என் அறையின் மூலையில் ....
எழுதித் தீர்ந்த
பேனாக்கள்...
உழைத்துத் தேய்ந்த
செருப்புகள்....
பலர் படித்துக் கிழிந்த
புத்தகங்கள்...
காய்ந்து உலர்ந்த
மலர்கள்...
அனைத்தும் கடமை முடித்த
பெருமிதத்தில்...
அறையின் நடுவே புத்தம் புதிதாய்..
நான் மட்டும்....
Bookmarks