ஏ கடலே ! ஏ கடலே !!
கட்டுமரங்கள் காணோம்
நட்டமரங்களும் கானோம்
குழவிகளும் கானோம்
கிழவிகளும் கானோம்
தேசப்படத்தில் சில கிராமங்கள் கானோம்
பிணத்தை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே கானோம்
பறவைகள்
மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தாள் அழகு
மொத்தமாய்வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை
அழுதது போதும் எழுவோம்
அந்த மொத்தப் பிணக்குழியில்
நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்
இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு
இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்
நாம் மனிதர்கள்
எதிர்கொள்வோம்
மீண்டும் கடலே
மீன்பிடிக்க வருவோம்
ஆனால்!!!
உனக்குள் அஷ்திகரைக்க
ஒருபோதும் வரமாட்டோம்!!!!!
நட்புடன்
உங்கள்
சதீஷ்
Bookmarks