ஆஹா மக்கா இந்த பகுதியில முக்கியமான/பரபரப்பான உலக செய்திகளை போட சொன்ன.... இப்படி போஸ்டிங்க் போடுறீங்க........
இனி இது மாதிரியான சின்ன சில்லறை விசயங்கள் வேண்டாம்.
ஆஹா மக்கா இந்த பகுதியில முக்கியமான/பரபரப்பான உலக செய்திகளை போட சொன்ன.... இப்படி போஸ்டிங்க் போடுறீங்க........
இனி இது மாதிரியான சின்ன சில்லறை விசயங்கள் வேண்டாம்.
கியூபாவில் நடக்கும் அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கு கொள்வதற்காக ஹவானா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப்பும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தியவுடனான தனது பிரச்சனைகளை சுமூகமான முறையில் தீர்க்க தான் உறுதிபூண்டுள்ளதாகக் கூறும் பாகிஸ்தான் அதே நேரம் காஷ்மீர் பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்பட்டால் தான் இருதரப்பு உறவுகள் சீரடையும் என்று கூறுகிறது.
ஒரு பயனுள்ள விவாதத்தினை எதிர்ப்பார்ப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாராப் தெரிவித்திருந்தனர்.
அணி சேரா நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அணி சேரா நாடுகள் அமைப்பின் மாநாட்டிற்கு உத்வேகம், புத்துயிர் கொடுக்க வேண்டுமானால், உலகத்தில் தீவிரவாதம், நோய் ஒழிப்பு, சக்தித்துறை பாதுகாப்பு, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, போன்ற உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்களுக்கு சர்வதேச ரீதியில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, அணி சேரா நாடுகளின் அமைப்பின் முடிவு மையமாக இருக்க வேண்டும் என்றார். அத்தோடு ஒரு அமைப்பாக, தாங்கள் பயங்கரவாத எண்ணங்களை எப்போதுமே நிராகரித்திருப்பதாகவும் கூறினார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
தமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டது
நாளை முதல் மனு தாக்கள் தெடக்கம்
அக்டேபர் 13\15 வாக்கெடுப்பு நடை பெறும்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
Last edited by mgandhi; 14-10-2006 at 07:10 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
எப்படித்தா அரசியலில் சண்டைக் கோழிகளாக இருந்தாலும் இந்த அரசியல் நாகரீகம் வரவேற்கக் கூடியதே...
நேற்று ஜெயா டிவியில் ஜெ. வைகோ பிரச்சாரத்தைப் பார்த்து மகிழ்ந்தே
செய்திகள்
நியூயார்க் நகர கட்டிடம் மீது சிறு விமானம் மோதி 2 பேர் பலி
நியூயார்க், அக்டோபர் 12, 2006 : 9/11ல் நடந்த சம்பவத்தைப் போன்று புதன் மதியம் நியூயார்க் மான்ஹாட்டன் அப்பர் கிழக்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மீது சிறு விமானம் ஒன்று மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தார்கள்.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
கிரண் தேசாய்க்கு புக்கர் விருது
லண்டன், அக்டோபர் 12, 2006 : செவ்வாய்க்கிழமை கிரண்தேசாய் அருந்ததிராயை விட குறைந்த வயதில் தி இன்ஹரிடன்ஸ் ஆஃப் லாஸ் என்ற தனது இரண்டாவது நாவலுக்காக மதிப்பு மிக்க புக்கர் விருதை (பரிசுத் தொகை ரூ.42 லட்சம்) வென்றுள்ளார்.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
கிரண் தேசாய்க்கு வாழ்த்துகள்..
தாய் எட்டு அடி பாய்ந்தால் சேய் பதினாரடி பாயும் என்பதை நிரூபனமாக்கியவர்!!
தாய் அநிதா தேசாய் மூன்று முறை இவ் விருதுக்காக தேர்வு செய்யப்ப்ட்டவர்... ஆனால் வெற்றி பெறவில்லை....
சேய் கிரண் தேசாய் விருதை வென்றுவிட்டார்....
வாழ்த்துகள் கிரண் தேசாய்!
இனிய சொல்
இரும்புக் கதவையும் திறக்க வல்லது!
கிஷோர்
வங்கதேசத்தை சேர்ந்த யுனூஸ் மற்றும் கிராமீன் வங்கிக்கு சமாதானத்திற்க்கான நோபல் பரிசு
ஓஸ்லோ, அக்டோபர் 14, 2006 : இந்த ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுகடன் வல்லுனர் முகம்மது யூனூஸ் மற்றும் அவரது கிராமீன் வங்கிக்கு அளிக்கப்படுகிறது என்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு பொருளாதார மற்றும் சமூக வாய்ப்பளித்ததன் மூலம் அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் வறுமைப்பிடியிலிருந்து மீண்டு முன்னேற வாய்ப்பளித்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
எல்லா நோபல் பரிசுகளையும் சேர்த்து ஒரு பதிவு கொடுக்கலாம்.
நோபல் பரிசுக்காக பலமுறை பரிந்துரைக்கப்பட்ட தமிழர் ஆர்.கே.நாராயண். ராசிபுரம். கே. நாராயணன் என்பது அவரது முழுப்பெயர். அவருக்கு அந்த விருது கிட்டாதது நோபல் பரிக்குத்தான் இழுக்கு. அதை அப்போதைய பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.
இப்பொழுது இந்தியர்களும் எழுத்துத் துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks