Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 40

Thread: எனது ஆதர்ஷ ஆங்கில எழுத்தாளர் Donald E Westlake

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    எனது ஆதர்ஷ ஆங்கில எழுத்தாளர் Donald E Westlake

    பொதுவாக எனக்குத் தெரிந்த புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர்கள்

    சிட்னி ஷெல்டன்
    இர்விங் வாலஸ்

    இன்ன பிற....


    இவர்களைத் தாண்டி நான் படித்து ரசித்த மிகப் பெரும் எழுத்தாளர் டானல்ட் இ வெஸ்ட்லேக்.

    இவரைப் பற்றிய அறிமுகமும், இவரது எழுத்துக்களைப் பற்றிய என் விமர்சனமும் இங்கு தொடரும்.

    ஆமா யாராவது இவரது எழுத்துக்களைப் படித்துள்ளீர்களா?
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    இங்கே இந்தத் தலைப்பின் கீழ் தாங்கள் படித்த அந்நிய மொழி புத்தகங்கள் பற்றி எழுதலாமே.
    Last edited by Iniyan; 22-04-2005 at 03:08 PM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    நான் இவரது நாவல் ஒன்றினை கொஞ்சம் கொஞ்சமாக மொழி பெயர்க்கலாமா என யோசித்துக் கொண்டுள்ளேன். இதனால் காப்பி ரைட் பிரச்சனைகள் ஏதும் வருமா எனத் தெரியவில்லை.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    இனியன். நல்ல தொடக்கம். நானும் கொஞ்சம் ஆங்கிலத்தில் படிக்கிறவனே. நீங்கள் சொன்ன எழுத்தாளர்களை எனது நண்பர்கள் விரும்பிப் படிப்பார்கள். ஆனால் நான் படித்ததில்லை. என்னுடைய ரசனைகள் கொஞ்சம் வேறு மாதிரி.

    ருட்யார்ட் கிப்ளிங், ஆன் ரைஸ், ஜே.ஆர்.ஆர்.டோல்கியன், பெர்னார்ட் நைட், ஜே.கே.ரௌலிங் என்று வரிசை போகும். ஒரு மாதிரி கதம்பம்.

    கதைகளை மொழி பெயர்ப்பதில் எந்தப் பிரச்சனையும் வராது. ஆனால் அவற்றை வெளியிட வேண்டுமென்றால் கண்டிப்பாக உரிமை வாங்க வேண்டுமென்று நினைக்கிறேன். ரா.கி.ரங்கராஜன் நிறைய ஆங்கிலக் கதைகளை தமிழ்ப்படுத்தியிருக்கிறார். அவர் உரிமைகளை வாங்கினாரா என்று தெரியவில்லை. எதற்கும் நீங்கள் மின்னஞ்சல் மூலம் அந்த எழுத்தாளரைத் தொடர்பு கொள்ளுங்கள். மொழிபெயர்ப்பதனால் நமக்கு பெரிய லாபமோ ராயல்டியோ தமிழில் கிடைக்கப் போவதில்லை என்று சொல்லுங்கள். அவருடைய புகழைப் பரப்பும் ரசிகனின் முயற்சி என்று சொல்லுங்கள். என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    அன்புடன்,
    கோ.இராகவன்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் babu4780's Avatar
    Join Date
    17 Jan 2005
    Location
    Bangalore
    Posts
    374
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    1
    Uploads
    0
    சமீபத்தில் 'PAULO COELHO' எழுதிய புகழ் பெற்ற 'ALCHEMIST' நாவல் படித்தேன். ஆஹா அருமை. அதைப்படித்த பிறகு இவர் எழுதிய வேறு 2 நாவல்களையும் ("veronika decides to die" & "By the river Pedre I sat and wept" ) ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

    1. ALCHEMIST - following your dreams. ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன். அவனுக்கு வரும் ஒரு வித்தியாசமான் கனவைத் தொடர்ந்து ஏற்ப்படும் நிகழ்ச்சிகள். சாதாரான கதைதான், ஆனால் கதையினிடையில் வரும் கருத்துக்களும் அதைச்சொன்ன விதமும் கடைசியில் ஒரு மெகா twist உடன் கதையை முடிக்குபோதும் அருமை.

