மிக எளிமையாக அழகாக பயணிக்கிறது கவிதை... இளசுவின் ஸ்டைலில்!
முடிவதை மட்டும் நினை!
'முடிவு' அதை மட்டும் நினைக்காதே!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
இளசு அண்ணாவின் பின்னூட்ட கவிகளையே பார்த்து படித்த எனக்கு முதல் கவிதை ஸ்பரிசம் இந்த ஒட்டிவைத்து அழகு பார்த்த கவிதைப்பூ மூலம் கிடைத்திருக்கிறது.
அந்நிய தேசத்தில்
அன்பு நட்பு..!
எதிரெதிர் திசையில்
எதார்த்த வாழ்வுநெறிகள்..!
எட்டிப் பார்த்தது
உண்மை தோழமை..!
பிரிந்த இரு உளம்
சேர்ந்து சந்தித்த தருணம்..!
அழகு கோலத்தின் ஒரு பாதி
அலங்கோலமாய்..!
அதிர்ச்சியிலும் ஆறுதல்..
தன்னுயிர் கன்னியும் கண்துடைக்கும்
கணினியும்..!!
முடிவதை மட்டும் நினைத்து
முகம் சிரிக்கும்
ஒவ்வொரு நாளும்..!!
அழகான கருத்து பொதிந்த கவிதை..!!
வாழ்வின் தத்துவம் சொன்ன கவிதை..!!
பாராட்டுகள் இளசு அண்ணா..!
ஒட்டச் சொன்ன பாரதி
ஒட்டி அழகுபார்த்த அமரன்
வெட்டவெளிக்கு மனதை விட்ட ஆதவன்..
முடிவதெற்கெல்லாம் முயலச்சொன்ன நாம்செக்
முடிவை நினைக்காதே என திருமூலம் சொன்ன ஷீ..
அழகிய கவிதை அணிவித்த பின்னூட்ட நாயகி - என் தங்கை பூ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..
இந்நேரத்தில் - திஸ்கி மன்றத்தில் படித்ததும் ஒட்டிப் பெருமை செய்த
அன்பு பப்பி அவர்களுக்கும் மறவா நன்றி!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
Think What You Can Do-
Not What You Can't Do "
முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை
அப்பாடா.. 'என்றும் இளசு' - உடன் கருத்துப் போர் செய்ய ஒரு நல்ல சந்தர்ப்பம்.
உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
முடியாதது என்று ஒருவனுக்கு எப்படி முயற்சி செய்யும் முன்னரே தெரியும்?
காந்திக்கு நமக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தது. 1910 -ல் அவருக்கு தெரியாது நமக்கு 'நிச்சயமாக சுதந்திரம் கிடைக்கும் என்று' . ஆனால் 'முடியும்' என்ற எண்ணம் இருந்தது.
ஆகாயத்தில் மனிதன் பறக்கலாம் என்ற சிந்தனையை நினைத்தால், "Impossible" என்றே தோன்றும். ஆனால் ரைட் பறந்தானே. அவன் முடியாதது என்று நினைத்திருந்தால் நடந்தோ, புகை வண்டியிலோ பயணம் செய்திருக்கலாமே.
எனவே.. நினைக்கும் போது, "முடியும் / முடியாதது " என்று எண்ணம் தேவை இல்லை.ஏனெனில் உனக்கு தெரியாது உன்னால் முடியுமா முடியுமா இல்லையா என்று. பிறந்த குழந்தை நடப்பதில்லை. கற்று கொண்டு தான் நடக்கிறது.
அப்படியென்றால், புலிகள் தோற்றதற்கு காரணம் என்ன? முடியும் என்று நினைத்து போராடினார்களா? இல்லை முடியாது என்று நினைத்திருந்தார்களா? முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் முடியாமல் போய் விட்டது.
2009-ல் இப்படி நடக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் ஏன் இப்படி 20 வருடமாய் போராடப் போகிறார்கள்?
எதிர் காலத்தை கணிக்க தான் முடியும். உறுதி படுத்த முடியாது.
எனவே...
நினை!
கள்!
செய்!
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
தென்றல், ஓவி, லெனின் - மூவருக்கும் நன்றி!
ஹ்ஹ்ஹ்ஹா... லெனின்...
அழகான மறுபார்வையை முன்வைத்து
அருமையான கருத்தாடலுக்கு அடித்தளம் போட்டிருக்கிறீர்கள்..
முன்னர் ராம்பால், நண்பன், பூ, பப்பி, லாவண்யா நிலா, முத்து, பாரதி
என கவிதையில் களம் காண ஒரு பட்டாளமே இருந்தது..
இன்று இனிய பென்ஸ், ஆதவன், ஆதி, சிவா என இருக்கிறார்கள்.
அவர்களில் யாராவது வந்து
இந்த இரு முனைகளை எடைபோட்டு
கருத்தாட மாட்டார்களா என ஏங்குகிறேன்..
அப்படி யாரும் வாராமல்போகும் நிலை வந்தால்
நானே மல்லுக்கட்ட வந்தாலும் வருவேன்..
காத்திருக்கலாமா லெனின்?
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
தன்னம்பிக்கையூட்டம் கவிக்கு நன்றி இளசு.
---------
முடியும் என முயற்சி செய்யவேண்டியது நம் கடமை.
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்... என்ற வாக்கின் படி வெற்றியை எதிர்பார்த்தல் நல்லது.
முயற்சியில்லாமல் தூங்கினால் எதையும் சாதிக்க இயலாது.
முயற்சி செய்து.. முடிவு பாதகமாக வந்தால்... கற்றுக் கொண்ட பாடங்களை எண்ணி மகிழ வேண்டியது தான்.
------------
இந்த முயற்சி.. தனி மனிதனுக்குரியது (குழுவுக்கானதல்ல)....
மீண்டும் மீண்டும் படிக்க முடியும் - முடியும் என்ற உற்சாகம்தான் பிறக்கிறதே தவிர வேறெதுவும் தோன்றவில்லை. எப்போதேனும் மனதில் பிறக்கும் வியப்பூட்டக்கூடிய கவிதை தந்த அண்ணனுக்கு நன்றி.
கவிதை சொல்வதும் முடியாது என்பதைக்குறித்தல்ல; முடியும் என்பதையே வலியுறுத்துகிறது என்றே நான் கருதுகிறேன்.
பொதுவாக கருத்தாடுவதை விட கவிதையில் வந்த கருத்தைக் கண்டோமென்றால் - கழுத்தெழும்பு முறிந்த நிலையிலும், இரண்டு வருட காலம் இடைவிடாமல் முயற்சி செய்ததையும், அந்த நிலையில் தன்னால் எதை சாதிக்க முடியுமென பட்டியலிட்டு சாதிக்க விரும்புவதையும்தானே கவிதையும் கூற வருகிறது?
“உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்” - தன்னால் முடியாது என்று நினைத்திருந்தால் இந்த வாக்கியங்கள் மெக்டெர்மாட்டிடம் இருந்து வந்திருக்கவே இயலாது.
கவிதை வாக்கியங்களை எதிர்மறையாக நோக்க வேண்டிய அவசியம் இல்லை - தன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் முயலும் ஒரு அற்புத இளைஞனின் வார்த்தைகளாகத்தான் எனக்குத்தோன்றுகிறது.
சின்ன வயசில் பாடப்புத்தகத்தில் படித்தது. இலக்குப் பார்.. அம்பை விடு என்ற பாடம். இதுவே அதன் சாரம்சம்..
மாணாக்கர்களை சோதிக்க எண்ணினார் வில்வித்தைக் குரு துரோணாச்சாரியார். ஒரு மரம்.. அதன் ஒரு கிளையில் பொம்மைக் கிளி. கிளியின் கழுத்தில் அம்பால் அடிக்கவேண்டும் என்பது இலக்கு. ஒவ்வொருவரும் வில்வளைத்து நாணேற்றி இலக்குப் பார்க்கும்போது துரோணர் கேப்பார், மரம் தெரிகிறதா? கிளை தெரிகிறதா? கிளி தெரிகிறதா? கிளியின் கழுத்து தெரிகிறதா?.. எல்லாரும் எல்லாம் தெரிகிறது என்று சொல்லக் கர்ணன் சொல்வான் "மரம் தெரியவில்லை; கிளை தெரியவில்லை; கிளிதெரிகிறது".. அவனாலும் கிளியின் கழுத்தை கொய்ய முடியவில்லை. அர்ச்சுனன் வந்தான். கிளியின் கழுத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை. இலக்கை அடித்தான்.
அர்ச்சுனால் மட்டுமே முடியும் என்று அறுதியாக நம்பியதால் அவனை இறுதியாக அழைத்தார் துரோணர்.(?)
இந்த அம்பால் இதனைத்தான் செய்ய முடியும். இதனைச் செய்தால் இதனை அடையமுடியும் என்பதை நினைத்து முடித்தான் அர்ச்சுனன்.
இருவரும் முடிவதை மட்டும் நினைந்துள்ளார்கள். இப்போதும் அர்ச்சுனர்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் களங்களும் வீரர்களும் முன்பு போல இல்லை. பல கருத்துப் போர்கள் நெறிபிறழ்ந்து தடம் புரள்வதும் இதனால்தான். இதனை உணர்ந்து முடிவதை மட்டும் நினைப்பவர்கள் எவரும் தோற்பதில்லை.
சேவலை வளர்த்து முட்டைபோடு என்றால் முடிகிற காரியமா?
பேடை வளர்க்க வேண்டும். இதுவே முடிவதை நினை.
Last edited by அமரன்; 26-06-2009 at 04:36 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks