பூமிப் பந்து
_________
தத்துவ ஞானியே
உலகம் பந்து
போன்றது
என்றுதான்
சொன்னாய்!
உதைக்கச்
சொன்னாயா
களத்தில்
மோதல்!
திருமணம்
_________
நல்லன நடக்கினும்
தீயன அணுகினும்
நாமிருவரும்
சேர்ந்திருப்போம்!
வல்லது ஒருமை
வாழ்ந்திருப்போம்!
மின் தகடு
_________
சிரிக்காதே!
நான்
இருட்டில்
உறங்க
விரும்புகிறேன்!
சூரியன்
_________
திறக்காதே!
உன்
சுடர்
விழியை
என்னிடம்
கோடை கால
உடைகள்
இல்லை!
.....
Bookmarks