    2."VERONIKA DECIDES TO DIE - "வாழ்க்கையில் என்னதான் உள்ளது வழக்கமான மசாலாதானே அதே வேலை, அதே நண்பர்கள், அதே வீடு, அதே ஊர் அதே டிவி- . எனக்கு பிடிக்கவிலலை, நான் சாகப்போறேன்" என்று தற்கொலை செய்து கொள்ளப்போகிறாள் வெரோனிகா !!!!!. ஆனால் கடைசி நேரத்தில் காப்பாற்றப்படுகிறாள் கிட்டத்தட்ட இறந்த நிலையில்.
    இப்போது அவளுக்கு கொடுக்கப்பட்ட நேரம் வெறும் 7 நாட்கள்தான். ஆம் 7 நாட்களில் அவள் இறந்த்துவிடுவாள் என அவளைக்காப்பாற்றிய மருத்துவர் சொல்கிறார். ஆனால் அடுத்தடுத்து நடக்கும் சில நிகழ்ச்சிகளால் வெரோனிகாவுக்கு வாழக்கை மேல் ஆசை பிறக்கிறது. ஆனால் என்ன செய்வது ??
    இதிலும் கதையினிடையில் வரும் கருத்துக்களும் அதைச்சொன்ன விதமும் அருமை.

    3. "BY THE RIVER PEDRE I SAT AND WEPT" இது கொஞ்சம் 'spritual' யும் காதலையும் கலந்தது.

    இதில் ALCHEMIST கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று
    Last edited by babu4780; 25-04-2005 at 08:08 AM.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    முதலில் இராகவனுக்கும் நண்பர் பாபுவுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் புதிய சில ஆங்கில நாவலாசிரியர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு.

    ராகவன்,

    நண்பர் பாபு எழுதியுள்ளதைப் போல சின்ன சின்ன அறிமுகங்கள் கொடுக்கலாமே? அது நல்ல முயற்சியாகத் தெரிகிறது. நானும் செய்கிறேன்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    முதலில் அவரது கதா நாயகர்களில் ஒருவர் பற்றிய சின்ன அறிமுகம்.

    ஜான் டோர்ட்மண்டர். இவர் ஒரு ஆண்டி-ஹீரோ. (anti-hero வை தமிழ்ல எபப்டி சொல்றது?)

    இவரது பிரதான தொழில் கொள்ளை அடிப்பது. அதற்காக ராபின் ஹீட் ஸ்டைல் எல்லாம் கிடையாது. பெரிய அறிவு ஜீவுயும் கிடையாது. ஏதோ அவர் லெவலுக்கு திட்டம் போட்டு வட்டம் போடும் சின்ன லெவல் திருடன். இவர் ஒரு சின்ன கூட்டத்துக்கு கிட்டத்தட்ட தலைவர் மாதிரி. இவர் திட்டம் திட்டுவார். குழுவின் மற்ற மெம்பர்கள் கொடுக்கப்பட்ட வேலையை செய்வார்கள். முடிவில் கிடைத்ததை பகிர்ந்து கொள்வார்கள்.இவர் மாதிரி ஆளை நம்மூரு பக்கம் அதிர்ஷ்டக்கட்டை என்பார்கள். இவர் உப்பு விக்கப் போனால் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும். இவர் மாவு விக்கப் போனால் பெரும் புயல் காத்து அடிக்கும்.

    இவரின் சாகசங்கள் முழுக்க முழுக்க நம்ம அப்புசாமி சீதா பாட்டி கதைகள் மாதிரி தொடர்ந்து வருகின்றன. இதில் எனக்கு ரொம்ப பிடித்தது "Drowned Hopes".
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    இதோ "மூழ்கிய நம்பிக்கைக்கள்" கதைச் சுருக்கம்.

    வழக்கம் போல ஜான் டோர்ட்மண்டர் ஒரு விடிகாலையில் இன்னுமொரு தோல்வியடைந்த கொள்ளை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக போலீசில் சிக்காமல் அதே நேரம் வெறுங்கையுடன் வீடு திரும்புகிறார்.

