Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: சிறைக்கம்பிக்குள் விடுதலை..........

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    சிறைக்கம்பிக்குள் விடுதலை..........

    பேச்சு வார்த்தைகள் முடிந்தன
    தீர்மானிக்கப் பட்டன எல்லைக் கோடுகள்
    மூன்று முடிச்சுகள்.

    எல்லைகள் தாண்டவும் மீளவும்
    விண்ணப்பம் செய்ய வேண்டும் விசாவிற்கு -
    விரல்களில் வைரமோதிரம்.


    அடிக்கடி மோதலும் யுத்தமும்
    உச்சி மாநாட்டு ஒப்பந்தத்தின் விலை -
    ஊமைக் குயில்.

    புழுப் பூச்சி புலம்பல்களின் அலம்பல்
    அறையின் நீள, அகலத்தும் இறைந்து கிடக்கும் -
    கட்டிலில் நத்தையாய் புருஷன்.

    விதைத்து விதைத்துப் பார்த்து
    விளைந்ததை வெட்டி வெட்டி எறிவர் -
    ஆண்மைக்கு உரைகல்.

    நஞ்சை, புஞ்சை புறம்போக்காய்
    தங்கையை வளைத்துப் போட ரகசியப் பேரம் -
    நாட்டாமை அரசியல்.


    நாதியற்ற பேதை நாடினாள் விடுதலை
    கையில் மீண்டும் கிடைத்ததோர் ஆயுதம் -
    மூன்று முடிச்சுக் கயிறு.

    கட்டிய கயிற்றைப் பறிக்க வந்தவன்
    கழுத்தில் முத்தத்துடன் மூன்று முடிச்சு இறுக்கினாள் -
    விடுதலை சிறைக்கம்பிக்குள்.
    Last edited by thempavani; 02-06-2005 at 01:54 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  2. #2
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    சிறைக்கம்பிக்குள் விடுதலை..

    தலைப்பே அருமையான முரண்..
    லௌகீக வாழ்க்கையும்.. அதில் பெண்களின் நிலையும்..

    அருமை.. பாராட்டுக்கள் நண்பன் அவர்களே..
    Last edited by thempavani; 02-06-2005 at 01:54 PM.

  3. #3
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Location
    THANJAVUR
    Posts
    426
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கவிதை .


    பேச்சு வார்த்தைகள் முடிந்தன
    தீர்மானிக்கப் பட்டன எல்லைக் கோடுகள்
    இதைப் படித்தவுடன் இந்தியா பாகிஸ்தானை பற்றி ஏதோ சொல்லப்போகிறீர்கள் என நினைத்தேன் . ஆனால் முழுவதும் படித்த பிறகுதான் தெரிகிறது விஷயமே வேறு என்று .
    Last edited by thempavani; 02-06-2005 at 01:55 PM.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    வியாபார தலைநகரம&
    Posts
    920
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நண்பா புரிந்தும் புரியாதது போல் உள்ளது எனக்கு இக்கவிதை.
    Last edited by thempavani; 02-06-2005 at 01:56 PM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    நண்பா புரிந்தும் புரியாதது போல் உள்ளது எனக்கு இக்கவிதை.
    கல்யாணப் பேச்சு முடிந்து, திருமணம் நடந்தது.
    வரதட்சனைக் கொடுமை ஒழியவில்லை. அவள் வீட்டிற்குப் போகவும் வரவும் தடை விதிக்கப் பட்டு, இறுதியாக வைர மோதிரம் கொடுக்கப்பட்டு, அமைதிப்படுத்தப் படுகிறது. மேலும் மோதல்கள் - சமாதானப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில், எதிர்த்துப் பேசக்கூடாது என்று கட்டளை. ஊமையாகிறாள். வயிற்றில் வளரும் கருவைக் கலைத்து விடுகிறார்கள். பின்னர் வீட்டில் ஒரு புழு, பூச்சி பூக்கவில்லை என்ற ரீதியில் குற்றச் சாட்டு வேறு. அதயே காரணம் காட்டி, அவளின் தங்கையையும் மணமுடிக்க முயல்கின்றனர். மீதியிருக்கும் சொத்தையும் அபகரிக்க. ஆண்வர்க்க கிராம அரசியல் ஒத்துழைக்கிறது. பட்ட இன்னல்கள் எல்லாம், ஒரு தாலிக்கொடிக்காக என்ற பட்சத்தில், அதற்கும் பங்கம் வரும் பொழுது வெகுண்டு எழுகிறாள். தங்கையின் வாழ்க்கையை வேறு காக்க வேண்டும். கணவனை கழுத்தை இறுக்கிக் கொள்கிறாள். சிறை செல்கிறாள். விடுதலை பெற்ற உணர்வையும் பெறுகிறாள்.
    Last edited by thempavani; 02-06-2005 at 01:58 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    ஆஹா! அருமையாகச்சொன்னிர்கள்

    அபாரம்! உங்கள் கற்பனை
    Last edited by thempavani; 02-06-2005 at 01:58 PM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  7. #7
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Location
    THANJAVUR
    Posts
    426
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை அருமை . அதன் விளக்கம் அதைவிட அருமை . பாராட்டுக்கள் நண்பரே .
    Last edited by thempavani; 02-06-2005 at 01:59 PM.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    நண்பரே!

    அருமையான கவிதை. கணவனைக் கொன்றதே சரியான செயல். இல்லையேல் இன்னும் எத்தனை எத்தனை பேரை சித்திரவதை செய்வானோ!


    ===கரிகாலன்
    Last edited by thempavani; 02-06-2005 at 01:59 PM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  9. #9
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல கவிதை!வாழ்த்துக்கள் தோழரே!
    Last edited by thempavani; 02-06-2005 at 02:00 PM.

  10. #10
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல கவிதைச் சிறுகதை..... பாராட்டுக்கள்..மீண்டும் தொடருங்களேன்..
    Last edited by thempavani; 02-06-2005 at 02:00 PM.

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    எவ்வளவு பெரிய விளக்கம்... அந்த கவிதைக்குள்.. ஒரு படம் எடுக்கலாம்போல உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றையும்!!!

    பாராட்டுக்கள் நண்பரே..
    Last edited by thempavani; 02-06-2005 at 02:01 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    எவ்வளவு பெரிய விளக்கம்... அந்த கவிதைக்குள்.. ஒரு படம் எடுக்கலாம்போல உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றையும்!!!

    பாராட்டுக்கள் நண்பரே..
    கதையைச் சுற்றி கவிதை படைப்பது, உங்களுக்கும் கை வந்த கலைதானே - என்றென்றும் காதலில் இல்லாத நிழல் ஓவியமா?
    Last edited by thempavani; 02-06-2005 at 02:02 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •