வேலூர் : திருப்பத்தூர் அருகே நண்பர்கள் கேலி செய்ததால், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் மகன் சிவலிங்கம்(21); கட்டட மேஸ்திரி. குரிசிலாப்பட்டு கல்லுக்குட்டை புதூரை சேர்ந்த பழனி மகள் திவ்யா(14). அவர், வடுகமுத்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சிவலிங்கமும், திவ்யாவும் காதல் வசப்பட்டு, பெற்றோருக்கு தெரியாமல் பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்தனர்.அவர்களின் காதல் விவகாரம் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்ததையடுத்து, இரு வீட்டாரும் கண்டித்து எச்சரித்துள்ளனர். சிவலிங்கத்தின் நண்பர்களும் சிறுவயது பெண்ணை ஏமாற்றி காதலிப்பதாக கேலி செய்தனர்.மனமுடைந்த காதல் ஜோடி நேற்று இரவு திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் இருவரையும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யாவும், சிவலிங்கமும் பரிதாபமாக இறந்தனர். கந்திலி போலீசார் விசாரிக்கின்றனர்.
.....தினமலர் 06.06.2010
Bookmarks