வார்த்தைகள் எனும் நீர்..
அணைக்கட்டு
நீராய் தேங்கிக் கிடக்கின்றன
வார்த்தைகள்..
அன்னம் வந்து குடிக்க
காத்துக்கிடக்கிறது
பாலோடு கலந்த நீர்..
எல்லார் வீட்டுக்
கழிவும் கலந்தாலும்
சாக்கடையும் நீரே..
சில சமயங்களில்
தெப்பக்குளத்து
நீராக..
பல சமயங்களில்
யாருக்கும் பயனில்லாத
தேங்கிய குட்டையாக..
எப்போதாவது
கொட்டுகின்ற அருவியாக...
கோபம்கொண்ட காட்டாறாக..
இப்போது கடலில் கலக்க
தருணம் பார்க்கும்
சோகையான ஆறாக..
Bookmarks