Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: மரம் அனுப்பும் கவிதை..

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    மரம் அனுப்பும் கவிதை..

    மரம் அனுப்பும் கவிதை..

    மரம் உதிர்த்த
    இலைகள் மண்ணை
    நோக்கி வருகின்றன..

    எனக்கான கவிதைகள்
    ஏதேனும் அதில்
    எழுதப்பட்டிருக்கலாம்
    எனும் எதிர்பார்ப்போடு
    காத்துக் கொண்டிருக்கிறேன்..

    காற்றில் கவிதைகள்
    கரைந்து போக
    இலை என்னை
    வந்து அடையும் கணத்தில்
    பயனற்றதாகிப் போய்விடுகிறது
    வழக்கம்போலவே...

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    காற்றில்
    கவிதைகள்
    கரைந்து கரைந்து
    சரியான
    ஈரப்பதத்தில்
    குளிர்விக்கிறது
    எம் மண்ணில்....

    கவிதைகள் சுமக்கும்
    இலைகளற்ற
    பாலையில்
    வறண்ட காற்று
    சருமம்
    உரித்துக் கொண்டிருக்கிறது....
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    வறண்ட காற்று
    சருமம்
    உரித்துக் கொண்டிருக்கும்
    வேளையில்
    எங்கேயோ
    சில இலைகளோடு
    உதிர்ந்த
    என் கவிதைகளை
    தேடிக்கொண்டிருக்கிறேன்..

    மண்ணோட
    மண்ணாக மக்கிப்போன
    இலைகளில்
    கவிதைகள்
    அழிந்திருந்தாலும்...
    அதில் இன்னமும்
    ஒளிர்ந்திக்கொண்டிருக்கும்...
    என் காதல்..

    -
    மன்மதன்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ராமைத் தொடரும் நண்பன், மன்மதனின் கவிதைகளும் நன்று. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    இக்கவிதைகளைப் படித்ததும் என் மனதில் தோன்றிய வரிகள்:

    காற்றில் கரைந்த கவிதைகள்
    வியர்வைநீர் போல் குளிர்ச்சியாய்....

    வெப்பக்காற்றும் மறந்து போகும்
    வெற்றிடத்திலும் கவிதை சுரக்கும்

    வேர் விரல் எழுதும் கவிதைகளை
    அசை போட்டபடி மண்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    வேர்விரல்கள்

    தொட்டுத்துழாவிய

    மண்

    படைத்த கவிதை

    செடியாகியது.



    பசியாற

    செடிகள் இலைகளை

    விரித்த பொழுது

    வெய்யில் எழுதி வைத்தத

    ஒரு கவிதையை

    பற்றிக் கொண்டு

    இலைகள்

    தரையிறங்கத்

    தயாராகியது.

    மலர் பறிக்க

    சாய்ந்த

    ஒரு பெண்ணின் மணம்

    இலைகளில் படிய

    காதலோடு கவிதை

    மன்மதன் மடியைத் தேடி....
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    அற்புதம் மன்மதன்.....

    வாழ்த்துகள்.....

    ஒரு வினா.... ஒளிர்ந்து? அல்லது ஒளிந்து? நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள்?

    உற்சாகமாயிருக்கிறது, உன் கவிதை.....
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  7. #7
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    நான் ஒன்று நினைத்து ஆரம்பிக்க
    நண்பன் அதைத் தொடர..
    மன்மதன் வேறுவிதமாய் ஆரம்பிக்க..
    பாரதியும் கிடைத்த சந்தர்ப்பத்தில் தொடர..

    மகிழ்ச்சியாகயிருக்கிறது....

    விமர்சணங்களுக்குப் பதிலாக கவிதையாவே தொடர்ந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

  8. #8
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    தரைகீழ்த் தாவரத்தின் காற்றுக் காதலி பற்றிய நான்கடுக்குக் கவிதை..

    நானொரு தரைகீழ்த் தாவரம்..
    எனது வேர் மண்டலங்கள்
    உன்னைச் சுகிக்கத் தேடுகின்றன..

    உன் மீதான மோகத்தை
    என் வேர் முடிச்சுக்களில்
    பதுக்கி வைத்திருக்கிறேன்
    தபசியின் பசியாய்...

    எனது காமம்
    கனிந்து மொட்டாகி
    தரைக்கு மேல் உனக்காகக்
    காத்துக் கொண்டிருக்கின்றன
    விலகிய மேலாடையை
    அநிச்சையாய் காணும் கண்களாய்...

    வேர்ச்சிக்கலில்
    குடியேறிய நுண்ணியிரிகள்
    கொஞ்சம் கொஞ்சமாய்
    உண்டு கொண்டிருக்கின்றன
    எனது காமத்தை..

    அது கரைந்து போம் முன்
    வந்தென்னைத் தழுவு..
    உனது கிளைகள் பரப்பி
    என்னைக் கூடு கட்ட அனுமதி..
    எனக்குள் புகுந்து
    இரண்டறக் கலந்து போம்..
    அப்பொழுது தகிக்கும் வெப்பத்தில்
    நான் மரிக்க வேண்டும்..

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    மரித்தல்
    எனக்கு
    புது பிறப்பானது.
    தனிந்திருந்த நான்
    உன்னுள்
    கலந்து விட்டதால்
    Last edited by பிரியன்; 05-06-2005 at 07:28 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஆகா, அருமை அருமை, கவிகள் கூடி கவிதை மழை பொழியக் கண்டேன், நானும் உங்கள் கானமழையில் நனைக்கிறேன்.

    என்னால் முடிந்தது இவ்வளவு தான்.
    பரஞ்சோதி


  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by Nanban
    அற்புதம் மன்மதன்.....

    வாழ்த்துகள்.....

    ஒரு வினா.... ஒளிர்ந்து? அல்லது ஒளிந்து? நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள்?

    உற்சாகமாயிருக்கிறது, உன் கவிதை.....
    இப்பொழுது எனக்குத்தான் உற்சாகம். ஒளிந்து என்றுதான் எழுதினேன். அப்புறம் என் காதல் கொஞ்சம் ஒளிரட்டுமே என்று 'ளி' சேர்த்துக்கிட்டேன்.. நன்றி குரு நண்பன்.

    ராம், நண்பன் கவிதைகளுக்கு கீழே இரண்டு வரிகள் எழுதி அந்த இருவரிடமும் பாராட்டு பெற்றாலே அதுதான் ஆனந்தம்...

    அன்புடன்
    மன்மதன்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    மிக அழகான
    கவிதை மொழிகள்....
    தொடர்ந்த
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

    Quote Originally Posted by ungalpriyan
    மரித்தல்
    எனக்கு
    புது பிறப்பானது.
    தனிந்திருந்த நான்
    உன்னுள்
    கலந்து விட்டதால்
    உன்னுள்
    கலந்து விட்டதால்..
    எனக்கொரு
    வடிவம்
    வந்து....
    இன்புறுகிறேன்....
    Last edited by அறிஞர்; 06-06-2005 at 03:11 PM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •