Page 132 of 232 FirstFirst ... 32 82 122 128 129 130 131 132 133 134 135 136 142 182 ... LastLast
Results 1,573 to 1,584 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #1573
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    படிக்கும் காலத்தில் கல்விக் கடனுக்கு வட்டி கிடையாது: ப.சிதம்பரம் அறிவிப்பு....

    காரைக்குடி: 2009, 2010-ம் ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு படிக்கின்ற காலத்தில் வட்டி இல்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    காரைக்குடி மண்டலம் ஐ.ஓ.பி. சார்பில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கி நிர்வாகிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் குழு சிறப்பு முகாம் நடந்தது. காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட அமைச்சர் ப.சிதம்பரம் 643 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 10 கோடியே 41 லட்சத்து, 36 ஆயிரம் கல்விக் கடன் வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது,

    மாணவர்கள் தங்களின் உயர் கல்வியைத் தொடர்வதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

    கல்விக் கடன் வழங்கியதில் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் இருப்பில் உள்ள கல்விக் கடன்களைக் கணக்கில் கொண்டால் 19 லட்சத்து 41 ஆயிரத்து 882 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்து 63 ஆயிரத்து 429 பேருக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கல்விக் கடன் பெறும் மாணவர்களில் நான்கில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

    எனது அரசியல் வாழ்க்கையில் பெருமகிழ்ச்சியுடன் தீட்டப்பட்ட திட்டம் கல்விக் கடன் திட்டம் ஆகும். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் கல்விக் கடனை நிர்வகிக்கும் கனரா வங்கியை அணுகலாம்.

    கல்விக் கடனுக்கான வட்டி விவரம் பற்றி நிதித் துறையினர் எனக்கு தகவல் அனுப்பியுள்ளனர். கடந்த 2009, 2010-ம் ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு படிக்கின்ற காலத்தில் வட்டியே கிடையாது.
    .....தட்ஸ்தமிழ் 30.08.2010

  2. #1574
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    900 ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவமனை - காஞ்சீபுரம் அருகே கண்டுபிடிப்பு!....

    900 ஆண்டுகளுக்கு முன் 15 படுக்கைகளுடன் மருத்துவமனை இருந்தது பற்றிய கல்வெட்டு காஞ்சீபுரம் அருகே கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சீபுரம் அருகே உள்ள திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆலய சுவரில் இருந்து பழைய கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வெட்டில் 900 ஆண்டுகளுக்கு முன் அந்த கோவிலுடன் இணைந்து ஒரு மருத்துவமனை செயல்பட்டது பற்றி அரிய தகவல் கிடைத்து உள்ளது.

    இதுபற்றி தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறியதாவது:-

    பாலாறு, வேகவதி ஆறு மற்றும் செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் கரையோரம் திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கல்வெட்டுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் இந்த ஆலயத்தில் வீர சோழன் என்று பெயரிடப்பட்ட 15 படுக்கை கொண்ட மருத்துவமனை இருந்தது தெரியவந்துள்ளது. இதில் நிறைய ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். கோதண்டராமன், அஸ்வத்தமன், பகத்தன் என்ற அறுவை சிகிச்சை நிபுணர்களும், பல செவிலியர்களும் ஊழியர்களும் இங்கு பணியில் ஈடுபட்டு வந்து இருப்பது தெரியவருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் எலும்புருக்கி நோய், சிறுநீரக கோளாறு, மூலவியாதி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து உள்ளது.

    மேலும் இங்கு 20 வகையான ஆயூர்வேத மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மருந்து கிட்டங்கிகளும் அங்கு செயல்பட்டு இருந்ததாக கல்வெட்டில் உள்ள தகவல் தெரிவிக்கிறது. இந்த மருத்துவமனையில் டி.பி. நோய்க்கு பஞ்சக தைலம் மூலம் நோய் குணப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவருகிறது.

    இந்த ஆலயத்தின் கிழக்கு பிரகார முதல் தூணில் வீரராஜேந்திர சோழர் காலத்தின் முக்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

    11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தக் கல்வெட்டு மூலம், அங்கு வேத கல்லூரி செயல்பட்டதும், இந்த கல்லூரியில் ரிக்வேதம், இலக்கணம் உள்ளிட்ட 8 பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டதும், இந்த கல்லூரியில் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் இருந்துள்ளதும் தெரியவருகிறது. மேலும் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதியும் இங்கு அமைந்து இருந்த விவரம் கல்வெட்டில் தெரியவருகிறது.

    இவ்வாறு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறியுள்ளனர்.

    ....இந்நேரம்.காம்...30.08.2010

  3. #1575
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    மதம் குறித்து சர்ச்சை: கவலையில்லை என்கிறார் ஒபாமா.....

    நியு ஆர்லியன்ஸ், ஆக.30: தான் ஒரு முஸ்லீம் என ஐந்தில் ஒரு அமெரிக்கர் நம்புவதாக சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு குறித்து கவலைப்பட போவதில்லை என அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

    ஒபாமா முஸ்லீம் என 18 சதவீத மக்கள் நம்புவதாக பியு ஆராய்ச்சி மையம் இம்மாதத் தொடக்கத்தில் கருத்துக் கணிப்பு வெளியிட்டிருந்தது. மார்ச் 2009-ல் 11 சதவீதத்தினர்தான் நம்பியதாகவும், அது இப்போது அதிகரித்துள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒபாமா கிறிஸ்துவர் என கடந்த ஆண்டு 48 சதவீதத்தினர் நம்பியதாகவும், அது இப்போது 34 சதவீதமாகக் குறைந்துவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

    தனது மதம் தொடர்பான குழப்பத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒபாமா, இதுபோன்ற வதந்திகளுக்காக தான் பெரிதும் கவலைப்படப் போவதில்லை என்றார்.
    ....தினமணி 30.08.2010

  4. #1576
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    கங்கையை மாசுபடுத்திய 65 தொழிற்சாலைகள் மூடப்பட்டன....

    கான்பூர், ஆக.30: கங்கையை மாசுபடுத்திய 65 தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாக உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    ஆகஸ்ட் 28-ம் தேதி கான்பூர் ஐஐடி ஏற்பாடு செய்திருந்த கங்கை ஆற்று நதிநீர்ப் படுகை நிர்வாகப் பயிலரங்கில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கங்கையை சுத்தப்படுத்துவதில் உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலின்மை குறித்து விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில் கங்கை நதியை சுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதை மாசுபடுத்திவந்த 65 தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாகவும் உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படாமல் உள்ளது என்ற மத்திய அமைச்சரின் கருத்தில் தங்களது துறைக்கு உடன்பாடு இல்லை என உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல அதிகாரி ராதேஷ்யாம் தெரிவித்தார்.
    .....தினமணி 30.08.2010

  5. #1577
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களுடன் தொலைபேசி சேவையை வழங்கி வருகிறது. வாட

    பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களுடன் தொலைபேசி சேவையை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை மென்மேலும் கவரும் வகையில் இலவச சிம்கார்டு கூப்பன்கள் விநியோகத்தை முகவர்கள் மூலம் துவக்கியுள்ளது.

    பொதுமக்கள் கூடுமிடங்களில் கூப்பன்களை விநியோகித்து வருகிறது. இலவச சிம்கார்டு பெற ஒரு புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய முகவரி சான்று, மாணவர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்றை BSNL முகவர் அல்லது கார்டு விற்பனையாளர்களிடம் கொடுத்து சிம்கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
    ...இந்நேரம்.காம்..31.08.2010

  6. #1578
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    விமானத்தில் ஒரு டிக்கட் 2 பேர் பயணம்.....

    மதுரை, ஆக.31 (டிஎன்எஸ்) ஒரு டிக்கட் கட்டணத்தில் 2 பேர் விமானத்தில் பயணம் செய்யலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை 'ஏர் இந்தியா' அறிவித்துள்ளது.

    மழைகாலத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ள சலுகைகள் விவரம் வருமாறு:-

    சாதாரண எகனாமி வகுப்பு கட்டணம் செலுத்தும் பயணிகள், எக்சிக்யூடிவ் வகுப்பில் பயணம் செய்யலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கை இல்லாதநிலையோ அல்லது மாற்று ஏற்பாடு செய்யும் சூழலோ ஏற்பட்டால், அவர்கள் எகனாமி வகுப்பில் தான் பயணம் செய்ய வேண்டும். இதனை காரணம் காட்டி, கட்டணத்தை திருப்பிதர கோரமுடியாது.

    மற்றொரு சலுகையாக, முழு எகனாமி வகுப்பு கட்டணம் செலுத்தும் பயணிகள் தங்களுடன் ஒருவரை எகனாமி வகுப்பில் அழைத்து செல்லலாம். அவர்களுக்கு எக்சிக்யூட்டிவ் வகுப்பு சலுகை வழங்கப்படாது. அதே போன்று முழு எக்சிக்யூட்டிவ் கட்டணம் செலுத்தும் பயணிகள் தங்களுடன் அதே வகுப்பில் ஒருவரை இலவசமாக அழைத்து செல்லலாம்.

    மற்றொரு சலுகையாக ரெயின்போ என்ற சூப்பர்சேவர் பேக்கை ஏர்இந்தியா அறிமுகம் செய்கிறது. இதன்படி ரூ.21 ஆயிரத்து 328க்கு 4 கூப்பன்கள் தரப்படும். அதை பயன்படுத்தி ஏர் இந்தியா/இந்தியன் ஏர்லைன்ஸ் என்று குறிப்பிட்ட அனைத்து விமானங்களிலும் பயணம் செய்து கொள்ளலாம். ஒருமுறை செல்ல ஒரு கூப்பன் கட்டணமாக வசூலிக்கப்படும்.

    ஆனால் தில்லியில் இருந்து திருவனந்தபுரம், கோவை, கோழிக்கோடு, கொச்சி செல்லும் விமானங்களுக்கு மட்டும் ஒரு கூப்பனுக்கு பதில் 2 கூப்பன்களை அளிக்க வேண்டும். இந்த சலுகையும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். மேலும் விவரங்களுக்கு 1800 180 1407 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஏர் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
    ...ஆறாம்திணை 31.08.2010

  7. #1579
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    இந்தியாவில் சர்வரை அமைக்க பிளாக்பெர்ரி ஒப்புதல்....

    இந்தியாவில் சர்வரை அமைக்கவும், தனது மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை ஆராயவும் ஒப்புக்கொண்டுதையடுத்து பிளாக்பெர்ரி செல்பேசி சேவை இந்தியாவில் தொடர்வதற்கு எதிரான முட்டுக்கட்டை நீங்கியது.

    கனடா நாட்டின் செல்பேசி நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம் பிளாக்பெர்ரி செல்பேசிகளை தயாரித்து, உயர் தொழில்நுடப் 3 ஜி சேவையை அளித்து வருகிறது. ஆனால் தனது சேல்பேசியைக் கொண்டு அனுப்பப்படும் மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை என்கிரிப்ட் செய்து அனுப்புவதால் அதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், அவைகளை ஆராய தங்களுக்கு தொழில் நுட்ப ரீதியான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தகவல் தொடர்பு அமைச்சகம் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது.

    இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனம், இந்தியாவில் சர்வரை வைக்கவும், தங்க்ளுடைய சேவைகளை ஆராய்ந்து பார்க்கவும் இந்திய அரசிற்கு தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்தித்தர ஒப்புக் கொண்டது.

    இந்த வசதிகள் அளிக்கப்பட்ட 60 நாட்களில் பிளாக்பெர்ரி சேவை தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்ந்து முடிவிற்கு வருவோம் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    ....வெப்துனியா 31.08.2010

  8. #1580
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சியில் நிரூபமா ராவ் ஆய்வு....

    கொழும்பு: இலங்கை வந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் இன்று தமிழர் தாயகத்திற்கு விஜயம் செய்தார்.

    4 நாள் பயணமாக நிரூபமா ராவ் நேற்று இலங்கை போய்ச் சேர்ந்தார். இன்று அவர் முதலில் வவுனியா சென்றார். பின்னர் கிளிநொச்சி, யாழ்ப்பாணத்திற்கும் சென்றார்.

    அங்கு நடைபெற்று வரும் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைளை கேட்டறிந்தார். நாளை அவர் முல்லைத்தீவுக்கும், திரிகோணமலைக்கும் செல்லவுள்ளார்.

    திரிகோணமலை பயணத்தின்போது பிள்ளையானை அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.

    தமிழர்களை மறுகுடியமர்த்தம் செய்வது, மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வது, மறு சீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை விரைந்து செய்து வருவதாக இலங்கை கூறி வருகிறது. ஆனால் இதில் பெரும் சுணக்கம் காணப்படுவதாக ஈழத் தமிழ் கட்சிகள், அமைப்புகள் கூறி வருகின்றன. இதில் உண்மை நிலையை கண்டறிவதற்காகவும், விரைவில் இலங்கை வரவுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் பயணம் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காகவும் நிரூபமா ராவ் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நாளை நிரூபமா ராவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கட்சித் தலைவர்கள் சந்திப்பார்கள் என அக்கூட்டமைப்பின் எம்.பியான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி ஒரு திட்டம் நிரூபமாவின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனால் நிரூபமா தமிழர் பிரதிநிதிகளை சந்திப்பாரா, மாட்டாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    ....தட்ஸ்தமிழ் 31.08.2010

  9. #1581
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    சுவிஸ் வங்கி ரகசிய பணம் மத்திய அரசு ஒப்பந்தம்....

    புதுடில்லி : இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் நேற்று கையெழுத்திட்டன. இதன் மூலம் சுவிஸ் வங்கிகளில் சட்ட விரோதமாக பணத்தை குவித்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசு பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர் மிச்சலின் கால்மி-ரேயும் கையெழுத்திட்டனர். இந்த மாற்றி அமைக்கப்பட்ட இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தால், பாரிசைச் சேர்ந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (ஓ.இ.சி.டி.,) விதிமுறைகளின்படி, சுவிஸ் வங்கிகளில் சட்ட விரோத பணத்தை குவித்துள்ள இந்தியர்களின் விவரங்களை மத்திய அரசு பெறலாம். சுவிட்சர்லாந்து அரசு ஏற்கனவே பல நாடுகளுடன் ஓ.இ.சி.டி., விதிமுறைகளின் படி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் வரி ஏய்ப்பாளர்களின் வங்கி கணக்கு விவரங்களைப் பெற முடியும்.
    ....தினமலர் 31.08.2010

  10. #1582
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    கிருஷ்ணகிரியில் இருந்து டெல்லி வரை பஸ் எரிப்பு வழக்கின் பின்னணி



    கோவை வேளாண் பல்கலை. மாணவிகள் 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தர்மபுரி இலக்கியம்பட்டி அருகில் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வந்த பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டதில், கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உடல் கருகி பலியாயினர். இந்த வழக்கு கோவை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. 31 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது 20 சாட்சிகள் பல்டி அடித்தனர். கோகிலவாணியின் தந்தை வீராசாமி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வழக்கை கோவை நீதிமன்றத்துக்கு மாற்றி, புதிதாக விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கோரினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், வழக்கை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். வழக்கில் சேலம் வழக்கறிஞர் சீனிவாசனை அரசு சிறப்பு வக்கீலாக நியமிக்க 2003ம் ஆண்டு அரசுக்கு பரிந்துரை செய்தார். ஆனால், வக்கீல் சீனிவாசனை அரசு நியமிக்காமல் காலம் தாழ்த்தியது. இதையடுத்து வீராசாமி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதன்பின், 2005ம் ஆண்டு வக்கீல் சீனிவாசனை தமிழக அரசு நியமித்தது.

    அதன்பின்பு வழக்கு விசாரணை தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணராஜா, கடந்த 2007 பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேருக்கு து£க்கு தண்டனையும், 25 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் வழங்கினார். இதை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை நீதிபதி முருகேசன் விசாரித்து, 2007ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தீர்ப்பு கூறினார். அப்போது, 3 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தார். 25 பேரின் 7 ஆண்டு சிறை தண்டனை, 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு கடந்த ஜூலையில் வழக்கு விசாரணை முடிந்தது. நீதிபதிகள் சிங்வி, சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பு கூறினர்.

    நீதி நிலைத்துவிட்டது காயத்ரி தந்தை பேட்டி



    தர்மபுரி பஸ் எரிப்பில் கொல்லப்பட்ட மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன், விருத்தாசலம் அரசு கலை கல்லூரி முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இப்போது கடலூரில் வசிக்கிறார்.


    உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து வெங்கடேசன் கூறியதாவது:


    உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.


    3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால், எங்களிடம் இருந்து அநியாயமாக பறிக்கப்பட்ட எங்கள் மகள் மீண்டும் கிடைக்க போவதில்லை. நாங்கள் சாகும் வரை எங்களுக்கு அந்த வலியும் சோகமும் இருக்கும். ஆனால், இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற ஈவு இரக்கமற்ற கொடூர செயல்கள் நடக்காமல் தடுக்கும். ஒன்றும் அறியாத அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும். அதற்கு அச்சாரமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. எதிர்காலத்தில் கொடூர சம்பவங்கள் நடக்காமல் தடுக்க என் மகள் மற்றும் இரு மாணவிகள் தங்களின் விலை மதிப்பில்லாத உயிர்களை தியாகம் செய்திருப்பதாக கருதி ஆறுதல் அடையலாம். தொடக்கத்தில் திசை மாறி சென்ற இந்த வழக்கை சரியான பாதைக்கு திருப்பி நீதியை காப்பாற்றிய நீதித் துறைக்கும் அதற்காக பாடுபட்ட தற்போதைய தமிழக அரசுக்கும் நன்றி. இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.


    8 நாள் நடந்தது விசாரணை




    தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் 8 நாட்கள் மட்டுமே விசாரணை நடந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24, 25, 26ம் தேதிகளிலும், டிசம்பர் 8, 9, 10ம் தேதிகளிலும், கடந்த ஜூலை 27, 28ம் ஆகிய தேதிகளிலும் விசாரணை நடந்தது.



    தமிழக சிறைகளில் தூக்கு தண்டனை கைதிகள் 13 பேர்


    தமிழக சிறைகளில் மொத்தம் 13 தூக்கு தண்டனை கைதிகள் உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் சிக்கி ஏற்கனவே 10 பேர் சிறைகளில் உள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக வேலூர் மத்திய சிறையில் 8 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு தடா நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனை 2000ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில், அரியலூர் மாவட்டத்தில் குழந்தையை கடத்திக் கொலை செய்த வழக்கில் சுந்தர்ராஜன் என்பவருக்கு உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. வேலூர் சிறையில் 8 பேரும், திருச்சி, மதுரை சிறையில் தலா ஒருவரும் உள்ளனர். இப்போது பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து தூக்கு தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.


    கோவை மத்திய சிறையில் இருந்த தூக்கு தண்டனை கைதி கோவிந்தசாமிக்கு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


    கருணை மனு செய்தால் நிராகரிக்க வேண்டும்



    பஸ் எரிப்பில் பலியான மாணவி ஹேமலதாவின் தாய் காசியம்மாள் நேற்று கூறியதாவது:

    என்னுடைய மகள் திரும்ப வரப்போவதில்லை. நீதியும் தாமதமாகவே கிடைத்துள்ளது. எனினும், இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் புரியும் எண்ணத்தை தடுக்கும். தூக்கு தண்டனை பெற்ற 3 பேர் கருணை மனு செய்தால், அதை அரசு பரிசீலிக்கவே கூடாது. பஸ்சில் அத்தனை மாணவிகளை பார்த்த பிறகும், அவர்களை உயிருடன் எரித்துக் கொல்ல நினைத்துள்ளனர். குற்றத்தின் பயங்கரத்தை கருத்தில் கொண்டு, கருணை மனுவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு காசியம்மாள் கூறினார்.

    தாமதமாக கிடைத்த நீதி கோகிலவாணி தந்தை பேட்டி

    தீர்ப்பு குறித்து நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையில் தனது மகன்களுடன் வசிக்கும் கோகிலவாணியின் தந்தை வீராசாமி (62) கூறியதாவது:<br>எதிர்பார்த்த தீர்ப்பு என்றாலும் மிகவும் தாமதமாக இந்த நீதி கிடைத்துள்ளது. இந்த வழக்கில் தைரியமாக வந்து சாட்சி சொன்ன கோவை வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், திறம்பட வாதாடிய வக்கீல்கள், நல்ல தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் என அனைவருமே பாரட்டுக்கு உரியவர்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பலர் பார்க்க நடந்த கொடூர சம்பவத்துக்கு தண்டனை 3 ஆண்டிலேயே கிடைத்திருக்க வேண்டும். இவ்வாறு வீராசாமி தெரிவித்தார். வீராசாமிக்கு விவேக், இளங்கோ என 2 மகன்கள். இதில் கோகிலவாணி இறந்ததால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு வேலை வழங்கியது. கோகிலவாணியின் சகோதரர் இளங்கோ மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    பஸ்சுக்கு தீ வைத்தது எப்படி?

    கோவை வேளாண் பல்கலை. மாணவ, மாணவிகள் 12 நாட்கள் கல்வி சுற்றுலாவாக கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி புறப்பட்டனர். 54 மாணவர்கள் ஒரு பஸ்சிலும், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அடங்கிய 50 பேர் இன்னொரு பஸ்சிலும் சென்றனர். பல இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையூர் ஆராய்ச்சி மையத்துக்கு வந்தனர். அங்கு ஆய்வை முடித்து விட்டு, பிப்ரவரி 2ம் தேதி கல்வி சுற்றுலாவை முடித்தனர்.<br>பின்னர் ஒகேனக்கல் செல்ல புறப்பட்டனர். மாணவிகள் இருந்த பஸ் முதலில் சென்றது. மாணவர்கள் பஸ் பின் தொடர்ந்தது. எல்லோரும் தர்மபுரியில் இறங்கி மதிய உணவை சாப்பிட்டனர். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தண்டனை வழங்கிய விவரம் வெளியானது.


    தகவல் அறிந்த மாணவர்கள் ஒகேனக்கல் செல்லும் திட்டத்தை ரத்து செய்து, அருகில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டனர். பஸ் பாரதிபுரம் அருகில் வந்தபோது, அங்கிருந்து சற்று தூரத்தில் உள்ள இலக்கியம்பட்டியில் மறியல் நடந்து கொண்டிருந்தது. இதனால் பாரதிபுரத்தில் மாணவிகள் வந்த பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்தினார். பஸ் நின்ற 3வது நிமிடத்தில், பைக்கில் வந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகியோர் பஸ்சின் குறுக்கே வண்டியை நிறுத்தினர். வண்டியை ஸ்டார்ட் செய்த நிலையில் முனியப்பன் வண்டியில் இருக்க, நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகியோர் 2 கேனில் கொண்டு வந்த பெட்ரோலை பஸ்சில் ஊற்றினர். இதை கண்டு பஸ்சில் இருந்த பேராசிரியைகள், டிரைவர் ஆகியோர் கதறினர். அதை இருவரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது ரவீந்திரன், பஸ்சோடு அனைவரையும் சேர்த்து கொளுத்து என்று கூற, திறந்திருந்த பஸ்சின் கதவை நெடுஞ்செழியன் மூடி, பஸ்சுக்கு தீ வைத்தார். பின்னர் 3 பேரும் பைக்கில் தப்பினர் என்று விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பஸ்சில் சிக்கிய மாணவிகளை பின்னால் பஸ்சில் வந்த மாணவர்கள் காப்பாற்றினர். அவர்கள் வராமல் இருந்திருந்தால் மாணவிகள் பலர் இறந்திருப்பார்கள் என்று அரசு சிறப்பு வக்கீல் சீனிவாசன் தெரிவித்தார்.

    ........தினகரன் 30.08.2010
    Last edited by nambi; 01-09-2010 at 06:03 AM.

  11. #1583
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    புதிய தலைமைச் செயலர் மாலதி......

    சென்னை, ஆக. 31: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.

    தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, மாலதி அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். மாலதி ஏற்கெனவே வகித்து வரும் விழிப்புப் பணி மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையாளர் பதவி அவரிடமே கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

    புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, பொறுப்புகளை மாலதியிடம் ஒப்படைத்தார் ஸ்ரீபதி.

    தஞ்சையைச் சேர்ந்தவர்: 1977-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்தவர் மாலதி. தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட அவர், 1954-ம் ஆண்டு பிறந்தார். தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்தவர்.

    எம்.எஸ்ஸி., விலங்கியல் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாலதி, பிரிட்டனில் நிதி குறித்த பட்டயப் படிப்பைப் படித்தார். திருச்சியில் உதவி ஆட்சியராக (பயிற்சி) தனது ஐ.ஏ.எஸ். பணியைத் தொடங்கினார்.
    ....தினமணி 01.09.2010

  12. #1584
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    இந்திய பாரம்பரிய விலங்காக யானை ..........

    இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ள நிலையில், யானையை இந்தியாவின் பாரம்பரிய விலங்கினமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது

    இந்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

    புலிகளைப் பாதுகாக்க தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு உள்ளதைப் போல, யானைகளைப் பாதுகாப்பதற்கும் தேசிய யானைகள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்றும், அதற்காக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

    யானைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, சுற்றுச்சூழல் நிபுணர் மகேஷ் ரங்கராஜன் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 12 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

    அந்தக் குழு நேற்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

    .....பிபிசி தமிழோசை

Page 132 of 232 FirstFirst ... 32 82 122 128 129 130 131 132 133 134 135 136 142 182 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •