங்காங்கில் நேற்று முன் தினம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தி நின்று அஞ்சலி செலுத்தினர்.
இத்தாலி - பிரான்ஸ் சுரங்கப்பாதையில் தீ விபத்து
இத்தாலியிலிருந்து பிரான்ஸ் செல்லும் Frejus சுரங்கப்பாதையில் தீப்பிடித்து இருவர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
13 கிலோமீட்டர் நீளமுள்ள அந்த சுரங்கத்தில் நேற்று நள்ளிரவு வாகன டயர்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரியில் பிடித்த தீ வந்து கொண்டிருந்த மற்ற வாகனங்களுக்கும் மளமளவென பரவியது. இதனால் பல வாகனங்கள் தீயில் கருகின.
தீயணைப்பு வீரர்கள் தற்போது அத்தீயை கட்டுப்படுத்தி விட்டாலும், போக்குவரத்து நிலைக்குத்தியுள்ளது. சுரங்கப்பாதையின் பல பகுதிகள் முற்றிலுமாக சேதம் அடைந்திருப்பதால் இந்நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது.
புலிகளுக்கு எதிராக நாடுகளைத் திரட்டும் இலங்கை அரசு
விடுதலைப்புலிகள் இயக்கம் விமானப்படை அமைத்திருக்கும் முயற்சிக்கு எதிராக உலக நாடுகளின் கருத்தை திரட்டும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு இருக்கிறது.
இருதினங்களுக்கு முன் இந்தியாவுக்குச் சென்றிருந்த இலங்கை அதிபர் சந்திரிகா இந்தியப்பிரதமருடன் இது தொடர்பாக விவாதித்தாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசு அமெரிக்காவுடனும் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து புலிகள் விமானப்படை அமைப்பதை முக்கிய விஷயமாக கருதுவதாக வெளியுறவு அமைச்சர் Condoleeza Rice கருத்து தெரிவித்தார்.
அண்மைக்காலமாக விமானம் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களை சிறிது சிறிதாக சேகரித்து இரு போர் விமானங்களை விடுதலைப்புலிகள் உருவாக்கி இருப்பதாகவும், அடர்ந்த காட்டுப் பகுதியில் அவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.
விமானப் படை போர் விமானங்களை வைத்து புலிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
வெற்றி வாகை சூடிய Henin
பிரெஞ்ச் பொது டென்னிஸ் Grandslam போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பத்தாம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் Justin Henin, பிரான்சின் Marie Pears எதிர்த்து களமிறங்கினார்.
ரஷ்யாவின் Kasnatsova, Maria Sharabova, Nimpthiya Betrova போன்ற முன்னணி நட்சத்திரங்களை வீழ்த்தி ஹெனின் தொடர்ந்து முன்னேறி வந்தார்.
இறுதிப் போட்டியில் Marie Pears-ஐ எதிர்த்து விளையாடி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினார். ஹெனின் கைப்பற்றும் இரண்டாவது பிரெஞ்ச் ஓபன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வணக்கம் மலேசிய .காம்
மனோ.ஜி
Bookmarks