மரம் அனுப்பும் கவிதை..
மரம் உதிர்த்த
இலைகள் மண்ணை
நோக்கி வருகின்றன..
எனக்கான கவிதைகள்
ஏதேனும் அதில்
எழுதப்பட்டிருக்கலாம்
எனும் எதிர்பார்ப்போடு
காத்துக் கொண்டிருக்கிறேன்..
காற்றில் கவிதைகள்
கரைந்து போக
இலை என்னை
வந்து அடையும் கணத்தில்
பயனற்றதாகிப் போய்விடுகிறது
வழக்கம்போலவே...
Bookmarks