Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: வார்த்தைகள் எனும் நீர்..

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    வார்த்தைகள் எனும் நீர்..

    வார்த்தைகள் எனும் நீர்..

    அணைக்கட்டு
    நீராய் தேங்கிக் கிடக்கின்றன
    வார்த்தைகள்..


    அன்னம் வந்து குடிக்க
    காத்துக்கிடக்கிறது
    பாலோடு கலந்த நீர்..


    எல்லார் வீட்டுக்
    கழிவும் கலந்தாலும்
    சாக்கடையும் நீரே..


    சில சமயங்களில்
    தெப்பக்குளத்து
    நீராக..

    பல சமயங்களில்
    யாருக்கும் பயனில்லாத
    தேங்கிய குட்டையாக..


    எப்போதாவது
    கொட்டுகின்ற அருவியாக...
    கோபம்கொண்ட காட்டாறாக..


    இப்போது கடலில் கலக்க
    தருணம் பார்க்கும்
    சோகையான ஆறாக..
    Last edited by thempavani; 03-06-2005 at 05:50 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நீரின் பல தன்மைகளையும், நிலைபாடுகளையும் அருமையாக சொல்லிவிட்டீர்கள். அந்த நீரைப் போலத் தான் மனித வாழ்க்கையும். சமயத்தில் பாலோடு கலந்து பலரும் குடிக்க, பல நேரங்களில் சாக்கடையாக, உபயோகமற்ற குட்டையாக, அனைவரையும் உள்ளம் குளிராச் செய்யும் அருவியாக, விளைநிலத்திற்குப் பயன் தரும் ஆறாக - இவ்வாறு மனிதனின் வாழ்வு பல நிலைகளை எய்துகிறது. எந்த நிலையை எய்தும் என்பது அணைக்கட்டில் நீராகத் தேங்கியிருக்கும் வார்த்தைகளை எப்படி பயன் படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே - கவிஞனுக்கும் சரி, சாமான்யனுக்கும் சரி - வார்த்தகள் பொதுவானதே.

    நல்ல கவிதையைத் தந்தமைக்கு பாராட்டுகள்..........
    Last edited by thempavani; 03-06-2005 at 05:51 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கவிதைகளை மழைநீர் போல தந்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் ராம்பாலுக்கு நன்றி.
    Last edited by thempavani; 03-06-2005 at 05:52 AM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    சொற்கள் -- அகராதியில் நிறையக் கிடைக்கும்.

    அதே சொற்கள், ராம்பால்ஜியின் கைவண்ணத்தில் கவிதைவண்ணம் பெற்று ஒளிருமானால், படிப்பவரின் மனம் மகிழும், துயருரும், சிந்திக்கும், சினங்கொள்ளும். சிலசமயம் எல்லாமே ஒருங்கே நடக்கும்.

    ===கரிகாலன்
    Last edited by thempavani; 03-06-2005 at 05:52 AM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  5. #5
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Location
    THANJAVUR
    Posts
    426
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல ஒப்பீடு . பாராட்டுக்கள் நண்பரே .
    Last edited by thempavani; 03-06-2005 at 05:53 AM.

  6. #6
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கவிதை.. பாராட்டுக்கள்....
    Last edited by thempavani; 03-06-2005 at 05:54 AM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    தண்ணீரின் பலவித வேடங்கள். கவிதை வரிகளாக தந்தமைக்கு பிடியுங்கள் எங்கள் பாராட்டை., தொடருங்கள் உங்கள் வார்த்தை விளையாட்டை.
    Last edited by thempavani; 03-06-2005 at 05:54 AM.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by rambal
    வார்த்தைகள் எனும் நீர்..
    ..............
    கோபம்கொண்ட காட்டாறாக..

    இப்போது கடலில் கலக்க
    தருணம் பார்க்கும்
    சோகையான ஆறாக..
    அருமை ராம்பால்.... வார்த்தைகள் நீராய்...

    நீர் தாகம் தீர்க்கதானே...

    அன்பான வார்த்தைகள், எத்துனை சோகமெனும் தாகத்தையும் தீர்த்துவிடும்....

    கடலில் கலந்தாலும், மீண்டும் மழையாக பொழிந்து எல்லோரையும் குளிரவைக்கும்...
    Last edited by பென்ஸ்; 18-02-2006 at 08:47 AM.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by karikaalan View Post
    சொற்கள் -- அகராதியில் நிறையக் கிடைக்கும்.

    அதே சொற்கள், ராம்பால்ஜியின் கைவண்ணத்தில் கவிதைவண்ணம் பெற்று ஒளிருமானால், படிப்பவரின் மனம் மகிழும், துயருரும், சிந்திக்கும், சினங்கொள்ளும். சிலசமயம் எல்லாமே ஒருங்கே நடக்கும்.

    ===கரிகாலன்
    அண்ணலின் வரிகளுக்கு மேல் ராமின் கவிதை வன்மையைச் சொல்ல
    என்னிடம் சொற்கள் ஏது?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமையான கவிதைவரிகளை இன்னொருமுறை படிக்க உதவி செய்த இளசு அவர்களுக்கு என் நன்றிகள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  11. #11
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    நீருக்கும் வார்த்தைக்கும் அருமை ஒப்பீடு
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்ல சிந்தனைக் கவிதை. பலர் பார்வை பட்டு துலக்கமாக...
    நன்றி அனைவருக்கும்...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •