========================
காதல் கொ(ண்)டேன்...
இது என் காதலுக்கு இன்று நான் சூடிய தலைப்பு..
=======================
==================
தீக்குச்சியாய் இருக்கவும் விரும்புவேன்..
நீ பற்ற வைக்கும் அந்த சில நொடிகள் வாழ்ந்தாலே போதுமென்று!!!
=================
=================
காதல் ஹார்மோன்களின் மாற்றம் என்கிறார்கள்..
நீ இல்லா விடில்.. ஹார்மோனா.. உயிரே வேண்டாம் என்கிறேனே..
=============
==================
கடவுள் உன் முன் திடிரென்று தோன்றினால் என்ன கேட்பாய்!!!
என்னவள் என்னை விரும்பாமல் தவிர்த்தாலும்..
நான் வேறு யாரையும் விரும்பா
மன நிலை மட்டும் கொடு இறைவா என்பேன்..
ஏனென்றால், அப்போது கூட என் காதலை விட
உன்னையும் உன் உணர்வுகளையும் அதிகமாக மதிக்கிறேன்
==================
====================
இன்றோடு உலகம் அழிய போகிறது.. என்ன பண்ணுவாய்..
கண்டிப்பாக என்னவள் கண்ணில் படாமல்
மறைந்திருந்து அவளை பார்த்துக்கொண்டே இருப்பேன்..
ஆம்.. எனக்கு வேண்டாமடி உன் பரிதாப காதல்..
====================
=======================
ஒரு நாள் முழுவதும் உன்னவளோடு இருக்கும் வாய்ப்பு கிடைத்தால்
என்ன பண்ணுவாய்!!
அன்று முழுவதும் மெனண விரதம் இருப்பேன்!!!
ஆம்!!! அவள் இதழ் அசைவுகளையும்
கண் நடனங்களையும்
இமைக்காமல் ரசித்து கொண்டே இருப்பேன்..
======================
==========================
நீ உன்னில் விரும்பாத ஒன்று எது!!!
என் இருமல் தான் என்பேன்..
ஆம்!! நான் இருமும் போதொல்லாம்
என் இதயத்தினுள் என்னவள்
தூங்க முடியாமல் அசைகிறாளே..
அதை விட கொடுமை வேணுமா என்ன!!!
==========================
Bookmarks