எத்தனை வாட்டிப் படித்தாலும் பச்சைக் காய்கறியாய் இந்தக்கவிதை.
வாழ்த்த வாகில்லை. வணங்கி நிற்கிறேன் அண்ணா!.
எத்தனை வாட்டிப் படித்தாலும் பச்சைக் காய்கறியாய் இந்தக்கவிதை.
வாழ்த்த வாகில்லை. வணங்கி நிற்கிறேன் அண்ணா!.
சேவல் கோழி முட்டை போடுவது, ஆண்கள் கர்ப்பமாவது, சிகப்பு பேனா பச்சையாக எழுதுவது, குதிரைக்கு கொம்பு முளைப்பது, புலி புல் தின்பது - போன்ற இயற்கையாகவே முடியாதவைகளையா இளசு " Not What You Can't Do " - ல் சொல்லுகிறார்?
இல்லை. இவை எல்லோருக்கும் தெரியும் "முடியாதவை" என்று. அப்படி என்றால், "Not What You Can't Do " - ல் சொல்ல வருவது என்ன? இந்த வாக்கியமே குற்றம்( நன்றி: நக்கீரன்)
நினைக்கும் போது எப்படி "முடியும் முடியாது" என்று நினைக்க முடியும்?
ராமேஸ்வர குழந்தை வளர்ந்து ஜனாதிபதி ஆகிறது? வறுமைக்கு பிறந்த குழந்தை மைக்கேல் ஜாக்சன் ஆகிறது? எப்படி? எனவே "முடியும்" என்ற ஒரே நினைப்பு தான் உள்ளது.
குறிப்பு:
இந்த சிறந்த கவிதையை குறைத்துப் பேசுவது என் நோக்கமல்ல. 'என்றும் இளசு' இன்னும் இப்படி 'என்றும் நிலைக்கும் கவிதை'களை இன்னும் தர வேண்டும்.
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
அன்பின் இளசுவின் நண்பருக்கு என் ஊக்கங்கள்...
இளசு, இது பலமுறை வாசித்த கவிதைதான் என்றாலும், கவிதையின் கருத்து கேள்விக்கு வந்த போது கவிதை திரிசங்கு லோகத்தில் தொங்குவது போல எனக்கு தோன்றும்... அதனால் பணி பளுவிலும் களம் குதித்துவிட்டேன்...
மனிதனால் முடியாது என்று எதுவும் கிடையாது என்று சொல்லும் அளவிற்க்கு சாதனைகள்...
ஆனால் எல்லாம் ஒரு தனி மனிதனால் முடியுமா என்று சொல்லும் போது... கடினமே...
ரைட் பறந்ததும் அப்படிதான்... ஆதி கால மனிதனின் கனவு கரு, இறக்கை கட்டி பறது, தோற்று, பலூன் கட்டி மலையில் இருந்து குத்தித்து, கிளைடர் கட்டி கால் உடைத்து.. அப்படா எத்தனை தோல்விகள்... அந்த தோல்விகளை எல்லாம் படிகளாக்கி பழம் பறித்தார்கள் ரைட்...
டெர்மாட்.. தான் சிறப்பாக வாழ தன்னால் சின்ன சின்ன வெற்றிகளை படிகளாக்க நினைக்கிறார்...
வெற்றி எப்போது அதன் கடைசி வடிவிலையை எடைபோட படுகிறது... அது கடந்து வந்த பாதையால் அல்ல... பாதைகள் வேறாயிருக்கலாம்... டெர்மட் தன் கண்ணுக்கு தெரிந்த தெளிவான பாதையில் பயணிக்கிறார்...
ராபர்ட் பிராஸ்டின் "தி ரோட் நாட் டேக்கன்" ந் கடைசி வரிகள் போல, சாதனையாளராகவும் விரும்பலாம்... உங்களுக்கு வெற்றிய அடைய நேரமோ, அதன் வழியோ தெரியாமல் ஒரு புதையல் வேட்டை போல செய்யலாம்...
இளசு.. உங்கள் நண்பரை நீங்கள் 2013 சந்திக்க விரும்புகிறென், அதனால் வரும் மூன்றாம் பத்தி எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
கவிக்கு அடி, தளை, தேமா, புளிமா, எதுகை, மோனை, இலக்கணம், தலைக்கனம் இதெல்லாம் தேவைதான். ஆனால் நமக்கு அவர் சொல்ல வந்த விஷயங்களை அவரால் முடிந்த வரை கவிதை வடிவில் சொல்ல முனைந்திருக்கிறார். அந்த நல்ல உள்ளத்தை பாராட்டுவதோடு அவரை பாதித்த பதிவுகள் நம்மையும் பாதித்திருக்கிறது என்றளவில், அவரது முயற்சியை வரவேற்போம்.
உன்னையே நீயறிவாய்
முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை
- நன்றாய் இருக்கிறது
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks