நேசமுடன்..
மன்றம் மட்டில்லா வளர்ச்சியடைந்திருப்பது கண்டு பெருமகிழ்வு கொள்கிறேன்.
காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு மன்றம் புதுப் பொலிவுடன் இருக்கிறது.
அவ்வப்பொழுது இந்த மாற்றங்களைக் கண்டு ரசித்தாலும் என்னால் மன்றத்தில் பங்கேற்க முடியவில்லை.
இடைப்பட்ட காலத்தில், சில நல்ல புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாசித்துக் கொண்டிருந்தேன்.
எழுதுவது என்பது ஒரு வகை நிறைவைத் தந்ததென்றால் படிப்பது என்பது வேறு வகையில்
நிறைவைத் தந்தது. முதலில் படித்துக் கொண்டே எழுதிக் கொண்டிருந்தேன். பின் படிப்பதற்கு
முழு நேரம் ஒதுக்கியதில் எழுதுவது முடியாததாகிவிட்டது. இப்பொழுதுதான் எழுதுவதற்கும்
நேரம் அமைந்திருக்கிறது. பார்வைகளும் மாறியிருக்கின்றன. முன்பெல்லாம் ஆர்ப்பரிக்கும் அலைகள்
பிடித்ததென்றால் இப்பொழுது உள்வாங்கும் அலைகள் பிடிக்கின்றது. மழையின் வாசம் பிடித்திருந்தது.
இப்பொழுது அடிக்கும் வெய்யலின் சூடும் பிடிக்கிறது. மாறிக்கொண்டே இருத்தல் எனும் தத்துவத்தில்
மன்றமும் மாறிக் கொண்டே இருக்கிறது. இனி மன்றத்தில் என்னால் முடிந்த அளவு
பங்களிக்க முயல்கிறேன்.
என்றும் உங்கள்..
Bookmarks