Results 1 to 5 of 5

Thread: பனி துளிகள்..

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    uk
    Posts
    12
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    பனி துளிகள்..

    பனி துளிகள் கொண்டு பிரம்மன்

    படைத்து விட்ட சித்திரமே

    உயிர் துளிகள் பறிக்கின்றாய்

    என் உயிர் துளிகள் பறிக்கின்றாய்..



    இரவு பகல் தெரியவில்லை

    ஏன் என்றும் புரியவில்லை

    ஏனடி கொல்லுகின்றாய்

    ஏன் என்னை கொல்லுகின்றாய்?..

    ******************

    புன்னகை வீசி என் மனதை

    பறித்து சென்ற பெண்ணவளே

    உன் பெயரும் தெரியவில்லை

    எங்கே நீ என்னவளே?



    மல்லிகை போன்ற மலர் விழியால்

    என்னை மயக்கி சென்றவளே

    இத்தனை காலம் காத்திருக்கேன்

    எங்கே நீ என்னவளே?



    உன்னை நான் பார்த்த நிமிடம்

    வேர்த்து இதயம் நின்று போச்சு

    அன்றோடு பெண்ணே பெண்ணே

    நீதானே எந்தன் மூச்சு



    காதல் இருந்தால்

    அன்பே நீ வா..

    இல்லை என்றால்

    துளி விசம் தா..

    *************

    இமைகள் மறைக்கும் உன் விழிகள்

    இரண்டு அழகிய நிலவுகளோ

    விழியின் மேலே புருவம் இரண்டும்

    நிலவை மறைக்கும் மேகங்களோ?



    கனவில் இன்று வருவாயோ

    கண் மூடி கொள்கின்றேன்

    இரவுகளை எதிர் பார்க்கின்றேன்

    இனியவளே உனை நினைக்கின்றேன்



    நீ சிந்தும் புன்னகைகள்

    என்ன விலையோ

    சொல்லு பெண்ணெ

    நான் எந்தன் உயிரை தந்து

    விலைக்கு வாங்க

    வருவேன் அன்பே



    காதல் இருந்தால்

    அன்பே நீ வா..

    இல்லை என்றால்

    துளி விசம் தா..
    Last edited by மன்மதன்; 01-06-2005 at 08:30 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    எங்கோ ஓர் சாலை வளைவில்

    உன் பிம்பம் தொலைந்ததடி.....

    அங்கேயே நின்றுகொண்டு

    என்னுயிர் புலம்புதடி......



    ஆப்பிள் பெண்ணை நினைவுபடுத்துகிறது உங்கள் ஏக்கக்கவிதை...!

    பாராட்டுகள் நண்பரே!
    Last edited by மன்மதன்; 01-06-2005 at 08:37 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    புதியவர்
    Join Date
    02 Apr 2003
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    என்ன நன்பரே உங்கள் ஏக்கத்தை கவிதை ஆக்கியதைப் போல்

    அத்தனை உருக்கமாய் இருக்கின்றது? உங்கள் ஆவல் நிறை வேற

    வாழ்த்துக்கள். கவிதைக்கும்தான் ம் ம்ம் நன்றாய் இருக்கின்றது

    உங்கள் கவிதை. தொடருங்கள் மேலும் உங்கள் பதிவுகளை.

    கன்னி
    Last edited by மன்மதன்; 01-06-2005 at 08:41 AM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    எங்கேயோ அவளைப்பார்த்துவிட்டு.................

    இப்படி ஏங்குகிறீரே...??? சீக்கிரமே அவள்

    உங்களை தேடிவரட்டும்.

    ( அவள் வந்ததும் கவிதை எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்!! )
    Last edited by மன்மதன்; 01-06-2005 at 08:42 AM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    காதலை வேண்டி, கவிதை எழுதியவருக்கு காதல் கிட்டியதா, இல்லையா.......
    Last edited by மன்மதன்; 01-06-2005 at 08:45 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •