காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி
சென்னை மே 16:& காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றது.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் மே 14 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் போட்டியிட்டன. இத்தொகுதிகளைக் கைப்பற்ற இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. இதனால் இத்தொகுதிகளில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
எந்தவித அசம்பாவிதமும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்த இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. ஆரம்பம் முதலே முன்னணி வகித்து வந்தது அ.தி.மு.க.. காலை 11.45 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் சுமார் 17000 வாக்குகள் வித்தியாசத்திலும், கும்மிடிப்பூண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு 27162 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
Bookmarks