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக வீடு திரும்பும் ஜானுக்காக காத்திருப்பது ஜானின் பழைய ஜெயில் செல்மேட். இந்த நபர் இனி வாழ்நாளில் ஜெயிலை விட்டே வெளியில் வரப் போவதில்லை என நினைத்திருக்க (ஆண்டவனை வேண்டி நம்பி இருக்க), ஆனால் இதோ இங்கே உயிருடன் சுதந்திரமாக வந்து ஜானின் வீட்டு சோபாவில் ஜானுக்காக காத்திருக்கிறார்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    ஆம். டிம் ஜான்சனுக்கு ஜானின் உதவி தேவை. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயிலுக்கு டிம் போக காரணமாய் இருந்த ஒரு பெரும் கொள்ளை முயற்சியில் அடித்த பணம் பெரும் தொகை. டிம்முடன் அந்தக் கொள்ளையில் ஈடுபட்ட மற்ற பார்ட்னர்கள் எல்லோரும் "ஏதோ" ஒரு விதத்தில் இல்லாமல் போய் விட இப்போது அந்தப் பணம் முழுக்க முழுக்க டிம்முக்கே சொந்தம். ஜெயிலுக்குப் போகும் முன் டிம் அந்தப் பணம் முழுதையும் நியூ யார்க் மாகாணத்தில் ஒரு சிறு பள்ளத்தாக்கில் உள்ள டவுனில் பத்திரமாகப் புதைத்து வைத்திருக்க அந்த ரகசியம் முபப்து வருடங்களாய் மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கிறது. அண்ணாச்சி டிம் சிறையில் இருக்கும் போது நியூ யார்க் மாகாணம் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் ஒரு நீர்த்தேக்கமாக்கி விட [நம்மூரு நர்மதா நதி பள்ளத்தாக்குல நடந்ததில்லையா? அது மாதிரி] இப்ப அந்த பணமெல்லாம் கலங்கலும் கொசப்பலுமா இருக்குற தண்ணிக்குள்ளாற ஆழத்துல.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    டிம்மோட ஐடியா - அந்த நீர்தேக்கத்தை வெடி வச்சி தகர்க்கிறது. அந்த நீர்த்தேக்கம் பக்கத்துல இருக்குற மத்த ஊரு மக்கள பத்தி கவலைப்படாம எல்லாத்தையும் வெள்ளத்துல மூழ்கடிக்கிறது. போலீஸ், அரசாங்கம் எல்லாம் வெள்ள நிவாரண வேலைல மும்பரமா இருக்கும் போது அண்ணாசி அவரோட ரிடர்மெண்ட் பணத்த எடுத்துகிட்டு விடு ஜீட். இந்த வெடி வைக்கிற வேலைக்கு ஜானோட உதவி டிம்முக்கு தேவை.

    இப்போ அந்த நீர்த்தேக்கம் பக்கத்துல இருக்க ஒரு சின்ன ஊரு முழுக்க அழிஞ்சி போகும் இந்த வெடி வெடிச்சா. அந்த ஊரு மக்கள் தொகை நெருக்கி 1000 பேர். டிம்முக்கு யாரைப் பத்தியும் எதைப் பத்தியும் கவலை இல்லை. அவருக்கு தேவை அவரோட பணம். அவ்ளோ தான்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    ஆனா ஜான் அப்படி இல்ல. என்னதான் திருடனா இருந்தாலும், அத்தன பேர் சாவ பாக்க மனசில்லாம ஜான் அதே பணத்த எடுக்க வேற திட்டம் போடலாம் என்கிறான். இதில் பிரச்சனை என்னவென்றால் ஜான் வெடி வைக்க உதவ மறுத்தாலும் சரி, இல்ல வேற திட்டம் போட மறுத்தாலும் சரி, டிம் வேற யாரையாவது கூட்டி கிட்டு போயி அந்த பணத்த எடுக்கப் போறது உறுதி. அதனால ஜான் டிம்முக்கு உதவியே ஆக வேண்டிய கட்டாயம்.

    ஜானோட கூட்டத்துல இருக்குற மத்த மக்களோட முதல் ஐடியா. ஒரு பெரிய லேசர் துப்பாக்கி வைச்சி அந்த நீர்த்தேக்கத்துல இருக்குற தண்ணிய எல்லாம் ஆவியாக்கி காலி பண்ணிட்டு அப்புறமா அந்த பணத்த எடுக்குறது. இது நடக்காத காரியம்னு படாதபாடு பட்டு எல்லோர் மனசையும் மாத்தி ஜான் வேற பிளான் போட்டு தோற்கிறார். திரும்ப வேற ஐடியா. அதே தோல்வி. வேற வேற ஐடியாக்கள். அதுக்கு நடவுல டிம்முக்கு பொறுமை போய் வெடி வைக்க திட்டம்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    அடடே! இங்கே கதையே குடுக்குறீங்க. நல்ல அறிமுகம். தொடருங்க.

    அன்புடன்,
    கோ.இராகவன்

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •