விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என்று தெரிகிறது. இதானால் தமிழ் நாட்டின் மின்தடை எந்த அளவு குறையும் என்று தெரியவில்லை.
விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என்று தெரிகிறது. இதானால் தமிழ் நாட்டின் மின்தடை எந்த அளவு குறையும் என்று தெரியவில்லை.
நடிகர் ராஜேஷ் கன்னா மறைவு..
பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணா உடலநலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.
உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் இன்று (18/07/2012) பிற்பகலில் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த ராஜேஷ் கண்ணா பிரபல நடிகை டிம்பிள் கபாடியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு டிம்பிள் கண்ணா, ரிங்கி கண்ணா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களும் நடிகைகள் ஆவர். பிரபல இந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், ராஜேஷ் கண்ணாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ராஜேஷ் கண்ணாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
29 டிசம்பர் 1942ஆம் ஆண்டு பிறந்த ஜதின் கண்ணா என்ற ராஜேஷ் கண்ணா, 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். இதுவரை 180 படங்களில் நடித்துள்ளார். இவற்றில் 22 திரைப்படங்களில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும் சில படங்களை தயாரித்தும், சில பாடல்கள் பாடியும் உள்ளார்.
மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ள இவரது பெயர் பதினான்கு முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிலிம்பேர் வாழ்நாள் விருது இவருக்கு 2005ல் வழக்கப்பட்டது.
மிகக் குறுகிய காலத்தில் வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து புகழேணியின் உச்சக்கட்டத்திற்கு சென்ற இவரே இந்தித் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் என அறியப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ஆராதனா, அமர்பிரேம், ஆனந்த், கத்தி பதங், ராஸ், பகாரோங் கே சப்னே, இத்தெஃபாக், சச்சா ஜூதா, ராஜா ராணி, பவார்ச்சி ஆகியன அமைந்தன.
ராஜேஷ் கண்ணா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1992ல் நடந்த இடைத்தேர்தலில் புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996ல் நடந்த பொதுத்தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு தக்க வைத்துக்கொண்டார்.
நன்றி : நக்கீரன்.இன்
அமைச்சர் பதவியில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்: ஜெ. அதிரடி
அதிமுக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று (18.07.2012) மாலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த சில நிமிடங்களிலேயே, வருவாய்த் துறை அமைச்சர் பதவியில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது.
ஜெயலலிதா முதல் ஆளாக சென்று வாக்களித்தார்
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலில் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஓட்டுப்போட்டு வகிறார்கள். தமிழக சட்டசபை உறுப் பினர்கள் சென்னை கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் முதல்வர் ஜெயலலிதா முதல் ஆளாக வாக்களித்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். நாடாளுமன்றத்தில் உள்ள வாக்குசாவடியில் எம்.பி. க்கள் வாக்களித்து வருகின்றனர்.
கைவிலங்குடன் கைதி தப்பி ஓட்டம்
நான்குநேரியை சேர்ந்தவர் காளிதாஸ் என்ற காளியப்பன் (வயது 28). இவர் மீது வள்ளியூர் மற்றும் ஈரோடு பகுதியில் திருட்டு வழக்கு உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் காளியப்பனை கைது செய்து கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்திருந்தனர்.
வள்ளியூரில் நடந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 16-ந்தேதி கணேஷ் குமார், தர்மலிங்கம் உள்பட 3 போலீஸ்காரர்கள் காளியப்பனை வள்ளியூர் அழைத்து சென்றனர்.
அங்கு வழக்கு விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை இரவு நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ரெயிலில் காளியப்பனை போலீசார் அழைத்து வந்தனர். காளியப்பன் கையில் விலங்கு மாட்டப்பட்டிருந்தது. புதன்கிழமை அதிகாலை ரெயில் திண்டுக்கல் வந்தது. அப்போது கைவிலங்குடன் கைதி தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து திண்டுக்கல் ரெயில் நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கைவிலங்குடன் தப்பி ஓடிய காளியப்பனை தேடி வருகின்றனர்.
நித்திக்கு 30-ம் தேதி மருத்துவ பரிசோதனை
கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கற்பழிப்பு வழக்கு தொடர்பாக நித்யானந்தா வரும் 30ம் தேதியன்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று ராமநகரம் ஜூடிஷியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கான நோட்டீஸ் நித்யானந்தாவுக்கு இந்த வாரம் அனுப்பப்பட்டது என்று சி.ஐ.டி. போலீசார் கூறினார்கள்.
பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவப் பரிசோதனைக் குழு நித்யானந்தாவைப் பரிசோதிக்கும். முடிவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறாக இருக்கும் நிலையில், அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று சி.ஐ.டி. தரப்பில் தகவல் கூறப்படுகிறது.
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இலங்கை நாளை மோதல்
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹம்பன் டோடா மைதானத்தில் நாளை (21-ந்தேதி) நடக்கிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய அணி கடைசியாக மார்ச் மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் விளையாடினர். அதன் பிறகு தற்போது தான் இந்திய அணி ஒருநாள் போட்டியில் ஆடுகிறது.
ஆசிய கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதனால் இலங்கை தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்று இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
நட்சத்திர வீரர் தெண்டுல்கர் இந்த தொடரில் விளையாடததால் ஷேவாக்குடன் தொடக்க வீரராக யார் விளையாடுவர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நாளைய ஆட்டம் பகல்- இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில் தாம் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஜெயந்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
நித்யானந்தா வழக்கில் அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளை நிதி வசூல் செய்து வந்தது. இந்நிலையில் பாபட்லால் சாவ்லா என்பவர் நித்யானந்தாவுக்கு எதிராக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளைக்கு ரூ.8 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாகவும், ஆனால் உறுதி அளித்தபடி பல்கலைக்கழகம் தொடங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இவ்வழக்கு விசாரணையின்போது அறக்கட்டளையின் தலைவர் நித்யானந்தாதான் என்பதற்கான கையெழுத்து ஆவணமும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம் நித்யானந்தா அறக்கட்டளை குற்றம் புரிந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.
மேலும் மனுதாரர் பாபட்லால் சாவ்லாவிடம் பெற்ற ரூ.8 கோடி பணத்தையும் நித்யானந்தா அறக்கட்டளை திருப்பி வழங்கவேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. தொழிலதிபர் பாபட்லாலைத் தொடர்ந்து மேலும் பலர் நிதியை திருப்பி கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிதாக வழங்கப்பட்ட கோர்ட் தீர்ப்பை அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன் வரவேற்றுள்ளார்.
மேலும் நித்திக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு நகல்களை இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் : முலாயம்சிங்கின் வாக்கை ரத்து செய்யுமாறு
தேர்தல் ஆணையம் உத்தரவு
இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்த தேர்தலின் போது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் நாடாளுமன்றத்தில் தனது வாக்கை பதிவு செய்ய வந்தார். அப்போது, தான் தவறுதலாக வாக்களித்து விட்டதாக கூறி புதிய வாக்குச்சீட்டு தருமாறு கோரினார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டாவது முறையாக வாக்களித்தபோது,
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்ததாக அறிவித்தார். மேலும் பா.ஜனதா கட்சியின் வேட்பாளரான பி.ஏ.சங்மாவுக்கு வாக்களித்ததால் தவறுதலாக வாக்களித்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த தகவல் வெளிவந்ததை தொடர்ந்து, சங்மாவின் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, முலாயம்சிங்கின் வாக்குப்பதிவை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது.
அமெரி்க்காவில் பேட்மேன் படம் ஓடிய தியேட்டரில் முகமூடி நபர் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி!
அமெரிக்காவின் டென்வர் புறநகர் பகுதியான அரோராவில் உள்ள மாலில் அமைந்துள்ள திரையரங்கில் நேற்று நள்ளிரவில் புதிய பேட்மேன் படமான தி டார்க் நைட் ரைஸஸ் திரையிடப்பட்டது. அப்போது புகையில் இருந்து தப்பிக்கும் முகமூடி அணிந்த மர்ம நபர் தியேட்டருக்குள் புகுந்து யாரும் எதிர்பாராவிதமாக தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார். இதில் அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். அதன் பிறகு அந்த நபர் கண்ணீர்ப்புகை குண்டை வீசிவிட்டுச் சென்றுவிட்டார். அவர் 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கத்தியைக் கொண்டு வந்துள்ளார்.
முதலில் அவர் சுடத் தொடங்கியதும் ஏதோ பட விளம்பரத்திற்காக செய்கிறார்கள் என்று பார்வையாளர்கள் நினைத்துள்ளனர். அதன் பிறகே அவர்களுக்கு விபரீதம் புரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அமெரி்க்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய படமான தி டார்க் நைட் ரைஸஸ் குறித்து பிரபல திரை விமர்சன இணையதளமான ராட்டன் டொமேட்டோஸ் விமர்சனம் செய்திருந்தது. அந்த கட்டுரையின் கமென்ட்ஸ் பாக்ஸ் நிரம்பிவிட்டது. அதில் சாதாரண கமென்ட்ஸ் வரவில்லை. வாசகர்கள் ஒருவருக்கு ஒருவர் கொலை மிரட்டல், கற்பழிப்பு மிரட்டல் போன்று பல்வேறு மிரட்டல் கமென்ட்ஸ்களை எழுதி மிரட்டியதால் கமென்ட்ஸ் பாக்ஸையே தூக்கிவிட்டனர். அந்த அளவுக்கு இந்தப் படம் குறித்து உலகெங்கும் மிகச் சூடான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது.
சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கு: போலீசுக்க நீதிபதி கண்டனம்
சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கின் அரசு தரப்பு சாட்சியை 2 ஆண்டுகளாக சாட்சியம் அளிக்க ஆஜர்படுத்தாததற்காக பாண்டிபஜார் போலீசுக்கு சென்னை செசன்சு கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரன். இவர், தன் உதவியாளர் கோபு ஸ்ரீதரை துப்பாக்கியைக் காட்டி கொலை செய்ய முயன்றதாக பாண்டிபஜார் போலீசார் 2001-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சுதாகரன், தோட்டம் பாஸ்கர், ஆர்.பி.ஐ.பாஸ்கரன், சுதாகரனின் தந்தை விவேகானந்தன், சுரேஷ், மொய்னுதீன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு சென்னை 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. போலீசார் தாக்கல் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றம் சுமத்தப்பட்ட சுதாகரன் உள்ளிட்டோரிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதன்பின்னர் இந்த வழக்கில் அரசு தரப்பு முதல் சாட்சியான புகார்தாரர் கோபு ஸ்ரீதர் சாட்சியம் அளிக்க வேண்டும். அவருக்கு கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் உள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி தட்சணாமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதாகரன், தோட்டம் பாஸ்கர், மொய்னுதீன் ஆகியோர் மட்டும் ஆஜரானார்கள்.
அப்போதும் அரசு தரப்பு சாட்சி கோபுஸ்ரீதர் சாட்சியம் அளிக்க ஆஜராகவில்லை. இதையடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.அன்புக்கரசு, "அரசு சாட்சியை ஆஜர்ப்படுத்தாமல் போலீசார் வழக்கை இழுத்தடிப்பதாக கூறினார்.
இதையடுத்து பாண்டி பஜார் போலீசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும், அன்று முதல் சாட்சியான கோபு ஸ்ரீதரை ஆஜர்படுத்த வேண்டும்` என்றும் போலீசுக்கு உத்தரவிட்டார்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks