குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் 26 ஜூன் அறிவிப்பு, எண்ணெய், எரிவாயுத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 20 ட்ரில்லியன் கன அடி எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். கண்டுபிடித்த கம்பெனியின் பெயர் குஜராட் ஸ்டேட் பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் (GSPC). கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஆந்திரக் கடலோரம் -- கிருஷ்ணா-கோதாவரி கடலில் கலக்கும் இடம். கடலோரத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர்களே தூரத்தில் இந்த எரிவாயுக் கிணறு தோண்டப்பட்டுள்ளது. கிணற்றின் ஆழம் இப்போதைக்கு 4995 மீட்டர்கள்.
எரிவாயுவில் 86% மீதேன். மற்ற கார்பன்களான C2, C3, & C4-ம் உள்ளன. கார்பன் டைஆக்ஸைடு 3% உள்ளது.
இப்போது தோண்டப்பட்டுள்ள கிணற்றிலிருந்து மட்டுமே ஒரு நாளைக்கு 50 மில்லியன் ட்ரில்லியன் கன அடி எரிவாயு எடுக்கமுடியும். இன்னும் பல கிணறுகள் தோண்ட வேண்டும்.
இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவுக்கு பெரிய வரப்பிரசாதம் என்பதில் ஐயமேதுமில்லை. இந்த ஆண்டிற்கான, உலக அளவில், கண்டுபிடிப்புகளில் இதுவே முதன்மை பெறும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த எரிவாயுவினால் பல மின்சார நிலையங்கள் துவங்கப்படலாம்; ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலமாக எரிவாயு விநியோகிக்கலாம்.
ஈரானிலிருந்து எரிவாயு இறக்குமதி வேண்டாம் என்று சொல்வது சற்றே அதிகப்பிரசங்கம். ஏனெனில் நமது பசி அவ்வளவு!
===கரிகாலன்
Bookmarks