நன்றி இளசு...
என்னை செதுக்கிக் கொள்ள
இன்னுமொறு உளி கொடுத்தமைக்கு..
நன்றி இளசு...
என்னை செதுக்கிக் கொள்ள
இன்னுமொறு உளி கொடுத்தமைக்கு..
Last edited by கீதம்; 20-05-2012 at 11:57 AM. Reason: ஒருங்குறியாக்கம்
அன்பரே,
தங்கள் கவிதை தரும் காட்சி எனக்கு ஒரு திருக்குறளை நினைவு படுத்துகிறது:
"பொறி இன்மை யார்க்கும் பழிஅன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மைப் பழி"
அதாவது, நமது உடல் ஊனமோ, பொருளாதார ஊனமோ, மற்ற ஊனங்களோ நமக்கு ஒரு கீழ்மை தரக் கூடியது அல்ல. ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து, முயற்சியற்று வீழ்ந்து கிடப்பதே கீழ்மை தரக் கூடியது.
டெர்மாட்டின் வெற்றி அவரது 'ஆள்வினை உடைமை".
வெற்றி பெற்றவர்க்கும், அதை வெளிக் கொணர்ந்தவர்க்கும் என் பாராட்டுக்கள்.
Last edited by கீதம்; 20-05-2012 at 11:57 AM. Reason: ஒருங்குறியாக்கம்
<span style='color:#005bff'>தங்களது பதிப்பு எமது தமிழ்கூறும் நல்லுலகத்துள்ளார் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய படிப்பினையை உள்ளடக்கியுள்ளது.
முக்கியமாக <u>" புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம் கண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு......... " </u> என்ற வரிகள்
எதற்கெடுத்தாலும் மனந்தளர்ந்து கண்ணீர்சிந்தும் வழக்கத்திற்கும் பரம்பரையியலிற்கும் ஏதாவது சம்பந்தமுண்டோ என எண்ணுமளவிற்கு அது எம்மத்தியில் விரவியுள்ளது.
இதற்கு எமது கீழைத்தேயப் பாரம்பரியமான பாசம், குடும்ப உறவு என்பன குழந்தை வளர்ப்பில் செலுத்தும் ஆதிக்கம் ஒருவகையில் காரணமாகவுள்ளன.
சாதாரண காய்ச்சல் கண்ட பிள்ளையைச் சுற்றியுள்ள சுற்றத்தார் காட்டும் அக்கறை மற்றும் அதீத கவனிப்பு இதற்குச் சிறு உதாரணம்.
அப்பிள்ளை வளர்ந்த பின்பும் அத்தகைய ஒரு அக்கறையை சுற்றத்திடம் எதிர்பார்க்கிறது.
இது ஒருவரது தனிப்பட்ட மனஉறுதி பிரச்சினைகளைத் தனித்துக் கையாளும் ஆற்றல் என்பவற்றில் எதிரிடையான தாக்கத்தைச் செலுத்துகிறது.
காய்ச்சலுக்கே இத்தனை ஆர்ப்பாட்டமெனில் கால் போனால்...............!
இந்த வகையில் மேனாட்டாரின் குழந்தை வளர்ப்பு முறைகளில் பொருத்தமான நல்ல அம்சங்களை எமது வருங்கால இளஞ்சந்ததியை வளர்த்தெடுக்கும்போது பிரயோகிப்பது பற்றி நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும்.</span>
அன்புடன் திருவருள்
Last edited by Iniyan; 02-06-2005 at 11:12 AM.
(நான் ஏற்கனவே பதித்தது வரவில்லை.அதனால் மீண்டும்)
யானைக்கு தும்பிக்கை!
மனிதனுக்கு நம்பிக்கை!
தன் நம்பிக்கை!
நம்பிக்கை ஊட்டும் வரிகள். எல்லோருக்கும் பொருந்தும்.
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
Last edited by கீதம்; 20-05-2012 at 11:58 AM. Reason: ஒருங்குறியாக்கம்
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
சத்தியமான வரிகள். சக்தி தரும் வரிகள். இன்றே இப்போதே இங்கேயே.......எனத் துடித்தெழ செய்யும் வரிகள்.Originally posted by இளசு@Apr 3 2003, 01:30 AM
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
Last edited by கீதம்; 20-05-2012 at 11:59 AM. Reason: ஒருங்குறியாக்கம்
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
கருத்து தந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும்
ஒருங்குறிக்கு மாற்றிய நண்பர் சுடருக்கும் நன்றிகள்.
அன்பு திருவருள் அவர்களுக்கு--
முடிவதை நினைத்து மனம் தேறி வாருங்கள் நண்பரே...
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நானும் பல தருணங்களில் கடந்த காலங்களில் இப்படி நடந்திருந்தால் என்றெல்லாம் கற்பனை செய்து நாட்களை வீணடித்திருக்கிறேன். இனி முடிய்ம் என நினைப்பது பற்றி மட்டுமே கனவு காணப் போகிறேன். கவிதைக்கு நன்றி அண்ணா!
முகிலன்.. பாரதி...
நன்றிகள் இனிய இளவல்களுக்கு..
ஆதவாவின் விமர்சனம் எழுதுவது திரியில் முகிலனைப்பற்றியும் கண்ஸைப்பற்றியும் சொல்லித் தொடங்கி இருக்கிறேன்..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10991
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
Think What You Can Do-
Not What You Can't Do "
முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை
மிகச்சிறந்த கவிதை.. ஒரு சம்பவத்தோடு. உண்மைச் சம்பவமாய் எனக்குப் படுகிறது அண்ணா.
இறுதியாய் உதிரம் உதிருவரை சொல்லிக் கொண்டிருக்கும் மந்திர வாக்கியம். சாதிப்பது எதுவும் எளிதில் அல்ல.. முன்பொரு சமயம் கவிதை எழுதிவைத்திருந்தேன்.
எளிது இனிது
வலிது கொடிது.
ஆனால் இந்த கவிதை படித்தபின்னர்தான் தெரிகிறது வலியதும் இனியது ஆக்கும் என்று... முடிவதை நினைப்பதால்... ஊனம் உற்றவர்கள் பலர் முடியாத காரியங்களை முடித்துக் காட்டுகிறார்கள். திங் வாட் யு கேன் டு....
ஒரு பெட்டிக்குள் அடங்கியிருந்த எனது மனதை வெட்டவெளியில் திறந்துவிட்ட இளசு அண்ணாவுக்கு எனது நன்றி,,,
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks