இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல் 2ம் தேதி நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி, கமல் பங்கேற்பு
சென்னை: இலங்கை அரசை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை. அது நீர்த்துப் போன ஒன்று என்று பலர் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அரசைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசைக் கண்டித்து வரும் ஏப்ரல் 2ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
சென்னை தியாகாரயநகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகள் கலந்து கொள்கின்றனர்.
உண்ணாவிரதத்தையொட்டி வரும் 2ம் தேதி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல் 2ம் தேதி நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி, கமல் பங்கேற்பு
சென்னை: இலங்கை அரசை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை. அது நீர்த்துப் போன ஒன்று என்று பலர் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அரசைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசைக் கண்டித்து வரும் ஏப்ரல் 2ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
சென்னை தியாகாரயநகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகள் கலந்து கொள்கின்றனர்.
உண்ணாவிரதத்தையொட்டி வரும் 2ம் தேதி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அக்டோபரில் பயணிகள் ரயில் கட்டணம் மீண்டும் உயர்வு?
டெல்லி: பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அக்டோபர் மாதம் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் ரயில்வே வாரியத் தலைவர் வினய் மிட்டல் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
எரிபொருள் மற்றும் மின் கட்டணத்திற்கு ஏற்ப சரக்கு கட்டணங்களை மாற்றும்(எஃப்.ஏ.சி.) புதிய முறைப்படி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சரக்கு கட்டணம் 5.7 சதவீதம் உயர்கிறது. இந்த விலை உயர்வு மூலம் எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏற்படும் ரூ.800 கோடி இழப்பு சரிகட்டப்படும். இந்த புதிய முறைப்படி 6 மாதத்திற்கு ஒரு முறை மறுஆய்வு செய்யப்பட்டு கட்டணம் மாற்றப்படும்.
எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப பயணிகள் கட்டணத்தை மாற்றும் நடைமுறை இன்னும் அமல்படுத்தப்படவில்லை. மேலும் பயணிகள் கட்டணம் கடந்த ஜனவரி மாதத்தில் தான் உயர்த்தப்பட்டதால் தற்போதைக்கு கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. ஆனால் வரும் அக்டோபர் மாதம் எரிபொருள் விலையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்போது பயணிகள் கட்டணத்தையும் எரிபொருள் விலைக்கேற்ப உயர்த்துவது குறித்து தீர்மானிக்கப்படும்.
எரிபொருள் விலைக்கேற்ப பயணிகள் கட்டணத்தை உயர்த்தும் நடைமுறை அமலுக்கு வந்தால் 6 மாதத்திற்கு ஒரு முறை பயணிகள் கட்டணம் மாற்றப்படும். இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டால் அக்டோபர் மாதத்தில் பயணிகள் கட்டணம் 2 முதல் 3 சதவீதம் உயரும். ரயில்வே மொத்த செலவில் டீசல் மற்றும் மின் கட்டண செலவு மட்டும் 16 முதல் 17 சதவீதம் உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் டீசல் விலை 39 சதவீதமும், மின் கட்டணம் 8 சதவீதமும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பைக், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு மார்ச் 26 முதல் சாலை வரி வசூல்
பொது போக்குவரத்துக்குப் பயன்படுத்தாத வாகனங்களான கார், ஜீப், போர்வெல் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு மார்ச் 26 முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை, சாலை வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை:
போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு வரும் ஆண்டுக்கான சாலை வரி, மார்ச் 26 முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வசூலிக்கப்படும். மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் சாலை வரி செலுத்தலாம்.
15 ஆண்டுகள் முடிந்த வாகனங்கள் பதிவுச் சான்று புதுப்பித்தல் விண்ணப்பத்துடன் சாலை வரியைச் செலுத்த வேண்டும். 15 ஆண்டுகள் முடிந்த இரு சக்கர வாகனங்கள் 500 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்கள் ஆயிரம் ரூபாயும் பசுமை வரியாகச் செலுத்த வேண்டும். வாகன வரி செலுத்துவோர், வாகனத்தின் பதிவுச் சான்று, நடப்பில் உள்ள காப்புச் சான்று, புகைச்சான்று ஆகியவற்றுடன் வரவேண்டும்.
மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சாலை வரியைச் செலுத்தாத வாகனங்கள் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால், வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்திற்கு 20 ஆம்புலன்சுகள் நன்கொடை
காத்மாண்டு: இந்தாவின் 68-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நேபாள நாட்டிற்கு 20 ஆம்புலன் வண்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற விழாவில் இந்திய தூதர் ரஞ்சித் ரே பல்வேறு அமைப்பினரிடம் சாவிகளை வழங்கினார். தொடர்ந்து ஜனாதிபதி உரையை அவர் வாசித்தார். மேலும் 75 நூலகங்கள் மற்றும் பல்கலைகழகங்களுக்கு தேவையான நூல்களும் வழங்கப்பட்டது. நேபாளத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளுக்காக கடந்த 1996-ம் ஆண்முதல் இது வரையில் சுமார் 442 ஆம்புலன்ஸ் வண்டிகளும், 86 பஸ்களும் இந்தியா வழங்கியுள்ளது குறி்ப்பிடத்தக்கது.
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
புதுடில்லி:தலைநகர் டில்லியில், நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், இதுவரை இல்லாத வகையில், வி.ஐ.பி.,க்களுக்கு இணையாக, சாதாரண மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால், ஏராளமான மக்கள், விழாவில் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
டில்லியில், நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பல புதுமைகள் அரங்கேறின. வழக்கமாக, சுதந்திர தின விழா நடக்கும்போது, பார்வையாளர் வரிசையில் வி.ஐ.பி.,க்களுக்கு தான், முக்கியத்துவம் அளிக்கப்படும்.வி.ஐ.பி.,க்களுக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள இருக்கைகள் மட்டுமே சாதாரண மக்களுக்கு ஒதுக்கப்படும். இந்த நடைமுறை, நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் தகர்க்கப்பட்டது.சுதந்திர தின விழா ஏற்பாடுகள் துவங்கியதுமே, 'பார்வையாளர் வரிசையில், பொதுமக்களுக்கென, 10 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்க வேண்டும்' என, பிரதமர் மோடி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, பொதுமக்களுக்கென, 10 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இந்த தகவல், ஏற்கனவே மீடியாக்களில் வெளியானதால், நேற்று அதிகாலையில் இருந்தே, டில்லியில் இருந்து மட்டுமல்லாமல், அதன் புறநகர் பகுதி களில் இருந்தும் ஏராளமான மக்கள், செங்கோட்டையில் குவியத் துவங்கினர்.சுதந்திர தின விழாவுக்கு வரும் பொதுமக்களிடம், பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படாததால், கூட்டம் அலை மோதியது. பொதுமக்களுக்கென ஒதுக்கப்பட்ட, 10 ஆயிரம் இருக்கைகளும், காலை, 7:00 மணிக்கே நிரம்பி விட்டன. அதிலும், பள்ளி குழந்தைகள் அதிகமாக அமர்ந்துஇருந்தனர்.இருக்கைகள் நிரம்பி வழிந்ததால், ஏராளமானோர் நின்றபடியே, விழாவை பார்த்து ரசித்தனர். காலை, 7:27க்கு, பிரதமர் மோடி, விழா நடக்கும் இடத்துக்கு வந்தார்.
அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்களும், குழந்தைகளும் கைகளைத் தட்டி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குழந்தைகள், தாங்கள் அணிந்திருந்த தொப்பியை எடுத்து, கையில் அசைத்து, மோடியை வரவேற்றனர். பின், 7:30க்கு, பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றியபோது கரவொலி, காதை பிளந்தது. மோடியின் ஒவ்வொரு அறிவிப்புக்கும், அங்கு கூடியிருந்தவர்கள் கைகளை தட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ஏழைகளுக்கு வங்கி கணக்கு துவங்குவதாக அவர் அறிவித்தபோது, கைதட்டல் ஓசை அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தது.விழா முடிந்து, பிரதமர் மோடி, காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த பள்ளி குழந்தைகள், அவரை நோக்கி கையை அசைத்தனர். இதையடுத்து, குழந்தைகளை நெருங்கி, கைகளை குலுக்கி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வழக்கமாக, சுதந்திர தின விழாக்களில் பிரதமர்கள் உரையாற்றும் போது, அவருக்காக, துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கூண்டு அமைக்கப்படும். அதேபோல், மழை, வெயில் ஆகியவற்றால், பிரதமர் பாதிக்கப்படாமல் இருக்க, பாதுகாவலர்கள் குடைகள் பிடிப்பர்.
ஆனால், நேற்றைய விழாவில், இந்த இரண்டு நடைமுறைகளும் தவிர்க்கப்பட்டன. சுதந்திர தின விழாவில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை தான், மிக நீண்ட உரையாக இருந்தது. இதற்கு அடுத்த, மிக நீண்ட உரையாக, நேற்றைய மோடியின் உரை அமைந்தது.
யதார்த்த உரை:
*நேற்றைய விழாவில், 45 ஆயிரம் பொதுமக்கள் பங்கேற்றனர்.
*பார்வையாளர் வரிசையில், 26 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
*இவற்றில், தலா, 10 ஆயிரம் இருக்கைகள், வி.ஐ.பி.,க்கள், பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டன.
*மீதமுள்ள, 6,000 இருக்கைகள், பள்ளி குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டன.
*சுதந்திர தின விழாவுக்கு வந்திருந்த மோடி, குஜராத், ராஜஸ்தான் போன்ற வட மாநில மக்கள் அணியும் தலைப்பாகையை அணிந்திருந்தார்.
*விழா நடக்கும் இடத்துக்கு வருவதற்கு முன், டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று, பிரதமர், அஞ்சலிசெலுத்தினார்.
*பிரதமர் மோடி, தன் சுதந்திர தின உரையை எழுதி வைத்து படிக்கவில்லை. யதார்த்தமாக பேசிய தால், அவரின் உரை, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.
*அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களும், பிரதமரின் உரைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
*முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்ட பலர், சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.
பலத்த பாதுகாப்பு:
சுதந்திர தின விழாவையொட்டி, டில்லியில் நேற்று, ஆயிரக்கணக்கான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிலிருந்து, செங்கோட்டை வரை, 500 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதேபோல், சுதந்திர தின விழா நடந்த செங்கோட்டையில், 200க்கும் அதிகமான கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. செங்கோட்டை அருகே, இரண்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதில், அதிநவீன தொழில்நுட்ப வசதியுடைய கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டன. டில்லி மாநில போலீசாருடன், மத்திய துணை ராணுவப் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.விழா நடக்கும் பகுதியில், விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்துமீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக, உயரமான இடங்களில் பாதுகாப்பு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.டில்லியின் நுழைவாயில்களில், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அதிவிரைவு படையினர், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுஇருந்தனர். ஹெலிகாப்டர் மூலமாகவும், டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.
நன்றி:தினமலர்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
சோலாப்பூர்: 24 மணி நேரமும், தடையற்ற மின்சாரம் தர வேண்டும் என்பது தமது அரசின் இலக்காக உள்ளது என கூறியுள்ள பிரதமர் மோடி, உள்கட்டமைப்பு, மின் தட வழிகள், மின்சாரம் மற்றும்தண்ணீர் தொடர்பான தமது அரசின் கொள்கைகள் பற்றி எடுத்து கூறினார்.
சோலாப்பூரில் நடந்த மின் திட்டங்கள் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி,
மின்சாரத்தை சேமிக்க வேண்டும்:
வாரத்தின் 5 நாட்கள், 365 நாட்கள் 24 மணி நேரம் கிராமங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்பது தமது அரசின் இலக்கு. மின்சாரம் உற்பத்தி செய்வதும், மக்களுக்கு விநியோகம் செய்வது ஒரு புறம் இருப்பினும், அதனை சேமித்து வைப்பது என்பது மிகவும் முக்கியமானது. ராணுவப்படையில் சேர்வதும், எம்.பி., எம்.எல்.ஏ.,வாக தேர்வு பெற்று மக்களுக்கு சேவை செய்வது மட்டும் தேசத்திற்கு ஆற்றும் சேவையல்ல. மின்சாரத்தை சேமிப்பதும் நாட்டிற்கு செய்யும் சேவை.
மக்களுக்கு பயன்:
இளைஞர்களும், மாணவர்களும் தமது வீட்டின் மின் கட்டணம் குறித்து ஆய்வு செய்து, அதனை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி தமது குடும்பத்தினருடன் ஆலோசனை செய்ய வேண்டும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டு கொள்கிறேன். இது நம் நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை நாம் தேசத்திற்கு ஆற்றும் முக்கிய கடமையாக கருத வேண்டும். மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பது செலவு மிக்கது. ஆனால் அதனை சேமிப்பது என்பது மிகவும் எளிது. இதனை நாம் செய்தால், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
கடமை தவற மாட்டேன்:
நிலக்கரி மற்றும் கேஸ் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியில் பிரச்னை உள்ளது என்ற மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவானின் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நானும் குஜராத் முதல்வராக இருந்த போது, இதுபோன்ற பிரச்னையை சந்தித்துள்ளேன். அப்போது, இந்த பிரச்னைக்கு உதவ யாரும் முன்வரவில்லை. தற்போது பொறுப்பு எங்களிடம் வந்துள்ளது. எனது கடமையிலிருந்து தவறி ஓட மாட்டேன். தொழில்நுட்பம் மற்றும் நிலக்கரி இருப்பை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்பிரச்னையை சரி செய்யப்பட வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் மின்சாரம் கிடைக்க அனைவரும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நர்மதா அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதன் மூலம், மகாராஷ்டிரா மாநிலம், ரூ.400 கோடி மதிப்பிலான மின்சாரத்தை பெறும்.
சாலைகள் இணைப்பு:
சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சிக்கு தமது அரசு முக்கியத்துவம் கொடுக்கும். இது தொடர்பாக முன்னாள்பிரதமர் வாஜபாய் அரம்பித்து வைத்த பிரதான் மந்திரி கிராம் சாதக் யோஜ்னா திட்டம் தம்மை கவர்ந்துள்ளது. சாலைகள் இணைப்பை அனைத்து பகுதிகளையும் இணைக்க வேண்டும். இதனால், வேலைவாய்ப்பு பெருகும். இதன் மூலம் ரயில் நெட்வொர்க்கையும் மேம்படுத்த முடியும். சிறந்த சாலைகள் காரணமாக இந்தியாவின் சுற்றுலாத்துறை மேம்படையும். இன்று சிறந்த தேசியநெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் வழிகளை நாடுஎதிர்பார்க்கிறது. ஒவ்வொரு கிராமமும் இணைக்கப்பட வேண்டும். இதுவே இன்று முக்கியமாகஉள்ளது. தென் கொரியா போன்ற நாடுகள் உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு செய்துள்ளதால், அதிக வளர்ச்சியை கண்டுள்ளன.நாம் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், மக்கள் நமது நாட்டை மிளிர செய்வார்கள்.
ஜவுளித்துறைக்கு ஊக்கம்:
நாட்டில் ஏழைகள் உள்ளிட்ட அதிகம் பேருக்கு ஜவுளித்துறை அதிக வேலைவாய்ப்பை கொடுத்துள்ளது. நாடு முழுவதும் ஜவுளித்துறைக்கு அதிக ஊக்கம் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசு ஆர்வமாக உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதன் மூலம், அவர்கள் நமது நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நன்றி:தினமலர்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் நிதியைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
குழந்தைகள், பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், பணியாளர்கள் என, பலரது மேம்பாட்டிற்கு என, தனித்தனியாக தொண்டு நிறுவனங்கள், நல அமைப்புகள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன.இவை, பெரும்பாலும் இங்குள்ள நிலைமையை எடுத்துக் கூறி, வெளிநாட்டில் இருந்து நிதியைப் பெற்று செலவழித்து வருகின்றன.இந்த வகையில், 2012ல், அதிகபட்சமாக, 2,285 கோடி ரூபாய் பெற்று, டில்லி முதலிடத்தையும்; 1,704 கோடி ரூபாய் பெற்று, தமிழகம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.மாவட்ட அளவில், 889 கோடி ரூபாய் நிதியைப் பெற்று, சென்னை மாவட்ட என்.ஜி.ஓ.,க்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. அடுத்த இடத்தை, மும்பை 825.40 கோடி ரூபாய் பிடித்துள்ளது.கடந்த, 2002 03ல், சென்னையைச் சேர்ந்த பிரபல தன்னார்வ தொண்டு நிறுவனம், அதிகபட்சமாக, 393 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பதிவு ரத்து:
இதுதவிர, கடந்த, 2012ல் அதிகளவு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவுகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.தமிழகத்தில் மட்டும், 760 நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக, ஆந்திராவில் 690; கேரளாவில் 439 நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நன்றி:தினமலர்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
சென்னை : தமிழகம் முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழையும் மிதமான மழை பெய்தது. . விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள், கும்பகோணம், பட்டுக்கோட்டை ,அவினாசி , கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் , புதுக்கோட்டை, கீரனூர், ஆவுடையார்கோவில், அறந்தாங்கி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்துள்ளது.
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
பனாஜி: கடற்கரையில் பிகினி <உடையில் வருபவர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என கோவா எம்.எல்.ஏ., மாவோ மம்லேதர் கூறியிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தனதுகருத்து குறித்துவிளக்கமளித்துள்ள மம்லேதர், கோவாவில் சுற்றுலாவை மேம்படுத்த பிகினி உடையை ஊக்கப்படுத்த வேண்டும். பொது இடங்களில் பிகினி உடைக்கு தடை விதிக்க வேண்டும். பெண்களை விலங்குகளுடன்நான் ஒப்பிட்டுபேசவில்லை. எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks