முக்கியமான.. செய்திகளை இங்கு தாருங்கள்...
முக்கியமான.. செய்திகளை இங்கு தாருங்கள்...
Last edited by அறிஞர்; 01-06-2005 at 01:32 AM.
சிறிலங்கா இராணுவ புலனாய்வுத் துறையின் கட்டளை அதிகாரி ரி.நிசாம் முத்தலிப் (வயது 39) இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.இரத்மலானைகொத்தலாவலஇராணுவகல்லூரியில்கடமையாற்றிவந்தமுத்தலிப், மெனிங்டவுணிலிருக்கும்தனதுவீட்டிலிருந்துஇன்றுகாலைகொத்தலாவெலஇராணுவகல்லூரிக்குச்சென்றுகொண்டிருந்தபோதுகிருலப்பனையில்வீதிசமிக்ஞைக்குஅருகில்காலை 7.50 மணிக்குஅவர்மீதுதுப்பாக்கிச்சூடுநடத்தப்பட்டது.அவரின்பயணவிபரங்களைஏற்கனவேதுல்லியமாகஅறிந்திருந்தஇருதுப்பாக்கித்தாரிகள்அவரின்வாகனம்அந்தஇடத்திற்குவரும்வரைமோட்டார்சைக்கிளில்காத்திருந்துபின்அவரின்வாகனத்தைத்தொடர்ந்துசென்றுள்ளனர்.
வீதிசமிக்ஞைக்குஅருகேமுத்தலிப்பின்வாகனம்மெதுவாகசென்றபோதுபின்புறமாகவந்ததுப்பாக்கிதாரிகள், வாகனபின்இருக்கையில்அமர்ந்திருந்தமுத்தலிப்பின்மீது 10 முதல் 15 வரைதுப்பாக்கிச்சூடுகள்நடத்தினர்.முத்தலிப்பின்தலைக்கேகுறிவைத்துதுப்பாக்கிச்சூடுநடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில்படுகாயமடைந்தமுத்தலிப்கொழும்புஅப்பல்லோமருத்துவமனையில்அவசரசிகிச்சைப்பிரிவில்அனுமதிக்கப்பட்டார்.அவருக்குவைத்தியர்கள்சத்திரசிகிச்சைசெய்யமுயன்றபோதிலும்முத்தலிப்மரணமடைந்துவிட்டார்.முத்தலிப்சுடப்பட்டஇடத்திற்குமிகஅருகாமையில்தான்பொல்லஹெங்கொடஇராணுவமுகாம்அமைந்துள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது. துப்பாக்கிதாரிகளின்மோட்டார்சைக்கிளில்இலக்கம்குறிப்பிடப்படாமல்இருந்துள்ளது.முத்தலிப்படுகொலைதொடர்பானஆரம்பவிசாரணைகளைகிருலப்பனைபொலிசாரும்கொழும்புகுற்றப்புலனாய்வுத்துறையினரும்மேற்கொண்டுவருகின்றனர்.9 மில்லி மீற்றர் துப்பாக்கியே இவரது கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் 5.5 ரக துப்பாக்கி ரவைகள் சம்பவ இடத்தில் காணப்பட்டதகவும் பொலிசார் தெரிவித்தனர்.மேலதிகவிசாரணைகள்இரகசியப்பொலிஸாரிடம்கையளிக்கப்பட்டிருப்பதாகசிரேஸ்டபொலிஸ்அதிகாரியொருவர்தெரிவித்தார்.திருகோணமலையில்பிறந்தமுத்தலிப்இராணுவத்தின்மட்டக்களப்புமாவட்டபுலனாய்வுத்துறைதலைமைஅதிகாரியாகபணியாற்றிவந்தார். அண்மையிலேயேஇவர்கொழும்பிற்குமாற்றலானார்என்பதுகுறிப்பிடத்தக்கது. இவருக்கு 2 பிள்ளைகள்உள்ளனர். முத்தலிப்பின்மனைவியும்இராணுவத்தில்கடமையாற்றுகிறார்என்பதுகுறிப்பிடத்தக்கது.வன்னிப்பகுதியில்இராணுவப்புலனாய்வுப்பிரிவினரின்ஊடுருவல்கள், வன்னியில்ஆழஊடுருவிதாக்குதல்நடத்திவிடுதலைப்புலிகளின்பிரமுகர்களைபடுகொலைசெய்தமைபோன்றநடவடிக்கைகளின்பின்னணியில்இவரின்செயற்பாடுகுறிப்பிடத்தக்கவகையில்இருந்தது.வவுனியாவில்சமாதானகாலத்தில்விடுதலைப்புலிகளுக்குஆதரவாகசெயற்பட்டமக்கள்மத்தியில்குழப்பத்தைஏற்படுத்தியது, தமிழ்மக்களைகைதுசெய்துசித்திரவதைசெய்ததுபோன்றவற்றிலும்இவரதுபங்களிப்புஇருந்தது.தமிழீழவிடுதலைப்புலிகளால்முன்னெடுக்கப்பட்டசம்பூர்தாக்குதல், மூதூர்மற்றும்கட்டுநாயக்காவிமானத்தாக்குதல்கள்குறித்தபுலனாய்வுத்தகவல்களைப்பெறுவதில்இவர்முக்கியபங்குவகித்ததாகதெரிவிக்கப்படுகிறது.1994 ஆம் ஆண்டு வெள்ளவத்தை ஆயுதக் களஞ்சியத்தைக் கண்டு பிடிக்கவும் முக்கிய பங்காற்றிய இவர் மிலேனியம் சிற்றி இராணுவ நடவடிக்கைப் பிரிவின் உதவித் தளபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.சிறிலங்காஇராணுவத்திற்காகபாரியசேவையாற்றியதாககருதப்படுகிறமுத்தலிப்சுட்டுக்கொல்லப்பட்டதுசிங்களஇராணுவத்தைகடும்அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும்கொழும்புத்தகவல்கள்கூறுகின்றன.முத்தலிப்பின்படுகொலைகுறித்துதங்களுக்குஅறிவிக்கப்படாததால்அதுகுறித்துதாங்கள்கருத்துத்தெரிவிக்கமுடியாதெனபோர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின்பேச்சாளர்தெரிவித்துள்ளார்.(இச் செய்திகள் புதினம் எனும் தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.)
Last edited by அறிஞர்; 01-06-2005 at 01:22 AM.
சாவகச்சேரி அருகே குண்டுவெடிப்பு: ஒருவர் பலி-மூவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 31 மே 2005, 23:32 ஈழம்] [ம.சேரமான்]
சாவகச்சேரி அருகே கச்சாய் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். மூவர் படுகாயமடைந்தனர்.
தென்மராட்சியின் சாவகச்சேரி கச்சாய் கிராமத்திலிருந்து 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இக்கிராமத்தில் இன்று மாலை 6.30க்கு இக்குண்டுவெடிப்பு நடந்தது.
இதில் கிளிநொச்சியைச் சேர்ந்த கந்தசாமி காண்டீபன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் அப்பாத்துரை பாக்கியராஜ் (வயது 21), செல்லத்துரை சையோ (வயது 20), குணசேகரம் ரஞ்சிதா (வயது 7) ஆகியோர் படுகாயடமைந்துள்ளனர்.
காயமடைந்தோர் முதலில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கு பின்னர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்த கந்தசாமி காண்டீபன் சடலம் யாழ். வைத்தியசாலையிடம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது
( இச் செய்தி புதினம் எனும் தளத்திளிருந்து எடுக்கப்பட்டவை)
Last edited by சுவேதா; 01-06-2005 at 01:30 AM.
தாய்லாந்தில் நடந்த மிஸ்யூனிவர்ஸ் போட்டியில் கனடாவின் நத்தாலியா உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்...
Last edited by அறிஞர்; 01-06-2005 at 06:56 AM.
மீண்டும் மன்றத்தில் செய்திகள். மகிழ்ச்சியாக இருக்கிறது.
இது உடனடி செய்தி இடம் என்பதால் மிக மிக முக்கியமான செய்திகளை மட்டுமே இங்கே கொடுக்கலாம்.
தினசரி செய்திகளை தேதி வாரியாக தனித்தனி தலைப்பில் கொடுக்கலாமே.
பரஞ்சோதி
அறிஞரே உங்கள் பதிவைப் படிக்க முடியவில்லை. கொசகொசவென இருக்கிறது.
சுவேதாவின் முதல் செய்தியும் ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் இருக்கிறது. இங்கே செய்திகளை சுருக்கி தாருங்கள். விரிவான செய்திகளை நண்பா பரம்ஸ் சொன்னது போல தேதி வாரியாக தனி தனி தலைப்பாக கொடுங்கள்.
செய்திகளுக்கு நன்றி சுவேதா, அறிரே..
அன்புடன்
மன்மதன்
இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம்
லண்டன், அக். 20-
இங்கிலாந்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
வலுவடைந்த அல்கொய்தா
அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்கா நடத்திவரும் நடவடிக்கைகள் முழுப்பலனைத் தரவில்லை. அல்கொய்தா தலைவர்களும், மற்றவர்களும் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். அவர்கள் இந்த 4 ஆண்டு காலத்தில் மேலும் பலம் அடைந்து உள்ளனர். மேலும் வளர்ச்சி அடைந்து உள்ளனர். அமைப்பு ரீதியாக மேலும் வலுவடைந்து உள்ளனர். அவர்கள் இங்கிலாந்து நாட்டில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே அவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் ரெயில் நிலையங்களிலும், பஸ்களிலும் குண்டு வைத்து வெடிக்கச்செய்தனர். இதில் பலர் உயிர் இழந்தனர். இதைவிட பெரிய அளவில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
அது ஒரு தொடக்கம் தான்
ஏற்கனவே நடந்த தாக்குதலை அவர்கள் ஒரு தொடக்கமாக கருதுகிறார்கள். இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த மிக அதிகமான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். பாகிஸ்தானுக்கும், இங்கிலாந்து நாட்டுக்கும் காலம்காலமாக இருந்து வரும்தொடர்பு காரணமாக இங்கிலாந்தில் எளிதில் தாக்குதல் நடத்த முடியும் என்பது அவர்கள் முடிவு. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள் இரு நாடுகளுக்கும் இடையே சென்று வருகிறார்கள். அவர்களில் தீவிரவாதிகள் எளிதில் ஊடுருவ முடியும் அதோடு அவர்கள் அனைவரையும் கண்காணிப்பது கடினம் என்பதும் அல்கொய்தா தலைமைக்கு வசதியாக அமைந்து விட்டது.
இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியினர்களில் சிலரை, தீவிரவாதிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதற்கு வசதியாக வாடகைக்கு அமர்த்திக்கொள்ளவும் முடியும் என்று அல்கொய்தா தலைமை நினைக்கிறது. இந்த காரணங்களால் இங்கிலாந்து நாட்டை தாக்குதலுக்கான இலக்காக அல்கொய்தா தேர்ந்து எடுத்து உள்ளது.
தட்டுப்பாடு இல்லாமல்
கடந்தஆண்டு ஜூலை மாதத்துக்குபிறகு பலமுறை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டனர். இதை இங்கிலாந்து போலீஸ் உளவுத்துறை முன்கூட்டியே கண்டுபிடித்து முறியடித்தது. இது தொடர்பாக பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருந்தாலும் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டதும், அந்த இடத்துக்கு அந்த வேலைக்கு இன்னொரு தீவிரவாதி நியமிக்கப்படுகிறான். இப்படி பஞ்சம்இல்லாமல் தீவிரவாதிகள் கிடைப்பதும் இங்கிலாந்து தேர்ந்து எடுக்கப்படுவதற்கு ஒரு காரணம் ஆகும்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
வேறு தளங்களிலிருந்து எடுத்து போடும் போது, அதை யுனிகோடுக்கு மாற்றிய பின்பு கொடுங்கள், அறிஞரின் பதிவு எனக்கு தெரிகிறது ஆனால் இராகவன் அண்ணாவுக்கு தெரியவில்லை, காரணம் எழுத்துரு.
மேலும் அந்த செய்தியையே சுருக்கமாக நாலு வரிகளில் கொடுத்தால் மக்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
பரஞ்சோதி
விடுதலைப்புலிகளின் தன்னாட்சி கோரிக்கை மீது அரசியல் தீர்வு காண, இலங்கை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
தலைவர்கள் சந்திப்பு
இலங்கையில், தமிழர்கள் வாழும் பகுதிக்கு தன்னாட்சி வழங்க கோரி, 20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள்.
இலங்கையின் ஆளும் கட்சியான "ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி'', இந்த பிரச்சினை பற்றி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் ஆலோசிக்க முன்வந்தது. இதைத்தொடர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியின் சார்பில், அதிபர் மகிந்தா ராஜபக்சேயும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயும் கொழும்பு நகரில் நேற்று சந்தித்து பேசினார்கள்.
ஒப்பந்தம் கையெழுத்து
இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். 3 பக்க ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கையில் விடுதலைப்புலிகளின் தன்னாட்சி கோரிக்கை மீது சமரச பேச்சு வார்த்தை நடத்துதல், நார்வே துதுக்குழுவுடன் இணைந்து செயல்பட்டு, அரசியல்தீர்வு காண்பது ஆகியவற்றை ஏற்கிறோம். சிறந்த நிர்வாகம், சமூக வளர்ச்சி போன்றவற்றில் ஆளும்கட்சியுடன், எதிர்க்கட்சி இணைந்து செயல்பட முடிவு செய்யப்படுகிறது.
இலங்கை தமிழர் பிரச்சினையில், எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி, இரு கட்சிகளும் செயல்படும். அதே நேரத்தில் தீவிரவாதத்தையும், மனித உரிமை மீறல்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
ராஜபக்சே பேட்டி
இந்த ஒப்பந்தம் பற்றி அதிபர் ராஜபக்சே கூறியதாவது:-
இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க, இந்த ஒப்பந்தம் மிகவும் துணை செய்யும். ஜெனீவாவில் 28, 29-ந்தேதிகளில் நடக்க இருக்கும் பேச்சு வார்த்தைக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
எதிர்க்கட்சிதலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், "தேசிய நலன் கருதி, விடுதலைப்புலிகள் பிரச்சினையில் தீர்வு காண ஒத்துழைக்க சம்மதிக்கிறோம். அதே நேரத்தில் தேச நலனுக்கு எதிரான கருத்துக்களை எதிர்ப்போம்'' என்றார்.
Last edited by mgandhi; 24-10-2006 at 06:47 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
இருவரும் சேர்ந்து.. தமிழருக்கு நலன் செய்தால் மகிழ்ச்சியே... இது ஜெனிவா கூட்டத்திற்காக ஏற்படுத்த நாடகமாக இருந்து விடக்கூடாது.
நல்லது ராகவன்..... மாற்றிவிட்டேன்...
இன்று புதிதாக இருந்ததால்.. முயற்சித்தேன்....... எனக்கு தெரிந்ததால்.... (தினகரன் பாண்ட்) எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்தேன்...
பரம்ஸ் கூறியபடி.... முக்கியமான செய்திகளை சுருக்கமாக இங்கு பதிக்கலாம்...
நண்பர்கள் விரும்பினால்... தினமும் செய்தி தனித்தலைப்புக்களில் தரட்டும்.. எந்த ஆட்சேபணையும் இல்லை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks