உன் கோபம்
பல்முளைக்காத
குழந்தையின் கவ்வல்...(கடி)
என் கோபமோ
தாவிகுதித்து தாயைமுட்டும்
கன்றின் துள்ளல்...
கவலை வந்தால்
நீ கண்ணீர்வடிவிலும்
நான் கவிதைவடிவிலும்
அழுகின்றோம்..
கண்ணீரின் தாய்
உன் விழிகள்
என்றால்..
என்
கவிதையின் தாய்
நீதானே..
உன் கோபம்
பல்முளைக்காத
குழந்தையின் கவ்வல்...(கடி)
என் கோபமோ
தாவிகுதித்து தாயைமுட்டும்
கன்றின் துள்ளல்...
கவலை வந்தால்
நீ கண்ணீர்வடிவிலும்
நான் கவிதைவடிவிலும்
அழுகின்றோம்..
கண்ணீரின் தாய்
உன் விழிகள்
என்றால்..
என்
கவிதையின் தாய்
நீதானே..
Last edited by Iniyan; 02-06-2005 at 10:40 AM.
நாவல்டி...கண்ணீருக்குக் காரணம் நீங்களாக இல்லாமல் இருந்தால் சரி.
அழகிய கவிதை....தொடருங்கள். -அன்புடன் இக்பால்.
Last edited by Iniyan; 02-06-2005 at 10:27 AM.
"கவலை வந்தால்
நீ கண்ணீர்வடிவிலும்
நான் கவிதைவடிவிலும்
அழுகின்றோம்.."
அருமையான வரிகள் நாவல்டிவி.. தொடருங்கள்.வாழ்த்துக்கள்.
Last edited by Iniyan; 02-06-2005 at 10:27 AM.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
நாவல்டிவிஜி
கவிதை நன்றாகவே வந்திருக்கிறது.
குழந்தையின் கவ்வலும், கன்றின் முட்டலும் இன்பமே பயக்குமன்றோ?
உங்கள் கவிதைக்கு அவள் தாய் என்றால், அவள் கண்ணீருக்கு நீங்கள் தந்தை!
===கரிகாலன்
Last edited by Iniyan; 02-06-2005 at 10:27 AM.
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks