Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 37 to 48 of 54

Thread: முடிவதை மட்டும் நினை

                  
   
   
  1. #37
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by பாரதி View Post
    எப்போதும் முடிவில்லாமல் மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் கவிதை. திஸ்கி மன்றம் போலவே இங்கும் இதை ஒட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.
    ஒட்டி வைத்துள்ளேன் அண்ணா...!

  2. #38
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    என் நெஞ்சார்ந்த நன்றிகள் அமரன்.

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மிக எளிமையாக அழகாக பயணிக்கிறது கவிதை... இளசுவின் ஸ்டைலில்!

    முடிவதை மட்டும் நினை!
    'முடிவு' அதை மட்டும் நினைக்காதே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #40
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    இளசு அண்ணாவின் பின்னூட்ட கவிகளையே பார்த்து படித்த எனக்கு முதல் கவிதை ஸ்பரிசம் இந்த ஒட்டிவைத்து அழகு பார்த்த கவிதைப்பூ மூலம் கிடைத்திருக்கிறது.

    அந்நிய தேசத்தில்
    அன்பு நட்பு..!
    எதிரெதிர் திசையில்
    எதார்த்த வாழ்வுநெறிகள்..!
    எட்டிப் பார்த்தது
    உண்மை தோழமை..!

    பிரிந்த இரு உளம்
    சேர்ந்து சந்தித்த தருணம்..!

    அழகு கோலத்தின் ஒரு பாதி
    அலங்கோலமாய்..!
    அதிர்ச்சியிலும் ஆறுதல்..
    தன்னுயிர் கன்னியும் கண்துடைக்கும்
    கணினியும்..!!

    முடிவதை மட்டும் நினைத்து
    முகம் சிரிக்கும்
    ஒவ்வொரு நாளும்..!!


    அழகான கருத்து பொதிந்த கவிதை..!!
    வாழ்வின் தத்துவம் சொன்ன கவிதை..!!


    பாராட்டுகள் இளசு அண்ணா..!


    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #41
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஒட்டச் சொன்ன பாரதி
    ஒட்டி அழகுபார்த்த அமரன்

    வெட்டவெளிக்கு மனதை விட்ட ஆதவன்..
    முடிவதெற்கெல்லாம் முயலச்சொன்ன நாம்செக்
    முடிவை நினைக்காதே என திருமூலம் சொன்ன ஷீ..

    அழகிய கவிதை அணிவித்த பின்னூட்ட நாயகி - என் தங்கை பூ..


    அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..

    இந்நேரத்தில் - திஸ்கி மன்றத்தில் படித்ததும் ஒட்டிப் பெருமை செய்த
    அன்பு பப்பி அவர்களுக்கும் மறவா நன்றி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #42
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    ஒட்டச் சொன்ன பாரதி
    ஒட்டி அழகுபார்த்த அமரன்

    வெட்டவெளிக்கு மனதை விட்ட ஆதவன்..
    முடிவதெற்கெல்லாம் முயலச்சொன்ன நாம்செக்
    முடிவை நினைக்காதே என திருமூலம் சொன்ன ஷீ..

    அழகிய கவிதை அணிவித்த பின்னூட்ட நாயகி - என் தங்கை பூ..


    அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..

    இந்நேரத்தில் - திஸ்கி மன்றத்தில் படித்ததும் ஒட்டிப் பெருமை செய்த
    அன்பு பப்பி அவர்களுக்கும் மறவா நன்றி!
    அட என்ன ஒரு லைன்..... உங்கள் இருவருக்கும்..

    முடிவதை மட்டும் நினை என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த வரிகளுக்கு மேலும் கவிதை பூசியிருக்கிறார் ஒருவர்.... கண்டுபிடியுங்களேன்...

    அவரும் மன்றத்தில்தான் இருக்கிறார்..

  7. #43
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    முடிவதை மட்டும் நினை


    1993

    ஆர்வம் தெறிக்கும் கண்கள்
    அவசரம், கற்க ஆத்திரம்
    என்னையே பார்த்தேன் உன்னிடம்
    என் நிறம் கறுப்பு, உதிரமோ ஒரே நிறம்

    வேற்றுமை இல்லை நம்மிடம்
    நான் கற்பிப்பவன் -தான்
    உன்னிடமும் கற்றுக்கொண்டேன்
    என்னிடம் நீ அறிவியலை
    உன்னிடம் நான் இந்நாட்டு வாழ்வியலை

    கையால் சோறுண்ண நீ தடுமாற- முள்
    கரண்டியோடு நான் சடுகுடு ஆட
    இளையராஜாவை நான் தர
    எல்விஸ் பிரஸ்லி நீ தர

    பண்டம் மட்டும் அல்ல
    பண்பாடும் கைமாறியது
    காலவெள்ளத்தில் வாழ்க்கை
    திசைமாறியது
    ஒரு U திருப்பம் வந்து உன் தேசத்துக்கே
    மீண்டும் என் வழி மாறியது

    2003

    வந்த சேதி கேட்டு ஓடி வந்தாய்
    இல்லை இல்லை சக்கர வண்டியில் வந்தாய்
    "என்னாச்சு டெர்மாட்?"
    கண்கள் ஊற்றெடுக்கக் கேட்டேன்

    புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்
    கண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு
    தண்ணீருக்கு மட்டுமே என்னூரில் கட்டுப்பாடு

    சொன்னாய், கோரக்கதை சொன்னாய்
    சைப்ரஸ் பயணம் சைத்தானாய் அமைந்த கதை
    கார் கவிழ்ந்து கழுத்தெலும்பு முறிந்த நிலை
    இடைவிடா பயிற்சி இரு வருடம்

    எத்தனை எத்தனை தடைக்கற்கள்
    எப்படி தாண்டினாய் இளைஞனே

    சக்கர நாற்காலிதான் இனி கால்கள்
    மாற்றி அமைத்த கார்தான் உன் சிறகுகள்
    புரிந்தும் சேர்ந்த தோழி உன் மன மருந்து
    புதிதாய் கற்ற கணினிதான் பொழுதுபோக்கு

    புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்

    "எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
    " உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
    பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
    காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்:

    Think What You Can Do-
    Not What You Can't Do "


    முடியாததை அல்ல
    முடிவதை மட்டும் நினை

    ஓவ்வொரு பூக்களுமே பாடல்தான் ஞாபகம் வந்தது,

    கவிதைக்கதையை படித்து 'உன்னால் முடியும்' என்ற உற்ச்சாகம்தான் குழந்தையாய் பிறந்தது.

    நன்றிகள் இளசு.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  8. #44
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0

    நினைப்பதைச் செய்வேன் என்று நினை!

    Think What You Can Do-
    Not What You Can't Do "

    முடியாததை அல்ல
    முடிவதை மட்டும் நினை


    அப்பாடா.. 'என்றும் இளசு' - உடன் கருத்துப் போர் செய்ய ஒரு நல்ல சந்தர்ப்பம்.

    உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
    முடியாதது என்று ஒருவனுக்கு எப்படி முயற்சி செய்யும் முன்னரே தெரியும்?

    காந்திக்கு நமக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தது. 1910 -ல் அவருக்கு தெரியாது நமக்கு 'நிச்சயமாக சுதந்திரம் கிடைக்கும் என்று' . ஆனால் 'முடியும்' என்ற எண்ணம் இருந்தது.

    ஆகாயத்தில் மனிதன் பறக்கலாம் என்ற சிந்தனையை நினைத்தால், "Impossible" என்றே தோன்றும். ஆனால் ரைட் பறந்தானே. அவன் முடியாதது என்று நினைத்திருந்தால் நடந்தோ, புகை வண்டியிலோ பயணம் செய்திருக்கலாமே.

    எனவே.. நினைக்கும் போது, "முடியும் / முடியாதது " என்று எண்ணம் தேவை இல்லை.ஏனெனில் உனக்கு தெரியாது உன்னால் முடியுமா முடியுமா இல்லையா என்று. பிறந்த குழந்தை நடப்பதில்லை. கற்று கொண்டு தான் நடக்கிறது.

    அப்படியென்றால், புலிகள் தோற்றதற்கு காரணம் என்ன? முடியும் என்று நினைத்து போராடினார்களா? இல்லை முடியாது என்று நினைத்திருந்தார்களா? முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் முடியாமல் போய் விட்டது.
    2009-ல் இப்படி நடக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் ஏன் இப்படி 20 வருடமாய் போராடப் போகிறார்கள்?

    எதிர் காலத்தை கணிக்க தான் முடியும். உறுதி படுத்த முடியாது.

    எனவே...
    நினை!
    கள்!
    செய்!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  9. #45
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    தென்றல், ஓவி, லெனின் - மூவருக்கும் நன்றி!

    ஹ்ஹ்ஹ்ஹா... லெனின்...
    அழகான மறுபார்வையை முன்வைத்து
    அருமையான கருத்தாடலுக்கு அடித்தளம் போட்டிருக்கிறீர்கள்..

    முன்னர் ராம்பால், நண்பன், பூ, பப்பி, லாவண்யா நிலா, முத்து, பாரதி
    என கவிதையில் களம் காண ஒரு பட்டாளமே இருந்தது..

    இன்று இனிய பென்ஸ், ஆதவன், ஆதி, சிவா என இருக்கிறார்கள்.

    அவர்களில் யாராவது வந்து
    இந்த இரு முனைகளை எடைபோட்டு
    கருத்தாட மாட்டார்களா என ஏங்குகிறேன்..

    அப்படி யாரும் வாராமல்போகும் நிலை வந்தால்
    நானே மல்லுக்கட்ட வந்தாலும் வருவேன்..

    காத்திருக்கலாமா லெனின்?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #46
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தன்னம்பிக்கையூட்டம் கவிக்கு நன்றி இளசு.
    ---------
    முடியும் என முயற்சி செய்யவேண்டியது நம் கடமை.
    முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்... என்ற வாக்கின் படி வெற்றியை எதிர்பார்த்தல் நல்லது.

    முயற்சியில்லாமல் தூங்கினால் எதையும் சாதிக்க இயலாது.

    முயற்சி செய்து.. முடிவு பாதகமாக வந்தால்... கற்றுக் கொண்ட பாடங்களை எண்ணி மகிழ வேண்டியது தான்.
    ------------
    இந்த முயற்சி.. தனி மனிதனுக்குரியது (குழுவுக்கானதல்ல)....

  11. #47
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மீண்டும் மீண்டும் படிக்க முடியும் - முடியும் என்ற உற்சாகம்தான் பிறக்கிறதே தவிர வேறெதுவும் தோன்றவில்லை. எப்போதேனும் மனதில் பிறக்கும் வியப்பூட்டக்கூடிய கவிதை தந்த அண்ணனுக்கு நன்றி.

    கவிதை சொல்வதும் முடியாது என்பதைக்குறித்தல்ல; முடியும் என்பதையே வலியுறுத்துகிறது என்றே நான் கருதுகிறேன்.

    பொதுவாக கருத்தாடுவதை விட கவிதையில் வந்த கருத்தைக் கண்டோமென்றால் - கழுத்தெழும்பு முறிந்த நிலையிலும், இரண்டு வருட காலம் இடைவிடாமல் முயற்சி செய்ததையும், அந்த நிலையில் தன்னால் எதை சாதிக்க முடியுமென பட்டியலிட்டு சாதிக்க விரும்புவதையும்தானே கவிதையும் கூற வருகிறது?

    “உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
    பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்” - தன்னால் முடியாது என்று நினைத்திருந்தால் இந்த வாக்கியங்கள் மெக்டெர்மாட்டிடம் இருந்து வந்திருக்கவே இயலாது.

    கவிதை வாக்கியங்களை எதிர்மறையாக நோக்க வேண்டிய அவசியம் இல்லை - தன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் முயலும் ஒரு அற்புத இளைஞனின் வார்த்தைகளாகத்தான் எனக்குத்தோன்றுகிறது.

  12. #48
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சின்ன வயசில் பாடப்புத்தகத்தில் படித்தது. இலக்குப் பார்.. அம்பை விடு என்ற பாடம். இதுவே அதன் சாரம்சம்..

    மாணாக்கர்களை சோதிக்க எண்ணினார் வில்வித்தைக் குரு துரோணாச்சாரியார். ஒரு மரம்.. அதன் ஒரு கிளையில் பொம்மைக் கிளி. கிளியின் கழுத்தில் அம்பால் அடிக்கவேண்டும் என்பது இலக்கு. ஒவ்வொருவரும் வில்வளைத்து நாணேற்றி இலக்குப் பார்க்கும்போது துரோணர் கேப்பார், மரம் தெரிகிறதா? கிளை தெரிகிறதா? கிளி தெரிகிறதா? கிளியின் கழுத்து தெரிகிறதா?.. எல்லாரும் எல்லாம் தெரிகிறது என்று சொல்லக் கர்ணன் சொல்வான் "மரம் தெரியவில்லை; கிளை தெரியவில்லை; கிளிதெரிகிறது".. அவனாலும் கிளியின் கழுத்தை கொய்ய முடியவில்லை. அர்ச்சுனன் வந்தான். கிளியின் கழுத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை. இலக்கை அடித்தான்.

    அர்ச்சுனால் மட்டுமே முடியும் என்று அறுதியாக நம்பியதால் அவனை இறுதியாக அழைத்தார் துரோணர்.(?)

    இந்த அம்பால் இதனைத்தான் செய்ய முடியும். இதனைச் செய்தால் இதனை அடையமுடியும் என்பதை நினைத்து முடித்தான் அர்ச்சுனன்.

    இருவரும் முடிவதை மட்டும் நினைந்துள்ளார்கள். இப்போதும் அர்ச்சுனர்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் களங்களும் வீரர்களும் முன்பு போல இல்லை. பல கருத்துப் போர்கள் நெறிபிறழ்ந்து தடம் புரள்வதும் இதனால்தான். இதனை உணர்ந்து முடிவதை மட்டும் நினைப்பவர்கள் எவரும் தோற்பதில்லை.

    சேவலை வளர்த்து முட்டைபோடு என்றால் முடிகிற காரியமா?

    பேடை வளர்க்க வேண்டும். இதுவே முடிவதை நினை.
    Last edited by அமரன்; 26-06-2009 at 03:36 PM.

Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •