தஞ்சை தமிழன் கேட்டதும், தம்பி பிரதீப் தகவல்கள் தந்தார்.. நன்றி பிரதீப்.
எனக்கு பிடிபடாத விசயம் இது.
அனைவரும் அண்ணலை எதிர்பார்த்து......
தஞ்சை தமிழன் கேட்டதும், தம்பி பிரதீப் தகவல்கள் தந்தார்.. நன்றி பிரதீப்.
எனக்கு பிடிபடாத விசயம் இது.
அனைவரும் அண்ணலை எதிர்பார்த்து......
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
பணிபளுவால் மன்றம் வர இயலவில்லையாம். விரைவில் வருவதாகத் தெரிவித்தார்.அண்ணல் எங்கே?
பங்கு சந்தை பதிவுகள் போன்ற உங்கள் பங்களிப்பு மன்றத்துக்கு இன்றியமையாத தேவை..
விரைவில் அண்ணல் வரவேண்டும்... வருவார்!
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
நன்றி கவீ... நல்ல சேதிக்கு..
நம் அனைவரின் கனிவான விசாரிப்புகளையும், ஆவலான காத்திருப்பையும் அண்ணலுக்குச் சொல்லுங்கள்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அனைவரது விழிகளும் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் எப்போது 10,000 புள்ளிகள் என்ற மைல் கல்லை தாண்டும் என்று காத்திருக்கிறார்கள்.
பட்ஜெட்-க்கு பிறகு தான் இதை தொடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அதற்கு முன்பே தொட்டு விடும் போல் உள்ளது.
வர்த்தக நிறுவனங்களின் வருடாந்திர முடிவுகள் நல்ல நிலையில் வந்து கொண்டிருக்கின்றன. பெப்ரவரி 1-ம் தேதி 9983 புள்ளிகள் வரை சென்று திரும்பியது. இப்போது 9800 புள்ளிகளில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
மும்பை சச்சின் எப்போது செஞ்சரி அடிப்பார் என்பது போல... அனைவரையும் ஆவலுடன் பார்க்க வைத்திருக்கிறது, மும்பை பங்கு சந்தை.
ஜாக்கிரதை யப்பா..
பட்ஜெட்டுக்கு அப்புறம் ஒரு படுகுழி இருக்குதப்பா..
கையில இருப்பதை இப்போ வித்து காசு பாரப்பா..
புதிய முயற்சிகளை அக்டோபர் வரை தள்ளிப்போடப்பா
அந்த ஜக்கம்மா சொல்லரா.. ஜக்கம்மா சொல்லரா...
உயரும் போது விற்பதும் இறங்கும் போது வாங்குவதும் மிக நல்லது...
அப்போதுதான் சந்தை சம நிலையில் இருக்கும்.
பிரதீப் icici பாங்க் மூலம் யாராவது பங்கு வாங்கியிருக்கிறீர்களா. நான் முயற்சித்த பொழுது.. முதல் வருடம் 18%, 2ம் வருடம் 7.5%, மூன்றாம் வருடம் 7% பணம் எடுத்துக்கொள்வார்களாம். இது ரொம்ப ஓவராக தெரிகிறது.Originally Posted by pradeepkt
தெரிந்தவர்கள் விவரம் சொல்லுங்கள்
பங்குச்சந்தை முதன்முறையாக 10,000 புள்ளிகளை தொட்டுள்ளது..
மேலும் வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடுகள் அதிகரிப்பதாக சொல்கிறார்கள்....
நாடு நல்ல முறையில் முன்னேறினால் சரிதான்
ஆமாம், அறிஞரே.. நேற்றும் இன்றும் 10,000 -க்கு மேலேயே பங்கு சந்தை பறந்து கொண்டிருக்கிறது. இனி profit booking வரும் நேரம். அதனால் குறைய வாய்ப்பிருக்கிறது.
இந்த வருடத்தில் 12,000 புள்ளிகளை தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், இது ரொம்பவே சூடான சந்தையாக தெரிகிறது. அதனால், புதியவர்கள் மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்துக் கொண்டு சிறிது ஒதுங்கி இருந்து Mutual Fund-களில் பணத்தை போட்டு விட்டு பங்கு சந்தையை வேடிக்கை பார்ப்பது தான் சிறந்தது என்று படுகிறது.
என்னை பொருத்தவரை, இந்த அரசாங்கம் தாக்கு பிடிக்கும் வரை, கம்யூனிஸ்ட்கள் காலை வாரி விடாதவரை, இந்த பங்கு சந்தை இன்னும் உயரத்தில் பறந்து கொண்டே இருக்க வாய்ப்புள்ளது.
Last edited by இராசகுமாரன்; 08-02-2006 at 02:43 PM.
இது ரொம்ப ஓவராக தெரிகிறது அறிஞரே..Originally Posted by அறிஞர்
சரியாக பார்த்தீர்களா?
சென்ற வருடம் நான் கணக்கு ஆரம்பிக்க நினைத்த போது பார்த்தேன்,
இவ்வளவு இல்லையே? விசாரித்து விட்டு கூறுகிறேன்.
நீங்கள் இருக்கும் இடத்தில் Stock Brokers யாரும் இல்லையா?
அவர்கள் மூலம் செல்வதே சிறந்தது.
இங்கே Geojit இருக்கிறார்கள் நல்ல சர்வீஸ்.
அவர்கள் கிளை பல நாடுகளில் உள்ளது.
அங்கேயும் இருக்க வாய்ப்புள்ளது, தேடிப் பாருங்கள்.
Last edited by இராசகுமாரன்; 08-02-2006 at 03:09 PM.
நான் இந்த இடத்திற்கு புதிது என்பதால் இன்னும் சரியாக தெரியவில்லை.
இந்தியாவில் இருக்கும் நல்ல ப்ரோக்கர்ஸ் பற்றித்தெரிந்தால் தகவல் கொடுக்கவும்.
மேலும் icici mutual funds பற்றி விசாரித்து வருகிறோம். நல்ல தகவல் கிடைத்தால் தருகிறேன்.
12000 புள்ளிகள் என்பது மிகப்பெரிய சாதனையே...Originally Posted by இராசகுமாரன்
பேசாமல் இந்தியாவில் உள்ளவர்கள் பங்குச்சந்தையை கற்று... அதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம் எனத்தோன்றுகிறது
நானாவது 1200 புள்ளிகளோடு நிற்கிறேன்.Originally Posted by அறிஞர்
என் நண்பர், 20000 புள்ளிகள் வரை செல்லும் என்கிறான்.
எல்லாம் "சிதம்பர" ரகசியம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks